உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது; அண்ணாமலை குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது; அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: 'தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=asdv17jz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது அந்தந்த பகுதி போலீசாருக்கு தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே.உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதல்வர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது. தமிழகம் தற்போது, 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க.,வின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் தி.மு.க., முதல்வர் தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழக அரசியலில் புதிய விந்தை. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா? இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

venugopal s
பிப் 15, 2025 21:36

கவலைப்படாதீர்கள் அண்ணாமலை அவர்களே, தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தான் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க போர்பன் விஸ்கிக்கு இறக்குமதி வரியை குறைத்து விட்டாரே!


Kasimani Baskaran
பிப் 15, 2025 18:12

திராவிட மாடல் அல்ல. கிரிமினல் ஆதரவு மாடல்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 14:41

இன்னிக்கு அண்ணாமலை யின் கூவல். நாளை காடேஸ்வரா. அடுத்தது கவர்னர் என்று வரிசையில் வந்து கூவ வேண்டும். ஒருத்தருக்கு ஒரு பாயிண்ட் தான்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 14:39

தினம் ஒரு காமெடி. சூப்பர்


raja
பிப் 15, 2025 14:07

இந்த ஆட்சி திராவிட = கொலை கொள்ளை கற்பழிப்பு கடத்தல் மாடல் ஆட்சி என்று முதல்வர் பெருமித பட்டு கொள்ளலாம்...


Barakat Ali
பிப் 15, 2025 13:29

மத்திய உள்துறை குறைந்த பட்சம் விளக்கமாவது கேட்கலாம் .....


Svs Yaadum oore
பிப் 15, 2025 12:54

இங்குள்ள சீரழிவை கேட்டால் அதுக்கு பதில் சொல்ல வக்கில்லை .....வடக்கனை பார்க்கனுமாம் ...வடக்கன் மாநிலங்களில் நீண்ட நெடுங்காலம் காங்கிரஸ் ஆண்டபோது அங்கெல்லாம் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடியது ....இப்பொது ப ஜா க ஆளும்போது பாலும் தேனும் மொத்தமாக நின்றுவிட்டது ....அப்பறம் எதுக்கு வடக்கன் காங்கிரெஸ் ஹிந்திக்காரன் வருங்கால பாரத பிரதமர் என்று அறிவிப்பு?? ....அப்ப மட்டும் மத சார்பின்மையாக இங்குள்ள மதம் மாற்றிகளுக்கு இனிக்குமா ??....


Sakthi
பிப் 15, 2025 12:43

அட கொத்தடிமை, அங்க ல்லாம் அந்தந்த மாநிலம நிர்வாகம் பாத்துக்கணும். இங்க உங்களோட துருபிடிச்ச இரும்பு கரம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு


அசோகன்
பிப் 15, 2025 12:41

மிக சரியான கருத்தை அண்ணாமலை கூறியுள்ளார்...... தமிழ் மக்களுக்கு புரியுமா?...... இல்லை ஒரு பாட்டில் சாராயம் பிரியாணி கையில் 2000 ரூபாய் போதும் என இருப்பார்களா.


Ramesh Sargam
பிப் 15, 2025 12:28

ஆறாக ஓடும் கள்ளசாராயத்தை தேக்கி வைக்க தமிழக அரசு பல டாஸ்மாக் அணைகளை கட்டும்.


முக்கிய வீடியோ