உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி

இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி

சென்னை: 'மொழி அரசியல் செய்யக்கூடாது. இது தவறானது. தமிழகத்தின் கொள்கையை மாற்ற சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் பார்லிமென்டில் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில், வரும் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கிறது. அப்போது தமிழக அரசுக்கு தொகுதி குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த அச்சத்தை போக்க மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் படி, மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு தொகுதி அடிப்படையில் லோக்சபா தொகுதி அதிகரிக்கப்படும் என்று ஒரு செய்தி இருக்கிறது. இந்த செய்தி இன்னும் உறுதியாக இல்லை. இது ஒரு தவறான போக்கு. தமிழகத்தின் உரிமைகளை இழக்க கூடாது. இந்தியாவின் கொள்கை மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்பது தான். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பா.ம.க., பங்கேற்கும். புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு நிதி கொடுப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி வருகிறார். இது ஒரு தவறான போக்கு. எந்த மாநிலத்திலும் மத்திய கொள்கையை திணிக்க கூடாது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் ஏற்பதும், மறுப்பதும் மாநில அரசு உரிமை. நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த கூடாது. தமிழகத்தில் 60 ஆண்டுகளாக இருமொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம், ஆனால் திணிக்கக் கூடாது. மொழி அரசியல் செய்யக்கூடாது. இது தவறானது. தமிழகத்தின் கொள்கையை மாற்ற சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது. தமிழுக்காக தி.மு.க., என்ன செய்துள்ளது? நீங்கள் மொழிப்போர் வைத்து தான் ஆட்சிக்கு வந்தீர்கள். நீங்கள் அரசு பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். கல்வியை வியாபாரம் ஆக்கியது தி.மு.க.,தான். இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
பிப் 26, 2025 22:56

இதென்னடா கலிகாலம்! நண்டு சிண்டெல்லாம் கூவுது


vbs manian
பிப் 26, 2025 15:12

ஹிந்தி திணிப்பு என்று கூவும் கூட்டம் ஹிந்தி மொழி உள்ள நூறு இருநூறு ஐநூறு நோட்டுக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதை நிறுத்துமா.


maan
பிப் 26, 2025 14:16

அயோக்கியத்தனம். 2004 ல் மத்திய சுகாதாரத்துறை மந்திரியானவுடன் தன் பெண்களுக்கு டெல்லி ஸ்கூலில் அட்மிஷன் வாங்க செய்த அலப்பறை மறந்து விட்டதா?


மோகனசுந்தரம் லண்டன்
பிப் 26, 2025 13:08

இவன் ஒரு மடியில் கட்டின ஓனான். யார் பெட்டி கொடுப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறான்.


Ramesh Sargam
பிப் 26, 2025 12:33

அன்புமணி இன்னும் திமுகவை பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லை. திமுக செய்யும் எல்லா செயல்களுமே தவறான செயல்கள்தான்.


S.V.Srinivasan
பிப் 26, 2025 12:19

அரசியலை பொறுத்த வரை படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். அன்பு மணி பேரன், பேத்திகள் தமிழில் மட்டும்தான் படிக்கிறார்களா. ஆங்கிலம், ஹிந்தி படிப்பதில்லையா? அவர்கள் பேரன், பேத்தி மீது சத்யம் செய்து சொல்ல சொல்லுங்கள். மூன்றாவது மொழியாக மாணவர்கள் விருப்பப்பட்ட மொழியை தேர்ந்தெடுக்கலாம் என்றுதான் மத்திய அரசு கூறுகிறதே தவிர ஹிந்தியை திணிக்கவில்லை. டாக்டருக்கு படித்த அன்பு மணிக்கு இது புரியவில்லையா அல்லது புரியாதது போல் அரசியல் செய்கிறாரா? அல்லது 2026க்கு தி மு க கூட்டணிக்கு துண்டு போடுகிறாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை