உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் மீது விஜய் ஆவேச தாக்கு அதிகார திமிர்

ஸ்டாலின் மீது விஜய் ஆவேச தாக்கு அதிகார திமிர்

சென்னை : தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சி அல்ல; அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி' என, முதல்வர் ஸ்டாலினையும், தி.மு.க., அரசையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆவேசமாக சாடியுள்ளார். சென்னையில், அவரது கட்சியின் பெண் உறுப்பினர்கள் மீது காவல் துறையினரை ஏவி அராஜக தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை வியாசர்பாடி முல்லைநகரில், தீ விபத்து ஏற்பட்டது. பல குடிசைகள் தீக்கிரையாகின. குடிசைகளை இழந்த மக்கள், அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு த.வெ.க., உறுப்பினர்கள் உடை, போர்வை, பாய், உணவு வழங்கினர். அதை பார்த்த போலீசார், த.வெ.க., நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து செல்லுமாறு மிரட்டினர். போலீசார் வரம்பு மீறி பேசி, அத்துமீறி செயல்படுவதை பார்த்த த.வெ.க., செயற்குழு உறுப்பினர் கங்காவதி, 45, 'மக்களுக்கு உதவி செய்வதை ஏன் தடுக்கிறீர்கள்?' என்று கேட்டார்.அதை கேட்ட போலீசார், கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து கீழே தள்ளினர். அதை தடுக்க ஓடினார் மகளிர் அணியின் தமிழ்செல்வி. அவரது ஆடையை பிடித்து இழுத்து தள்ளி விட்டனர் போலீசார். காயம் அடைந்த என் கட்சியினர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூடாது; அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவக்கூடாது என்று, காவல் துறை தடுக்க என்ன காரணம்? கேள்வி கேட்ட பெண்களை, 'பூட்ஸ்' காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையை பிடித்து கிழித்து தள்ளி விடுவதையும், முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா?அப்படி அராஜகமாக, இழிவாகத்தான் பெண்களை நடத்த வேண்டும் என, காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளாரா? இது தான் ஆட்சி என்றால், இது மக்களாட்சி அல்ல; அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி. இதைவிட சான்று தேவையில்லை. மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் ஸ்டாலின் அரசின் இந்த காட்டுமிராண்டித் தனமான அராஜக போக்கை கண்டிக்கிறேன்.தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிரை பாதுகாப்போம் என்று பொய் சொல்லி ஏமாற்றி ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்தபின், அவர்களுக்கு தி.மு.க.,வினரால் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனாலும், தொடர்ந்து காவல் துறை வாயிலாக அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதை ஏற்க முடியாது. காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருக பலத்தை காட்டி, மக்களின் வெறுப்பை குவிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் ஸ்டாலின் அரசு, பெண் உரிமைகளை பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், த.வெ.க., சார்பில் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் சந்திக்க நேரிடும்.. இவ்வாறு விஜய் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சிட்டுக்குருவி
மே 28, 2025 18:54

இவர் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் யாருடைய அனுமதிக்காக காத்திருக்கின்ரார்.உடனே அத்து மீறிய காவலர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.கிரிமினல் வழக்கு தொடுக்கவேண்டும் . நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிகளையும் இதற்க்கு பொருப்பாகவெண்டும். இது ஒரு மண்ணிக்கமுடியாத குற்றம். வெறும் வாய்ச்சொல் வீரராக இருக்காதீர்கள். நீங்களே ஒரு வக்கீல் ஆயிற்றே.


R.PERUMALRAJA
மே 28, 2025 14:42

நீட் தேர்வு இந்த ஆண்டு ஒரு மாணவனை பலிகடா வாங்கியது , வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டது தி மு க அரசு ,அதற்க்கு முதலில் அரசியல் கட்சிகள் போராட்டம் அரசியல் செய்ய வேண்டி மக்கள் குமுறுகின்றனர் , விஜய் அதையும் கண்டுகொள்வார் என்று நம்புவோம் .


krishna
மே 28, 2025 13:37

SUPER DRAMAVJOSEPH VIJAY.NEENGALUM ULAKKAI NAYAGAN POLA THURU PIDITHU IRUMBU KARAM DRAVIDA MODEL KOMAALIGALIN B TEAM MATTUME.SUMMA SCENE KAATAADHINGA.CINEMAVIL MATTUM NADINGA PODHUM.THAMIZH NATTUKKAGA ORU AANIYUM PUDUNGA VENDAAM.


Rengaraj
மே 28, 2025 11:31

விஜய் அறிக்கை போர் நடத்துவதை நிறுத்தி களத்தில் இறங்கட்டும். அப்புறம் பார்க்கலாம். இங்கு யோசனை சொல்வதற்கும், அறிக்கைவிடுவதற்கும் , வாய் ஜாலம் , காட்டுவதற்கும் அநேகம் பேர் உள்ளனர். உண்மையிலேயே அக்கறை உள்ளதென்றால் அந்த போலீஸ் நிலையத்துக்கு சென்று பேசலாமே ? அல்லது தனது வக்கீல் படைகளை கொண்டு வழக்கு போடலாமே சினிமாவில் நீதிமன்றத்தில் பேசுவாரே , அதே போன்று இவரே நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கு ஆஜராகி ரோட்டில் என்னவெல்லாம் நடக்கிறதோ அவற்றை கேள்வியாக்கி நீதிமன்றத்தில் கேட்கலாமே


Padmasridharan
மே 28, 2025 09:37

காவலர்கள் எது செஞ்சாலும் suspension / transfer கொடுப்பாங்க. Dismiss கொடுத்து சிறை தண்டனை கொடுக்க மாட்டாங்க என்கிற தைரியம்தான். பணம் வசூலிக்க 4 காவலர்கள் ஒன்னா சேர்ந்து அதிகார பிச்சை எடுக்கற தைர்யம் சினிமாவில் அநீதியை எதிர்த்து போராடும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் நல்லது செய்ய 4 பேரு கூடி ஆட்சி செய்யறதுக்கு எத்தனை நடிகர்களுக்கு விஜயம் செய்ய வரும்.


Palanisamy Sekar
மே 28, 2025 09:36

விஜய் அவர்களின் நோக்கம் சிலவற்றில் திமுக எதிர்ப்பு என்பது ஆக சிறந்த ஒன்றுதான். சிலபல குறைகள் இருந்தாலும் கூட பெரும்பான்மை இந்துக்களின் எதிரியான வடக்குப்பட்டி ராமசாமியை தூக்கிவைத்து கொண்டாடுவதை ரசிக்க முடியவில்லை. தனது கட்சியினருக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவது சாமான்ய அரசியல்வாதிக்கே வருவது சகஜம்தான். அதில் விஜய்யும் அடங்குவார். பொதுவாழ்க்கையில் கூட போலீசின் அத்துமீறலை கண்டித்து அறிக்கை விட்டிருக்க வேண்டும். அதனை செய்ய தவறிவிட்டார். சென்னையில் பத்துவயது சிறுமிக்கு நடந்த பாலியல் துன்பத்தை விசாரணை செய்த போலீஸ் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க வந்த பெற்றோர்களை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தியதை நாடெங்கும் கண்டித்த நிலையில் விஜய் அதுபற்றி பேசாமலிருந்ததை என்னென்பது. ஒருவேளை அவருக்கு இதுபோன்ற செய்திகளை சொல்லி அறிக்கை எழுதி கொடுக்க சரியான ஆளில்லை போலும். அது இருக்கட்டும். திமுகவின் அதிகார வெறியில் போலீசை கைப்பாவையாக்கி எப்படிவேண்டுமானாலும் எதிர்கட்சியினரை அடிப்பதும் மிரட்டுவதும் பொய் வழக்கு போடுவதும் திமுகவின் ஆணவமும் திமிரும் தான் காரணம். ஆணையப்போகிற விளக்கு சுடரை பாய்ச்சி ஓய்வது போலத்தான் இருக்கிறது. ஆனாலும் பெண்ணென்று பாராமல் விஜய் கட்சியினரை விஜய் மீதுள்ள கோபத்தை வன்மத்தை காட்டியதை கண்டிப்பாக அனைவரும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டும். அதற்கு விஜய் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று அதிமுக பாஜக கூட்டணியில் தன்னை இணைத்துக்கொள்வதுதான் சிறந்த ஆளுமைமிக்க அரசியலாகும். தனித்து நின்று விஜய் ஒருபக்கம் வாக்குகளை பிரிக்க.. அதிமுக பாஜக கூட்டணியினர் ஒருபுறம் வாக்குகளை பிரிக்க, சீமான் தனது பங்கிற்கு சில சதவிகித வாக்குகள் பிரிக்க, இப்படி யாருமே பிரிக்க முடியுமே தவிர திமுகவுக்கு விழுகின்ற வாக்குகளை சுலபமாக வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்கிற எண்ணத்தை மனதில் நிறுத்திக்கொண்டால் அனைவரும் ஒன்றுபட்டு திமுகவை தோற்கடிக்க முடியும் , அதுவும் சுலபமாக, ஏன் இன்னும் சொல்லப்போனால் டெப்பாசிட் இழக்கவைக்கும் அளவுக்கு திமுகவை அரசியலிலிருந்தே துடைத்தொழிக்க முடியும் என்பதுதான் நிதர்சன உண்மை. அதனால் அறிக்கையோடு நில்லாமல் சிந்தித்து நல்ல முடிவினை அனைவரும் எடுக்கவேண்டும். குறிப்பாக விஜய் அதனை செய்தால் மட்டுமே எதிர்கால அரசியலில் விஜய் ஜொலிக்க முடியும். இல்லை என்றால் திமுகவே தொடரும்.. அப்போது அழுது புலம்பினாலும் முடியாது. திமிர்பிடித்த ஆட்சியாளர்களை விரட்ட தில்லான முடிவினை விஜய் எடுக்க வேண்டும்.


G Mahalingam
மே 28, 2025 09:08

அடுத்த முறை திமுக ஆட்சியை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றால் தவேக அதிமுக கூட்டணியில் சேருங்கள். திமுகவின் போலீஸ் பலம், பண பலம்,ரவுடிகளின் பலம்,ஆட்சியின் பலம் இருக்கு. தேர்தல் நேரத்தில் ஆம்புலன்ஸில் பணத்துடன் நிறையேவே ஒடும். திமுக போலீஸ் கட்டு கொள்ளாது.


Siva
மே 28, 2025 08:58

Not to believe these tactics from TVKOf VJ same as that of MNM of Haasan. Just to split Hindu votes so DMK gests back to Assembly again on simple majority.


vbs manian
மே 28, 2025 08:40

பெண் பாவம் பொல்லாதது. அசெம்பிலி சம்பவத்தை யாரும் மறக்கவில்லை. இலவச மழை பொழிந்து எவ்வளவு நாட்கள் மக்கள் வாயை மூட முடியும். ஆட்சியில் இருந்து அனுபவித்தாலும் கழகத்தால் தன் கோர முகத்தை மறைக்க முடியவில்லை.


vivek
மே 28, 2025 08:30

இந்த இத்து போன ஓவியரு எப்படி சமாளிக்குது பாருங்கோ


சமீபத்திய செய்தி