உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி

செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இலங்கையைச் சேர்ந்த, 'ஸ்லிட் நார்தன் யுனி' நிறுவனமும், தமிழகத்தைச் சேர்ந்த, 'ஸ்பேஸ் கிட்ஸ்' நிறுவனமும் இணைந்து, செயற்கைக்கோள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளன.'ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா' நிறுவனர் ஸ்ரீமதிகேசன் கூறியதாவது:கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரான பத்மநாபனின், 'ஸ்லிட் நார்தன் யுனி' நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஒத்துழைப்புடன், அந்நாட்டு மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை கற்பிக்கும் பணியை ஏற்றுள்ளோம்.இதற்காக, இலங்கையில் படிக்கும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வாகும் 50 மாணவர்களுக்கு, நார்தன் யுனி நிறுவனம் நிதியுதவி செய்ய உள்ளது.இந்த பயிற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் பங்கேற்பர். மேலும், செயற்கைக்கோளை ஏவுதல், தயாரித்தலுக்கான நேரடி பயிற்சியில், இலங்கை கல்லுாரிகளைச் சேர்ந்த 30 மாணவர்களும் பங்கேற்பர்.அவர்களுக்கு விண்வெளி ஆய்வு, அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஆய்வு செய்யும் வகையிலான செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் செயற்கைக்கோள், இஸ்ரோவுடன் இணைந்து விண்ணில் நிலைநிறுத்தப்படும்.இதனால், இருநாட்டு மாணவர்களின் கல்வி, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு சார்ந்த அறிவு மேம்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balaji Radhakrishnan
அக் 04, 2024 14:02

இதற்க்கு மத்திய அரசு தடை செய்ய வேண்டும். ஏற்கனவே இலங்கை அரசு கடற்ப்படை வைத்து மீனவர்களை தாக்கி கைது செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவிற்க்கு ஆபத்து ஏற்படலாம்.


Nandakumar
அக் 04, 2024 07:57

போதும் பூமியில் குப்பை போட்டது. வானத்தையும் விடாதீங்க. நீங்களும் உங்க ஆராய்ச்சியும். தேவையில்லாத குப்பைகள். பூமியில் மனிதர்கள் வாழ்ந்தால் போதும்.


Saai Sundharamurthy AVK
அக் 04, 2024 07:28

இந்திய மாணவர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் நாட்டுப்பற்றுடன் செயல்பட முடியும். வெளிநாட்டுக்கு சென்று பயிற்சி பெற்ற மாணவர்கள் நமது இஸ்ரோவை தான் நாடுவார்கள். எந்த நம்பிக்கையில் இஸ்ரோ இவர்களை வைத்துக் கொள்ளும் என்பது கேள்வி. ஒருவேளை ஸ்லீப்பர் செல்களாக மாறியிருந்தால் !!!! இது அடுத்த கேள்வி. ஏனெனில், தற்போதைய சூழலில் பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் எதிரி நாட்டு அமைப்புகள் இந்தியாவை குறி வைத்து செயல்படுகின்றன என்பது குறிப்பிட்டத்தக்கது.


Saai Sundharamurthy AVK
அக் 04, 2024 07:05

இன்று செயற்கைக்கோள் பயிற்சி என்று சொல்லிக் கொடுத்து நாளை ராக்கெட் ஏவும் தொழில் பயிற்சியை சொல்லி கொடுக்க சொல்லுவார்கள். அதற்கடுத்து ஏவுகணை தொழில் நுட்பபயிற்சி பெறுவதற்கு முனைப்புடன் செயற்படுவார்கள். இந்தியா உஷாராக இருக்க வேண்டும். பாகிஸ்தான் ஏன் காங்கிரஸ்ஸை ஆதரிக்கிறது என்றால் அவர்களை வைத்து தான் அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை திருடினார்கள். இப்போது மட்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் ராக்கெட், ஏவுகணை போன்ற தொழில்நுட்பத்தையும் திருடியிருப்பார்கள். காங்கிரஸ் கட்சி இந்தியாவை நாசமாக்கவும், தங்கள் சம்பாதிக்கவும் நம்பி நாராயணன் போன்று நமது விஞ்ஞானிகளை மிரட்டி , அடித்து , துன்புறுத்தி அவர்களை பலிகடாவாக்கி, பாகிஸ்தானை உலகில் தொழில்நுட்பத்தில் உயர்ந்த நாடாக மாற்றியமைப்பார்கள். ராகுலும், சோனியாவும் இந்தியாவுக்கு துரோகம் செய்ய அவ்வளவு வெறியாக இருப்பவர்கள். பங்களாதேஷ் நாட்டுக்கு கூட எல்லா தொழில்நுட்பங்களையும் ஏற்றுமதி செய்து விடுவார்கள்.


Subramanian
அக் 04, 2024 06:07

வாழ்த்துகள்