உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளாவை போல் தமிழக அரசும் ஏற்கணும்

கேரளாவை போல் தமிழக அரசும் ஏற்கணும்

'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தை ஏற்பதாக, கேரள கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த திட்டமானது, அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை பெருக்கும். தனியார் பள்ளியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கும் கிடைக்கும். இந்த உண்மையை உணர்ந்து, இத்திட்டத்தில் இணைகிறது, கேரள அரசு. பல ஆண்டுகளாக, கடைப்பிடித்த வறட்டு பிடிவாதத்தை கைவிட்டு, அடுத்த தலைமுறையின் பழிச்சொல்லுக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சத்தில், கேரள அரசு சம்மதித்து இருக்கிறது. அதே வறட்டு பிடிவாதத்துடன் இருந்து வரும், தி.மு.க., அரசும், தமிழகத்தின் அடுத்த தலைமுறையை வஞ்சிக்கும் விதமான மத்திய அரசின் எதிர்ப்பை கைவிட வேண்டும். கேரளாவை போலவே, 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தை ஏற்க முன்வர வேண்டும். - நாராயணன் திருப்பதி தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VENKATASUBRAMANIAN
அக் 23, 2025 09:52

அப்புறம் எப்படி அரசியல் செய்ய முடியும். இதுதான் திராவிட மாடல்


KOVAIKARAN
அக் 23, 2025 08:56

திமுக மனசாட்சி கூறுவது: அதெல்லாம் முடியாது. நாங்கள் கேரளா அரசியல்வாதிகளைப் போல ஏமாந்த சோணகிரிகள் அல்ல. அவர்களைப்போல எங்களுக்கத்தான் மக்கள் நல்வாழ்விலோ, அல்லது மாணவர் படிப்பிலோ அக்கறை கிடையாதே. தேசிய நீரோட்டத்தில் இணைந்தால், நாங்கள் ஹிந்தியை வைத்து அரசியல் செய்ய முடியாதே. அப்படி இருந்தால் எங்கள் குடும்பமும், எங்கள் கட்சிக்காரர்களும் ஊழல் பணத்தில் ஆரம்பித்த பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்க முடியாதே. அதனால் பொது மக்களிடமிருந்து மேலும் கொள்ளை அடிக்க முடியாதே என்று எண்ணுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை