வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவங்களும் நிர்ணயிக்க மாட்டாங்க மீட்டர் இல்லாத ஆட்டோ பிடிக்கமாட்டாங்க பேசாம ஓலா போல அரசே ஒரு ஆப் அமைக்கலாம் அதில் இணையாமல் ஆட்டோ ஓட்டக்கூடாது என்று சட்டம் போடலாம்
அப்படின்னா... யூபர் , ஓலா, ராபிடோ போன்ற ஆட்டோ சங்கங்கள் என்ன கட்டணத்தை வசூலிக்கிறார்கள். அவர்கள் இஷ்டத்துக்கு மாத்துகிறார்கள் ..காலை ஒரு கட்டணம். மதியம் ஒரு கட்டணம் இரவு ஒரு கட்டணம்...
ஆட்டோகளில் ஜிபிஎஸ் உள்ள மின்னணு மீட்டர்களை அரசே தனது செலவில் நிறுவ வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை பத்தாண்டுகளுக்கு மேல் நிறைவேற்றாமல் விட்டுவிட்டு, இப்போ ஓட்டுநர் சங்கங்கள் தாமாகவே நிர்ணயித்ததை அரசு எதிர்ப்பது திராவிஷ மாடல் நாடகம்.
எதாவது ஒரு கட்சி அவர்களின் தேர்தல் அறிக்கையில் இந்த ஆட்டோ காரர்களின் கூட்டத்தை அடக்கவும், கட்டணத்தை சீரமைக்கவும் வாக்குறுதி கொடுத்தால் அவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும்
எனது 68 வருட வாழ்க்கையில், சென்னையில் இதுவரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் ஆன் செய்துபார்த்ததில்லை . ஆட்டோ என்று கூப்பிட்ட உடனே, மீட்டருக்கு மேல் இவ்வளவு தரமுடியுமா என்றுதான் கேட்பார்கள் தவிர, மீட்டரை ஆன் செய்து அதன்படி கட்டணம் வசூலித்து இதுநாள் வரையில் நான் பார்த்தது இல்லை. இதில் கட்டண உயர்வாம்..? பல ஆட்டோக்களில் அந்த மீட்டர் ஒரு மஞ்சள் துணியால் மறைத்து கட்டப்பட்டிருக்கும்.
விவசாயி காய்கறிக்கு விலை நிர்ணயிக்க முடியாது, தொழிலாளி கூலி உயர்வு கேட்கக்கூடாது, ஏழை நீதி கேட்க முடியாது, இளைத்தவன் அரசை தட்டி கேட்கக்கூடாது.... இது என்ன அரசாங்கமா இல்லை இடி அமீன் ஆட்சியா??