மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டு விட்டனர்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பாடத்தை கற்றுக்கொடுக்க, மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, 'வாட்ஸாப்'பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா. அண்டை மாநிலமான கேரளாவில், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பாடத்திட்டம், தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் வெறும் வாய்ப்பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றும் இல்லை. உங்கள் மகன் மட்டும் மும்மொழி கற்கலாம். ஆனால், ஏழை எளியோரின் பிள்ளைகள் மும்மொழி கற்கக்கூடாது என்று தடுக்கிறீர்களே; என்ன நியாயம் இது?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.