உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மத அடிப்படையில் ஓட்டு சேகரிக்கின்றனர்

 மத அடிப்படையில் ஓட்டு சேகரிக்கின்றனர்

ஜாதி, மத மோதல் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் பேசக்கூடாது; மத வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள், சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை கட்டுப்படுத்துவதில்லை. அரசியல் கட்சிகள் ஏன் இப்தார் விருந்து நடத்த வேண்டும்? 'நாங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்கு பாதுகாவலர்கள். எங்களுக்கு ஓட்டு போடுங்கள்' என பேசி, மத அடிப்படையில் ஓட்டு சேகரிக்கின்றனர். இஸ்லாமிய ஜமாத்துகள், மசூதிகளில் தொழுகை முடிந்து வருவோரிடம், அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கின்றன. கிறிஸ்துவ சபைகள், சர்ச்சுகளில், 'இந்த கட்சியை ஆதரிக்க வேண்டும், அந்த கட்சியை தோற்கடிக்க வேண்டும்' என பிரார்த்தனை கூட்டங்களில் பேசுகின்றனர். இவற்றுக்கெல்லாம், உடனடியாக தடை விதிக்க வேண்டும். - அர்ஜுன் சம்பத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை