உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்

தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்

வேலூர்: தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற காரணத்தினால், விஜய்க்கு வெளியே வர பயம் என அமைச்சர் துரைமுருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.வேலூரில் நிருபர்கள் சந்திப்பில், கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wu8ddxnm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 நிருபர்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ அழைப்பில் ஆறுதல் கூறி இருக்கிறார்? துரைமுருகன் பதில்: தான் குற்றம் புரியவில்லை என்றால், தைரியமாக விஜய் தன் தோழர்களோடு துயர சம்பவம் ஏற்பட்ட வீடுகளுக்கு போயிருக்க முடியும். தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற காரணத்தினால், அவருக்கு வெளியே வர பயம். எனவே வீடியோ காலில் பேசுகிறார்.நிருபர்: கச்சத்தீவு தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருக்கிறாரே?இதற்கு, 'அவருக்கு ஒன்றும் தெரியாது, யாரோ சொல்லிக் கொடுத்து, இவர் பேசி வருகிறார்' என துரைமுருகன் பதில் அளித்து விட்டு, சிறிது நேரம் சிரித்த பிறகு காரில் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Ramesh Sargam
அக் 08, 2025 02:06

திருட்டு திமுகவினருக்கு நெஞ்சே கிடையாது. ஆகையால் சூடு தெரியாது. ஆகையால் அவர்கள் தில்லாக வெளியே வருகிறார்கள்.


aaruthirumalai
அக் 07, 2025 23:41

உங்க கட்சியில யாருக்காவது இருக்கா இருக்கா


Vasan
அக் 07, 2025 23:25

திரு. துரைமுருகன் அவர்களை அரசு விழாவில் ஓரங்கட்டுவது கண்டனத்துக்குரியது. சமீபத்தில் நடந்த திரு இளையராஜாவிற்கான தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், திரு ரஜினிகாந்த் அவர்கள் திரு இளையராஜாவை 1/2 பாட்டில் பீர் அருந்திய நிகழ்வை நினைவு கூர்ந்து பாராட்டும் பொழுது, அனைவரும் அத்தருணத்தை கண்டு களிக்கும் போது, திரு துரைமுருகனை தேடாத கண்கள் இல்லை, ஆனால் அவரோ ரெட் ஜெயன்ட்ஸ் குழும தலைவர், திரு இன்பநிதிக்கும் அப்பால் அமர்ந்திருந்தார்.


T.sthivinayagam
அக் 07, 2025 21:24

இறைவன் தந்த எச்சரிக்கை கரூர் சம்பவம் இதை புரிந்து விஜய் நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.


R.MURALIKRISHNAN
அக் 07, 2025 21:05

இந்தா வர்ற ஒன்று ரெண்டு ஒட்டையும் திமுகவுக்கு வராம பண்ண துரை கிளம்பிட்டாரில்ல.ஓ.... திமுகவில் ஓரம் கட்டிய கோபம்.


sankaranarayanan
அக் 07, 2025 20:48

நெஞ்சே இல்லாதவர்கள் கூறும் கூற்று இது இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அருகதை யாருக்குமே இல்லை நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள் கூறும் கூற்று


Priyan Vadanad
அக் 07, 2025 20:41

விஜயை நினைத்து தூங்க முடியாமல் தவிக்கும் திமுக ,அதிமுக, பாஜ., நண்பர்களுக்கு மெலடோனின் தூக்க மாத்திரை நல்லது.


Venkat esh
அக் 07, 2025 20:33

அவர் பற்றி பேசுவது இருக்கட்டும்.... உங்கள் கூட்டத்திற்கே அப்படி ஒரு பழக்கம் இல்லையோ..... அதை உணர்ந்து கொண்டவர்களாக இருந்தால் இவ்வளவு அராஜகம் செய்யத்தோன்றுமா?


Rajan A
அக் 07, 2025 20:04

உங்களுக்கு என்ன? குடும்பம் நன்றாக இருக்கும் வரை கவலையில்லை.


Ganesh
அக் 07, 2025 19:55

அப்போ தப்புக்கு பயப்படுற விஜய் மாதிரி ஆளுங்க அரசியலுக்கு வர்றது தப்பா சார்... உங்கள மாதிரி ஆளுங்க தான் அரசியல்ல இருக்கணுமா சார்...??? நல்ல வேளை நாங்களும் முதல்ல அவர் உங்கள மாதிரி தான் நெனைச்சோம்.. இப்போ அப்படி நெனைச்சது தப்புன்னு புரிஞ்சுடுச்சி....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை