உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாகிஸ்தானில் எந்த பகுதியையும் துல்லியமாக தாக்க முடியும்; இந்திய ராணுவ அதிகாரி

பாகிஸ்தானில் எந்த பகுதியையும் துல்லியமாக தாக்க முடியும்; இந்திய ராணுவ அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : '' பாகிஸ்தானில் எந்த பகுதியையும் துல்லியமாக சென்று தாக்கும் திறன் இந்திய ராணுவத்துக்கு உண்டு,'' என ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, அவர்களின் மதத்தை கேட்டு கொன்றது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் குறிவைத்து இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் நுாற்றுக் கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vn1qmcy4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிறகு, இந்திய நிலைகள் மற்றும் அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதனை நடுவானிலையே நமது ராணுவம் தாக்கி அழித்தது.இதனையடுத்து இந்திய ராணுவம் அந்நாட்டின் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், நிலைகுலைந்து போன பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து, போர் நிறுத்தம் அமலானது.இந்நிலையில், ராணுவத்தின் வான் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவன் டிகுன்ஹா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க தேவையான தளவாடங்கள் இந்தியாவிடம கைவசமாக உள்ளன. ஒட்டு மொத்த பாகிஸ்தானும், இந்தியாவின் தாக்குதல் 'ரேஞ்சில்' தான் உள்ளது. பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்க முடியும்.பாகிஸ்தானின் எந்த இடத்தையும் துல்லியமாக தாக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உண்டு. ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைகத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றினாலும் ஒழிவதற்கு குழிகளை தேட வேண்டியிருக்கும்.சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் 800 முதல் ஆயிரம் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது. ஆனால், அவற்றை பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன. ஆளில்லாத விமானங்களில் வெடிமருந்துகள் இருந்தது. பொது மக்கள் மற்றும் ராணுவ முகாம்கள் மீது அவற்றிற்கு குறியாக இருந்தன. ஆனால், அவற்றால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம். சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

J.Isaac
மே 21, 2025 13:53

ஆனால் இன்னும் அப்பாவிகளை கொன்ற அந்த பாவிகளை பிடிக்க முடியவில்ல்யே


M Ramachandran
மே 20, 2025 22:25

அது மாதிரி சீனாவை நொறுக்க இயலுமா. பாகிஸ்தான்னை விட வஞ்சக எண்ணம் உடையவன். வெகு மேச மான திருட்டு எண்ணமுடைய த்ரோகி மனித குல விரோதி


essemm
மே 20, 2025 19:13

பாகிஸ்தானுக்கு அழிவு நெருங்கிவிட்டது. பக்கிகளுக்கு இப்பொழுது உள்ளது மோடி அரசு என்று தெரியவில்லை போலும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில நீங்க அட்டூழியம் பண்ணுனீங்க ஆனா அவங்க ஓட்டுபிச்சைக்கு பயந்து உங்களை நோக்கி சுட வில்லை. இப்பொழுது உள்ளது மோடி ஆட்சி. பலம் பொருந்திய ராணுவத்தை மெருகேற்றி வைத்துள்ளதை மறந்துவிடாதீங்க . அதோடு. உலக வரை படத்தில். பாகிஸ்தானை தேடினாலும் கிடைக்காது. இது சிங்கம்டா சிங்களா தான் வரும். உங்களை போன்றவர்கள் தான் கூட்டமா அருவருக்கும் விதத்தில வருவீங்க. இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் உங்க நாட்டின் மீது வெகுண்டு எழுந்தாலே போதும் பாக்கிஸ்தான் காணாமல் போய்விடும். புரிஞ்சுக்கோங்க.


Apposthalan samlin
மே 20, 2025 16:56

நாம் ஐந்து விமானங்களை இழந்து உள்ளோமா ? ரபில் 2 ஜெட் விமாணம் 3 வீழ்த்தியது ஜே10 chinese cnn நியூஸ் அரபு நியூஸ் வெளி நாட்டு ஊடகம் எல்லாம் சொன்னது .தளபதியிடம் கேட்கும் பொழுது சிறிய இழப்பு என்று சொன்னார் இதில் உண்மை என்ன ? ஏன் மக்களுக்கு சொல்லவில்லை ராகுல் காந்தி கூட கேள்வி எழுப்பினார் பதில் இல்லை .உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டியது தானே


Arunkumar,Ramnad
மே 20, 2025 17:52

ராகுல்காந்தியும் உன்னைப் போல வெளிநாட்டு கை கூலிதான் வித்தியாசம் என்னவென்றால் நீ அப்பத்துக்கு மதம் மாறிய அப்போஸ்தலம் ராகுல்காந்தி ....


ஆரூர் ரங்
மே 20, 2025 20:05

அரபு துருக்கி சீன ஊடகங்களின் செய்திகளும் தீயமுக பதிவுகளும் ஒன்றாகவே இருக்கின்றனவே. உள்குத்து நாடகம்?. நம் ராணுவத்தினர் கூறுவதை நம்பாமல் அன்னிய எதிரி ஊடகங்களை நம்புவது நாட்டுக்குத் எதிரான மனநிலை.


Pandi Muni
மே 20, 2025 20:45

மூர்க்க முல்லா பசங்களும், பாவாடைகளும் முரசொலி படிப்பதும் சன் செய்தி கேட்பதுமாக காலத்தை கடத்தி மூடர்களானது தான் மிச்சம்...


B Sivanesan
மே 20, 2025 16:26

"பாகிஸ்தானின் எந்த மூளையையும் தாக்க முடியும்." பாகிஸ்தானில் மூளை இருப்பதாக தினமலர் நம்புகிறதா ?


சமீபத்திய செய்தி