| ADDED : பிப் 17, 2024 12:38 AM
வேலுார் மாவட்டம், அணைக்கட்டில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், 514 பயனாளிகளுக்கு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டு உள்ளது.அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக்கூறி, உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதை பலர் தவறாக பயன்படுத்தினர். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் ஒரு இடத்தில், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தடுப்பணை மட்டும் கட்டப்பட்டது. கால்வாய் இணைப்புக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் நிதியே ஒதுக்காமல், இரண்டு இடத்தில் 'டெண்டர்' விட்டுச் சென்றனர். நாங்கள், தற்போது நிதி ஒதுக்கி, அதை செயல்படுத்தி வருகிறோம்.- துரைமுருகன்,நீர்வளத்துறை அமைச்சர்