மாநிலம் கடந்த கோரிக்கை
மத்திய அமைச்சர் முருகன், தே.மு.தி.க., உடன் பேச்சு நடத்துகிறார். இருந்தபோதும், அக்கட்சி கோரிக்கை மேல் கோரிக்கை வைக்கிறது. அக்கட்சியின் கோரிக்கைகளை மாநில அளவில் நிறைவேற்ற முடியாது. அதனால், பேச்சு இழுபறியாக செல்கிறது. இருந்தபோதும், பேச்சு சாதகமாக முடியும் என நம்புகிறோம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் சட்டசபைத் தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை கண்டு தி.மு.க., அமைச்சர்கள் பதறுகின்றனர். தோல்வி பயத்தில் அவர்களுக்கு வயிறு எரிகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க., தலைவர் விஜய்க்கு 'புரட்சி தளபதி' பட்டம் கொடுத்துள்ளார். அவர் இவ்வளவு மோசமான நிலைக்கு இறங்குவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.- திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,