உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் பிரசாரம் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு த.வெ.க. தலைமை அறிவிப்பு

விஜய் பிரசாரம் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு த.வெ.க. தலைமை அறிவிப்பு

சென்னை: விஜயின், அடுத்த இரு வாரங்களுக்கான பிரசாரம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, த.வெ.க., தலைமை அறிவித்துள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், தன் பிரசாரத்தை, செப்., 13ல் திருச்சியில் துவங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, தன்னுடைய முதல் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை துவங்கி பேசினார். தொடர்ந்து, ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், சில நாட்கள் ஞாயிற்றுகிழமைகளிலும் பிரசாரம் மேற்கொள்ள பயண திட்டம் வகுத்திருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wyh9vwnl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, பயண அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 27ம் தேதி, விஜய் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட, 41 பேர், பரிதாபமாக இறந்தனர். இந்தச் சம்பவம், தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின், த.வெ.க., தலைவர் விஜய், சமூக வலைதளம் வழியே இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து, கடந்த 30ம் தேதி, வீடியோ பதிவு வெளியிட்டு, இரங்கல் தெரிவித்திருந்தார். அதில், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், விஜயின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான பிரசார பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, த.வெ.க., தலைமை அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில், 'நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும், வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், தலைவர் விஜயின், அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mr Krish Tamilnadu
அக் 02, 2025 10:49

த.வெ.க. இளைஞர் கூட்டம் ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். படித்த விசயம் தெரிந்தவர்களின் ஆதரவும் ஏன் உங்களுக்கு அளிக்க படுகிறது என்பதை, தி ஐடியாலஜி ஸ் - இளைஞர்கள் கையில் அரசியல் கொடுக்க வேண்டும். முற்றிலும் மாறுபட்ட சிந்தனை ஏற்பட வேண்டும் என்ற ஏக்கம், எண்ணம் உள்ளவர்கள். தெரியாமல் செய்த தவறுக்களுக்கு, அதனால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான அறிவு இல்லையா என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள். அனைத்து இளைஞர் கூட்டம் பார்த்து பழகி வந்த முறை அப்படி. பஸ்ஸில் புட்போடு, ரயில் மேலே, புதுபட ரீலிஸ் டிக்கெட் வேட்டை, ரசிகனாக கட்டவுட் மேலே பால் அபிஷேகம். இப்படி வாழ்ந்து வருகிறீர்கள். கூட்டம் பற்றிய பயம், கவலை இன்றி உங்கள் வேலையை மட்டும் பார்த்து வளர்த்துள்ளீர்கள். அந்த சமயங்களில் உங்களை கண்டிக்க வில்லை. அதன் விளைவு நீங்கள் இன்று அந்தரத்தில், கும்பல்களில். உங்கள் தலைவருக்கும் வெளியில் எங்கும் ரசிகர் கூட்டம், சூட்டிங் கூட்டம் - கூட்டத்தை பார்த்து பயமில்லை. நீங்கள் முன்னேறுங்கள்- இனி எல்.சி.டி திரை மூலம், மக்கள் சந்திப்பை ஏற்படுத்துங்கள். அதிலும் கான்பரன்ஸ் முறையில் கூட செய்யலாம். 2026 பயணம் தடைபட வேண்டாம். நீங்கள் உங்களுக்குள் கூட்டங்கள் மூலம் உங்களை செம்மை படுத்தி கொள்ளுங்கள். பிறரை பற்றி இனி கவலை பட்டுதான் ஆக வேண்டும்.


Makkal Manam
அக் 02, 2025 06:58

இனி அரசு அனுமதி தராது. இனி நீங்கள் ண்ட கூட்டணிக்கு வருவதை தவிற வேறு எந்த வழியும் இல்லை


சமீபத்திய செய்தி