உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் இறங்கிய திருவனந்தபுரம் விமானங்கள்

மதுரையில் இறங்கிய திருவனந்தபுரம் விமானங்கள்

அவனியாபுரம் : பெங்களூருவில் இருந்து இண்டிகோ ஏர் பஸ் விமானம் நேற்று 172 பயணிகளுடன் திருவனந்தபுரம் சென்றது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் எரியாததால் அந்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது.இந்த விமானத்தில் மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் பயணம் செய்தார். அதேபோல மும்பையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விமானமும் இத்தகவலை அறிந்து மதுரையில் தரையிறக்கப்பட்டது.இரு விமானங்களில் இருந்த பயணிகள் மதுரை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஓடுபாதை மின்விளக்குகள் சரி செய்யப்பட்டபின்பு பெங்களூரு விமானம் 40 நிமிடங்கள் தாமதமாகவும், மும்பை விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் பயணிகளுடன் சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ