உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; சாமியை தரிசிக்காமல் திரும்பிய பக்தர்கள்

 சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; சாமியை தரிசிக்காமல் திரும்பிய பக்தர்கள்

சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசும், தேவசம் போர்டு நிர்வாகமும் தடுமாறுகிறது. பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுவதால் பெரும் சிரமப் படுகின்றனர். சேலத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சபரிமலை வர முடியாமல் பந்தளத்தில் தங்கள் பயணத்தை முடித்துள்ளனர். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று முன் தினம் காலை துவங்கியது. இதற்காக நவ.,16 மாலை நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே நவ., மாதத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு நிறைவு பெற்றது. தற்போது டிச.,10 வரையிலும் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினமே, பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய திட்டமிடல்கள் இல்லாததால், எருமேலியில் இருந்து சென்ற பக்தர்கள் சன்னிதானம் வர முடியாமல், பாதி வழியில் நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து, நிலக்கல்லிலும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. பம்பையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலை நேற்றும் நீடித்தது. எட்டு மணி நேரம் வரிசையில் நிற்கும் பகுதியில் தண்ணீர் இல்லை, உணவு இல்லை என, பக்தர்கள் குமுறுகின்றனர். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசும், தேவசம் போர்டும் பக்தர்கள் குறித்து கவலைப்படவில்லை; பக்தர்கள் செலுத்தும் காணிக்கை வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கின்றனர். எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. வாகனங்களை, பக்தர்களை ஒழுங்குப்படுத்த போதிய போலீசார் இல்லை' என, பக்தர்கள் குற்றம்சாட்டினர். தமிழகத்தில், சேலத்தில் இருந்து மூன்று பஸ்களில் வந்த பக்தர்கள், பம்பையில் இருந்து சன்னிதானம் வர முடியாமல், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், பந்தளத்துக்கு சென்று அங்குள்ள கோவிலில் தங்கள் பயணத்தை முடித்து ஊர் திரும்பினர். இதுபோல ஏராளமான பக்தர்கள் ஊர் திரும்புவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதுகுறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.ஜெயக்குமார் கூறியதாவது: பம்பையில் பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பம்பையில் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நிலக்கல்லில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும். மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை, 20 கியூ காம்ப்ளக்ஸ்கள் உள்ளன. இங்கு பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி செய்யப்பட்டு, அங்கு தண்ணீர், பிஸ்கட் வழங்கப்படும். குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்குவதில் 200 ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்பாட் புக்கிங் செய்வதற்காக பம்பையில் அதிக பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்துவதற்கு, நிலக்கல்லில் உடனடியாக ஏழு கவுன்டர்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சபரிமலையில் நவ.,16- மாலை 5:00 மணி முதல் நேற்று மதியம், 12:00 மணிவரை, ஒரு லட்சத்து 96,594 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் அமைச்சருக்கு மனமில்லை வழக்கமாக சீசன் துவங்க ஒரு மாதம் முன், தேவசம்போர்டு அமைச்சர் உள்ளிட்ட பல்துறை அமைச்சர்கள், பம்பையில் கூடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஏற்பாடுகளை முடுக்கி விடுவது வழக்கம். இந்த ஆண்டு அதுபோன்ற முன்னேற்பாடு கூட்டம் ஏதும் நடைபெறவில்லை. கார்த்திகை முதல் தேதி நடை திறந்த போது, தேவசம்போர்டு அமைச்சர் சன்னிதானம் வந்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, ஆலோசனைகளை வழங்குவார். இந்தாண்டு, மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சர் வாசவன் சன்னிதானத்துக்கு வரவில்லை. அவர் தரிசனம் செய்யாவிட்டாலும், பக்தர்களுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வந்திருக்க வேண்டும். தேவசம்போர்டின் பதவி காலம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நவ.,15ல் நிறைவு பெறுகிறது. இதனால், இந்தாண்டு பதவி விலகி செல்லும் தலைவர், உறுப்பினர்கள், சீசன் முன்னேற்பாடுகளில் போதிய கவனம் செலுத்தவில்லை. புதிதாக பொறுப்பு ஏற்பவர்களுக்கு, இரண்டு நாட்களுக்குள் நடை திறக்கும் போது, இங்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் எந்த திட்டமிடலும் இருக்காது. இந்தாண்டு குழப்பத்திற்கு இதுவும் காரணம். மத்திய படை என்னாச்சு? மண்டல, மகர விளக்கு சீசனில் மத்திய அதிவிரைவு படை போலீசாரும், தேசிய பேரிடர் நிவாரண படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால் நேற்று வரை இவர்கள் வரவில்லை. கேரள அரசு தரப்பில் இருந்து கடிதம் தாமதமாக சென்றதாலும், பீஹார் தேர்தல் மற்றும் டில்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாலும் வருவது தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M Ramachandran
நவ 19, 2025 15:14

முன்பு போல் கடுமையான விரதங்களை கடை பிடிப்பதில்லை. மலைக்கு போவதை ஒரு ப்பேஷானாக செய்வதால் பல விபரீதங்க்கள். 50 வருடத்திற்கு முன்பு ஒரு ஒரு சாமி அவருக்கு வயது 60 அவருடைய அம்மா வயது 90 வையும் அழைத்து வந்தார். முறைப்படி மாலையிட்டு விரதமும் கடைய பிடித்து வந்தார். நாங்கள் எரிமேலியிலிருந்து பெரு வழி பாதையில் செல்ல முனைத்திருந்தோம். எங்கள் குருசாமி நடக்க சிரம படுபவர்கள் பம்பைய் வரையில் நம் பஸ்ஸில் பயணித்து அங்கு தங்குங்கள். நாங்கள் பம்பை வந்தவுடன் எங்களுட ன் சேர்ந்துகொள்ளலாம் என்று கூறினார். அந்த 60 வயது சாமி தன தாயாரை பஸ்ஸில் வரும்படி கூறினார். உடனேயே நீ யாரு என்னை கூற நீயும் ஐயப்ப சாமி நானும் ஐயப்ப சாமி குருசாமி கூட வரார் நான் நடந்து தான் வருவேன் என்றார். பிறகு பெரு வழி பாதையில் எஙகளுடன் நடந்து தான் வந்தார். எங்கள் பல முறையை பயனங் களி ல் யானையை நேரிடையாக சில அடி தூராங் கிளில் பார்த்திருக்கிறோம். அதுவும் கரி மலை யில் இரவு தங்கினால் உத்தரவாதம் இல்லை. அங்கு தங்குகையில் இரவு உணவிற்கு சமயல் செய்ய வேண்டியிருக்கும். உடன் பெரிய அலுமினிய பாத்திரங்களை எடுத்து செல்வோம். சமையல் முடித்து அன்னதானம் செய்த நடந்த அந்த களைப்பு மற்றும் உடன் உண்ட களைப்பு சேர்ந்து தூங்கி விடுவோமாம் யாராவது சாமி காவல் காக்க வேண்டும். அது கரி மலை. யானைகளின் இருப்பிடம். நாக தூங்கிய உடன் யானை போன்றோர் அலல்து இரண்டு மூன்றோ அந்த சமயல் செய்த சாம்பல் வாசனைக்கு வந்து விடம். முதலில் குறி அலுமினிய பாத்திரங்க்கள் பத்திரங்க்கள் தட்டுகளாகி விடும். பிறகு சத்தம் கேட்டு முழித்து கொண்டிருக்கும் சாமி கூக்குரல் கொடுக்க எல்லோரும் சரணம் கூப்பிட இருக்கும் பாத்திரனைகளில் சப்தம் எழுப்பா யானியர்கள் இறங்கி விடும். முன்பெல்லாம் இப்போது உள்ள மாதிரி மின் விளக்குகள் கிடையாது. இப்போது காவல் துறையும் ரோந்து வரும். அக்களித்தில் வசதி எதுவும் கிடையாது. அதனால் விரதம் கடுமையாக கடை பிடிப்பார்கள். அதற்க்கு முன்பு இன்னும் 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் கடுமை. பேஸ் கேம்பில் விரதம் இருப்பவர்கள் நடை திறப்பதற்கு முன்னர் அந்த ஐயப்பன் கோயில் நம்பூதிரி அவர் ஐயப்பனை தியானித்து விரல் காட்டுவர் அவர்கள் மட்டும் அவருடன் பெருவழியில் கோயிலுக்கு செல்லாம். மற்றவர்கள் திரும்பிவிட வேண்டும். அடுத்த வருடம் ஐயப்பன் மனம் வைத்தால் செல்லலாம்.


SUBBU,MADURAI
நவ 19, 2025 14:10

Every year Sabarimala arrangements get worse, but this year was a new low: No drinking water for devotees No cleanliness filth everywhere Live electric cables lying on the floor KSEB work right in the middle of pilgrim movement 15 hour queues For Communists, temples are ATM machines. First they looted temple gold and now they cant even provide water, cleanliness or basic safety.


திகழ் ஓவியன், AJAX ONTARIO
நவ 19, 2025 12:49

இவனுங்க ஓட்டு கொள்ளை பற்றி வியாக்கியானம் பேசுவானுங்க


திகழ்ஓவியன்
நவ 19, 2025 12:36

நான் கனடாவில் இருந்துவந்த 20 ஆம் தேதி virtual Q போக உள்ளோம் , சாமியே சரணம் அய்யப்பா


சந்திரன்
நவ 19, 2025 07:29

உங்கள் கருத்துகள் மெய்சிலிர்க்கிறது அப்படியே மெக்காவுக்கும் மசூதிக்கும் சர்ச்சுக்கும் போகாம வீட்ல இருந்தே ...சொல்லிட்டீங்கன்னா புண்ணியமா போகும்


Ramesh Sargam
நவ 19, 2025 07:28

சன்னிதானம் வருடம் முழுவதும் திறந்திருந்தால் இந்த கூட்டம் நெரிசல் பிரச்சினை இருக்காது என்று பலர் கருதலாம். திருப்பதி கோவில் வருடம் முழுவதும் திறந்திருக்கிறது. அங்கே கூட்டம் நெரிசல் இல்லை. அங்கே அங்குள்ள அதிகாரிகள் திறமையாக கூட்டத்தை சமாளிக்கிறார்கள். அந்த அளவுக்கு பிரச்சினை எதுவும் அங்கு இருப்பதில்லை. அதேபோல திறமையாக வரும் கூட்டத்தை சமாளித்தால், சன்னிதானத்திலும் இந்த கூட நெரிசல் பிரச்சினையை தவிர்க்கலாம். மேலும் திருவண்ணாமலை, பழனி போன்ற மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் கூட அங்குள்ள அதிகாரிகள் திருப்பதி நிர்வாகிகள் போல திறம்பட செயல்பட்டால் அங்கெல்லாம் கூட இந்த கூட்ட நெரிசல் பிரச்சினை இருக்காது.


Ganesan
நவ 19, 2025 12:52

நண்பர் எப்பொழுதாவது திருப்பதி சென்று தரிசனம் செய்திருப்பாரோ என்று சந்தேகிக்கப்படுகிறது


கரீம் பாய், ஆம்பூர்
நவ 19, 2025 07:06

இங்கே திராவிட மண் அங்கே கம்மி கள் மண். இவனுகளுக்கு மாறி மாறி ஓட்டுப் போட்டு இப்போ மண்ணா போகலாம் போல. 70 வருஷமாக அடி பட்டும் திருந்தாத ஜென்மங்கள்


Shan
நவ 19, 2025 06:55

கம்மி சர்க்காருக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் உறுப்பினர்களுக்கும் சன்னிதானத்தில் உள்ள தங்கத்தை கொள்ளை அடிக்கவே நேரம் போதவில்லை இதில் பக்தர்களாவது ஆவது. இந்த கூட்டு கொள்ளையை விசாரிக்க நீதிமன்றம் சார்பாக விசாரணை நடைபெறும் நிலையில் வாடிக்கல் ராமகிருஷ்ணன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் வெளிவந்த பினராயி யால் இந்த 100 க்கணக்கான கிலோ தங்க கொள்ளையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் போது இந்த அரசு பக்தர்களை பற்றியா கவலை படும். பக்தர்கள் யாரும் தயவு செய்து சன்னிதானத்தில் காசோ, தங்கமோ தராதீர்கள் உண்டியலில் பணம் போடாதீர்கள். அது பினராயி கூட்டத்தால் கொள்ளைபோகும்.


அப்பாவி
நவ 19, 2025 06:24

இதுக்கு போகாமலேயே இருந்திருக்கலாம். யாருக்கு என்ன கஷ்டமோ தெரியலியே. இப்பிடி கோவில் கோவிலா மொய்க்கிறாங்க.


NALAM VIRUMBI
நவ 19, 2025 05:32

கோவிலுக்குச் சென்று தான் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதில்லை. இருக்கும் இடத்தில் இருந்தே பரம்பொருளை அனுபவிக்க வேண்டும். தேவை மன ஏக்கத்துடன் கூடிய ஜபம் மற்றும் தியானம். இதைத்தான் நம் நாட்டில் தோன்றிய ஞானிகளும் ரிஷிகளும் முனிவர்களும் யோகிகளும் அவதார புருஷர்களும் வலியுறுத்துகின்றனர். பக்தர்கள் இதைச் செய்வார்களா? அரசும் தேவஸ்தானமும் கண்டுகொள்ளாத போது ஏன் செல்ல வேண்டும்? சிந்திக்கமாட்டீர்களா மனிதர்கள்?


Ramesh Sargam
நவ 19, 2025 08:34

கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவது அமைதி, மகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் மற்றும் இறைவனுடனான ஆன்மீக தொடர்பைப் பெறுவதற்காகும். இது மன அமைதியையும், நல்வாழ்வையும் மேம்படுத்தவும், புண்ணியத்தைப் பெருக்கவும், வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறவும் உதவுகிறது.


Narasimman Lakshminarasimhan
நவ 19, 2025 13:32

நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், நாம் ஞானிகளோ யோகிகளோ இல்லை. நம்மால் ஒரு சில மணி துளிகளோ சில மணி நேரங்களோ தொடர்ச்சியாக கடவுளை பற்றி சிந்தனைகளில் ஜெபத்தில் இருக்க முடியவில்லை. அதனால் இது போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்கிறோம். கல்வி எங்கிருந்து வேண்டுமானாலும் கற்கலாம் என்றால் பள்ளிகள் எதற்கு? கம்ப்யூட்டரில் வேலை பார்க்கலாம், ஆபீஸ் எதற்கு? எங்கு வேண்டுமானாலும் தூங்கலாம் படுக்கை அறை எதற்கு கட்டில் எதற்கு.


முக்கிய வீடியோ