உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலியே பயிரை மேய்ந்தது: குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

வேலியே பயிரை மேய்ந்தது: குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: பெள்ளாச்சியில் மன நலம் பாதித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் பணம் மற்றும் நகையை கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ், எஸ்.ஐ., நவநீதகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.கோவை மாவட்டம், சோமனுாரைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த், 22, மனநலம் பாதித்தவர். மூன்று மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி, முல்லை நகரில் உள்ள, 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். காப்பகத்தில் இருந்த வருண்காந்த், யாருடைய பேச்சையும் கேட்காமல் முரண்டு பிடித்த நிலையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடித்து கொலை செய்யப்பட்ட அவரது சடலம், தமிழக -- கேரள எல்லையான நடுப்புணி, பி.நாகூரில் காப்பக உரிமையாளரின் தோட்டத்தில் இருந்து, தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காப்பக நிர்வாகிகளான கிரிராம், கவிதா, லட்சுமணன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கம்பத்தில் கட்டி வைத்து அரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடி தூவியும், பச்சை மிளகாயை வாயில் திணித்தும், கொடூரமாக தாக்கியது தெரியவந்துள்ளது.இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் மற்றும் நகை கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குற்றவாளிகள் வீட்டை சோதனையிட்ட போது அங்கிருந்த பணம் மற்றும் நகையை பதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், மகாலிங்கபுரம் போலீஸ் எஸ்.ஐ., நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
ஜூன் 01, 2025 06:41

இதெல்லாம் வேலி அல்ல. களைகள்.


Anantharaman Srinivasan
மே 31, 2025 23:36

என்னத புதுசா பண்ணிட்டான். காலங்காலமா போலீஸ்துறையில் நடப்பது தானே. ரகசியமா வாங்க தெரியல. மாட்டிக்கிட்டான். எத்தனை லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தானோ. பின் எப்படி தேத்துவது.


panneer selvam
மே 31, 2025 22:13

It is the usual scene at every police stations in Tamilnadu especially in accident cases


Padmasridharan
மே 31, 2025 22:10

மன்னிக்கணும் அய்யா. தலைப்பை மாத்திக்கோங்கோ, "வேலிகளே.." ன்னு. இவங்ககிட்ட சட்டத்த ஒப்படைச்சதனால அந்த காக்கி சட்டை, பூட்ஸ் போட்டுக்கிட்டு ஒவ்வொருத்தரா ஏமாத்தி இவங்க பாக்கெட் மற்றும் மொபைலுக்கு எவ்வளவு பணம் தினமும் போகுதுன்னு தெரியுமா. . குறைந்த பட்சம் 3000௹ பொருட்கள் புடிங்கி பணத்தை பேரம் பேசறாங்க. இது மட்டுமில்லாம இவங்க வண்டியில உட்கார வெச்சி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லைகளும். தர்றாங்க .இவங்க பண்றதெல்லாம் இவங்க குடும்ப வம்சத்துக்கு கர்மா பலன்கள்.


Kumar Sankar
மே 31, 2025 21:43

இவனை போன்றவர்கள் உடனே ஜாமினில் வர முடியாதபடி ஆயுள் முழுக்க kazhi திங்க seyyanum


rama adhavan
மே 31, 2025 21:37

காவல் வேலி பயிரை மேய்வது இப்போது சர்வ சாதாரணம்.


ராமகிருஷ்ணன்
மே 31, 2025 21:07

விடியல் அரசின் போலீஸ் சாதனை பட்டியலில் வர வேண்டிய சாதனை அப்பேற்பட்ட விடியல் அரசின் ஆட்சியில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்று பெருமை பட்டுக்கொள்ளுங்கள்


Ramesh Sargam
மே 31, 2025 20:50

அடுத்து அந்த எஸ்.ஐ. மீது என்ன நடவடிக்கை இருக்கும்? அநேகமாக திமுகவில் உறுப்பினர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.


Raghavan
மே 31, 2025 20:50

24 மணிநேரமும் பனி செய்து விட்டு வீட்டுக்கு சென்றால் வீட்டுக்கார அம்மா என்னையா இன்றைக்கு எவ்வளவு தேத்தின என்று கேட்பார்கள். அவனவன் மாதாமாதம் 50 ஆயிரம் 60 ஆயிரம் கோடி என்று சம்பாதிக்கிறான் நீ என்னடாயென்றால் ஒரு ஒரு லக்ஷம் இரண்டு லக்ஷம்மாவது மாதாமாதம் சம்பாதிக்கவேண்டாமா என்று மூளை சலவை செய்வதால்தான் இதுபோல குற்றங்கள் நடக்கிறது.


ganesh ganesh
மே 31, 2025 20:46

Charged corrupted person is hindu. You should feel of shame of this corruped things. No pooja will not spare you from karma. What you did to others the same will be repet to you or your family.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை