உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: திருமாவளவன் புது விளக்கம்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: திருமாவளவன் புது விளக்கம்

சென்னை: ''பார் கவுன்சில் தேர்தலுக்காக, உயர் நீதிமன்ற வளாகத்தில், என்னை வைத்து நடந்த விவகாரத்தை பெரிதாக்கி விட்டனர்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.சென்னை வி.சி., சார்பில், 'அரசமைப்பு சட்ட பாதுகாப்பும் உச்ச நீதிமன்றமும்' என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கு நடந்தது. இதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணி நலனுக்காக பேசுகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தலித் மக்களுக்கு எதிராக, என்னை கொண்டு போய் நிறுத்துகின்றனர். நான் தலித்துகளுக்கு ஆதரவாக பேசவில்லை. தி.மு.க.,வுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்கின்றனர். நான் பேசும் அரசியலை விமர்சிக்கிறபோது, நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும். ஈ.வெ.ராம சாமியை கன்னடன் என்றால், நாளை அம்பேத்கரை மராத்தி என்று சொல்ல எவ்வளவு நாட்கள் ஆகும். அவர்கள் இருவரும் வேண்டாம் என்றால், சமத்துவத்திற்கான எந்த அரசியலை நான் பேச முடியும். பாபர் மசூதி இருந்த இடத்தில், ஹிந்து கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. அவற்றை உச்ச நீதி மன்றமும் கூறியுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த விவகாரத்தில், அந்த தம்பி என்ன ஜாதி, மதம் என தெரியாது. அவரது முகத்திலும் எழுதவில்லை. வழக்கறிஞரை தாக்கியதாக பல குரல் எழுகிறது. நான் மட்டும் வழக்கறிஞர் இல்லையா? ஒரு கட்சியின் தலைவரை வழிமறித்து நிற்கிறார். அவரின் பாதுகாப்பு என்ன என்று யாரேனும் கேள்வி எழுப்பினரா; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதலை யாராவது பேசினரா? அவருக்கு ஆதரவாக தீர்மானம் போடவோ, அச்சம்பவத்தை கண்டிக்கவோ ஆளே இல்லை. என்னை வைத்து உயர் நீதிமன்றத்தில் நடந்தது, பா.ஜ.,-ஆர்.எஸ்.எஸ்., திட்டமிட்ட சதி. என் பாதுகாப்பு குறித்து முதலிலேயே கேள்வி எழுப்பி இருந்தால், இவை எங்களுக்கு எதிராக திரும்பி இருக்காது. விரைவில், பார் கவுன்சில் தேர்தல் வர உள்ளதால், இவற்றை பெரிதாக்கி விட்டனர். குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக, திருமாவளவனை முன்னிறுத்த முயற்சிக்கின்றனர். இவற்றை மக்கள் புரிதலுக்காக கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Santhanakrishnan
அக் 28, 2025 20:47

தவறு செய்வது மனித இயல்பு. தவறு செய்பவனை மன்னிப்பதும் தவறு செய்பவன் மன்னிப்பு கேட்பாதுவே உயர்ந்த மனித குணம். திருமா பின்னால் ஒரு கூட்டம் செல்லும்போது கார் முன்பு 4 தொண்டர்கள் பியலட் போல சென்று இருந்தால் இந்த வழக்கு இருந்து இருக்குமா


Krishna
அக் 27, 2025 22:42

திருமா, உங்களுக்கு ஆதரவா உங்க கூட்டணி கட்சிகளே பேசவில்லை. திமுக வாய் முடி மௌனியாக உள்ளது. முதலில் உங்களது பாதுகாப்பு என்ன குறை வந்து விட்டது. உங்கள் கட்சியினரை அடக்க பாருங்கள். அவர் வழி மறித்து நின்றால், உங்களுடன் வந்த போலீசார் கேட்டு இருப்பார்கள், அதைவிட்டு, உங்கள் குண்டர் படை ஏன் அவரை தாக்கிற்று? நீதிமன்றத்தில் உங்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.


நரேந்திர பாரதி
அக் 27, 2025 16:47

ஈ.வெ.ராம சாமியை கன்னடன் என்றால், நாளை அம்பேத்கரை மராத்தி என்று சொல்ல எவ்வளவு நாட்கள் ஆகும். அவர்கள் இருவரும் வேண்டாம் என்றால், சமத்துவத்திற்கான எந்த அரசியலை நான் பேச முடியும்.


C.SRIRAM
அக் 25, 2025 16:48

பதவி பறிக்கப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்படவேண்டும்


Cheran Perumal
அக் 25, 2025 15:11

பேசாமல் அரசியலை விட்டு மாரி செல்வராஜுக்கு கதை எழுதப்போகலாம்.


Siva Kumar
அக் 24, 2025 20:53

மூடிக்கிட்டு போங்க.ஒவ்வொரு நாளும் ஒன்னு ஒண்ணா சொல்றீங்க. உம்மை அரசியலை விட்டு அடியோட ஒழிக்கணும்.


R.KANNIYAPPAN
அக் 24, 2025 11:02

கதை வசனம் நன்றாக உள்ளது திருமா, MGM தெரியுமா அங்கே வேலை நிறுத்தம் செய்து 20 லட்சம் பெற்றுக் கொண்டு உங்கள் சாதி இளைஞர்களை அம்போ என்று விட்டே. களே


Chandru
அக் 24, 2025 10:42

எப்படி இவர போன்ற ஆட்கள் எல்லாம் இப்புவியில்... ?


தமிழன்
அக் 24, 2025 07:51

சம்பந்தமே இல்லாமல் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவில் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது என பொய்யை விட்டுள்ளான். எதற்கு இந்த பொய் என்று தெரியவில்லை.


K V Ramadoss
அக் 24, 2025 09:43

பொய்யன் வாயில் வேறு என்ன வரும் ?


Krishna
அக் 27, 2025 22:50

கதையை திசை திருப்பத்தான். சம்பந்தா சம்பந்தமில்லாம ஏதாவது வாய்க்கு வந்ததை சொல்ல வேண்டியது. அப்புறம், என் ஜாதியை பற்றி அவதூறாக பேசுகிறார்கள் என்று கதை விடுவது. இது வழக்கமான பாணிதான்.


theruvasagan
அக் 23, 2025 16:03

இவர் ரேஞ்சுக்கு எனக்கெதிராக சிஐஏ சதின்னு பேசியிருந்தா இந்தியா முழுக்க பேசப்படும் மிகமிக பரப்பரப்பான செய்தியாக உலா வந்திருக்கும். மிஸ் பணணிட்டாரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை