திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே: மாநாட்டு தீர்மானம்
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் ஹிந்து முன்னணி பொதுச் செயலர் கிஷோர் குமார், ஆறு தீர்மானங்களை வாசித்தார்.இதன் விபரம்:1கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீது, மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்2பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு3குன்றம் குமரனுக்கே சொந்தம் என, முருகன் மலைகளை காக்க வேண்டும்4தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து, ஹிந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும்5ஒவ்வொரு தேர்தலிலும் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்து, ஹிந்துக்களின் ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டும் 6ஒவ்வொரு சஷ்டி தினத்தன்றும், கந்த சஷ்டி கவசத்தை மக்கள் ஒன்றுசேர்ந்து பாட வேண்டும்.