உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களை நியமித்தது கமிஷன்

எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களை நியமித்தது கமிஷன்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க, மத்திய அரசு அதிகாரிகளை பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் நியமித்து உள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிகாரிகள் நியமனம்

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு, மத்திய கூட்டுறவு அமைச்சக இணை செயலர் ராமன் குமார், எஸ்.ஐ.ஆர்., பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை செயலர் குல்தீப் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு, இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் நீரஜ் கர்வால்; புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி... விருதுநகர், ராமநாத புரம், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு, மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இணை செயலர் விஜய் நெஹ்ரா ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு

இவர்கள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பர். தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாக செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவர். வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த யாரும் விடுபடக்கூடாது; தகுதியற்ற யாரும் சேர்க்கப்படக்கூடாது என்ற அடிப்படை கொள்கை பின்பற்றப்படுவதையும் உறுதி செய்வர் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

54,616 பேரை தேடுகின்றனர்

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தமிழகத்தில், 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் நேற்று வரை, 6 கோடியே 40 லட்சத்து 59,971 பேருக்கு, எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட, 6 கோடியே 36 லட்சத்து 44,938 படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 54,616 பேர் இன்னும் எஸ்.ஐ.ஆர்., படிவம் பெறவில்லை. அவர்களை ஓட்டுச் சாவடி அலுவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K S Sankaranarayanan
டிச 09, 2025 12:44

மொபைல் எண் பல காரணங்களால் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதுபற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லையே! அந்த விண்ணப்பங்கள் நிலையென்ன?


சி சொர்ணரதி
டிச 09, 2025 11:50

என் அக்கா மகனுக்கு இன்னும் விண்ணப்பம் வரவில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலரின் மொபைல் எண்ணிற்கு அழைத்தால் எடுப்பதில்லை.வீட்டில் வந்து விண்ணப்பம் தரவில்லை.


GMM
டிச 09, 2025 08:50

6,41,14587 வாக்காளர்கள். பூர்த்தி செய்யப்பட்ட 6, 36, 44,938 படிவங்கள் உள்ளூர் விவரம் கொண்டவை. ஆன்லைன் பதிவேற்றம் பின் இறந்த, இடம்பெயர்ந்த, இரட்டை பதிவு விவரம் தெரிய வருமா ? அல்லது ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஸ்டாலின் ஒரு வாக்கு சாவடியை கைப்பற்றினால் ஒரு தொகுதி கைப்பற்றியதற்கு சமம் என்று கூறியுள்ளார்? மாநில கட்டுப்பாடு இல்லாத கண்காணிப்பு, தணிக்கை குழு அவசியம்.


Krishna
டிச 09, 2025 08:45

Enumeration Forms Illegally Given to DMK Booth Agents Are Not Given by them to Listed Voters for Vested Deletions of NonDMK Voters. Arrest them


மோகனசுந்தரம்
டிச 09, 2025 07:32

வாழ்த்துக்கள் அர்ச்சனா பட்நாயக் அவர்களே. வேறு பார்வையாளர்களாக நியமித்து உள்ளவர்கள் மிகவும் பாராட்ட வேண்டியவர்கள்.


சுதா
டிச 09, 2025 07:06

எப்படி இறந்தவர்களின் படிவம், வீடு மாறி அல்லது வேறு இடங்களுக்கு சென்றவர்களுக்கு வினியோகம் செய்திருக்க முடியும். தேர்தல் ஆணையம் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். எங்களுடைய தெருவில் 10 வருடங்கள் முன்பே காலி செய்தவர்களின் படிவம் கொடுக்கபட்டுள்ளது.


KOVAIKARAN
டிச 09, 2025 07:01

எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களை கமிஷன் நியமித்தது மிகவும் நல்ல செயல்.


K V Ramadoss
டிச 09, 2025 06:02

ஒய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்... அவர்களையும் மேற்பார்வையிட அழைத்தால் அவர்களும் சந்தோஷமாக வந்து உதவி புரிவார்கள்..


புதிய வீடியோ