உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானை தாக்கி 2 பெண்கள் பலி

யானை தாக்கி 2 பெண்கள் பலி

கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி 2 பேரை அடித்து கொன்றது. இதனால் இப்பகுதிக்கு வனத்துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் பலியான குடும்பத்தினர்கள் இரண்டு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, அன்னியாளத்தை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி வசந்தா, 37. கிராம பணியாளர்; விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை வசந்தாவை விரட்டி சென்று துாக்கி வீசி தாக்கியது. இதில் படுகாயமடைந்த வசந்தா, சம்பவ இடத்திலேயே பலியானார்.அன்னியாளம் வழியாக தாசரப்பள்ளி கிராமத்திற்கு சென்ற ஒற்றை யானை, அப்பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி அஸ்வத்தம்மா, 45, என்பவரை தாக்கி கொன்றது. மேலும், அப்பகுதியில் இரு மாடுகளை தாக்கியது. படுகாயமடைந்த மாடுகள் உயிருக்கு போராடி வருகின்றன. அடுத்தடுத்து இரு பெண்கள் யானை தாக்கி பலியானதால், கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். நுாற்றுக்கணக்கான மக்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் திரண்டனர். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ராஜேந்திரன்
பிப் 18, 2024 10:16

போக்சோ ல புடிச்சு உள்ளே தள்ளணும்.


Espionage
பிப் 19, 2024 02:17

????????????


ஆரூர் ரங்
பிப் 18, 2024 10:08

மழை பொய்த்ததால் காடுகளில் உணவு நீர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு யானைகள் ஊருக்குள் வரத் துவங்கியுள்ளன. யானைகள் பெருக்கமும் காரணமாயிருக்கலாம்..வனத்துறையனர் உடனடியாக தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக காடுகளுக்கு மிக அருகே விவசாயம் செய்வதைத் தடுக்கத் தயங்குகின்றனர்.


Ramesh Sargam
பிப் 18, 2024 09:20

மிகவும் வேதனை அடைந்தேன். ஆமாம், யானை தாக்கினால் போலீசார் யானை மீது எப்படி வழக்கு பதிவு செய்யமுடியும்? இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஏதாவது உதவி செய்யவேண்டும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ