உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய வக்ப் வாரியம் தடை கோர முடியாது: பதிவுத்துறை

பட்டா இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய வக்ப் வாரியம் தடை கோர முடியாது: பதிவுத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வக்ப் வாரியம், தன் பெயரில் பட்டா இல்லாத சொத்துக்களை, பத்திரப்பதிவு செய்ய தடை கோர முடியாது' என, பதிவுத்துறை தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில், ஒட்டு மொத்த நிலங்களுக்கும், வக்ப் வாரியம் உரிமை கோரியதால், 2022ல் அங்கு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டது. இது, திருச்செந்துறை கிராம மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருச்செந்துறை கிராமத்தில், பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை பதிவுத்துறை நீக்கியது. மத்திய அரசின் வக்ப் வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள, திருச்செந்துறை பிரச்னை முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, பாலசமுத்திரம் கிராமத்தில், குறிப்பிட்ட சில சர்வே எண்களுக்கு உட்பட்ட, 90 ஏக்கர் நிலம் தங்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டது என, வக்ப் வாரியம் உரிமை கொண்டாடுகிறது. இந்த நிலங்களை, பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி, வக்ப் வாரிய நிர்வாகம், பதிவுத்துறை தலைவருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. அதற்கு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அளித்துள்ள பதில்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தில், வக்ப் வாரியம் கோரிக்கை விடுத்துள்ள நிலங்கள் மீது, வக்ப் வாரியத்துக்கு உள்ள உரிமையை, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பில், குறிப்பிட்ட சர்வே எண்கள், வக்ப் வாரியம் பெயரில் பட்டா இருப்பதாக குறிப்பிடப்படாத நிலையில், அந்தநிலங்களின் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க முடியாது.தனியார் பெயரில் பட்டா காணப்பட்டால், அதன் உட்பிரிவு பட்டா, வக்ப் வாரியம் பெயரில் தெளிவாக இல்லாவிட்டால், பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க முடியாது. இத்தகவல் வக்ப் வாரிய நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருச்செந்துறை போன்று, பழனியில் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், பதிவுத்துறை வக்ப் வாரியத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

suriyanarayanan
மே 19, 2025 03:22

எந்த நிலமாக இருந்தாலும் பட்டா இருந்தால் நில வரி, வீட்டு வரி சரியாக அரசுக்கு வரிகள் கட்டி இருந்தாள் பத்திரங்கள் பதிவு செய்யவது நல்லது மக்கள் தான் தீர்ப்பு மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு


suriyanarayanan
மே 19, 2025 03:20

வக்ஃப் வாரியமாக இருந்தால் மட்டும் இல்லை. அறநிலையத்துறையாக இருந்தாலும் சரி கரிஸ்டியன் அமைப்பாக இருந்தாலும் சரி அரசு நிலமாக இருந்தாலும் சரி பஞ்சமி நிலமாக இருந்தாலும் சரி பட்டா இருந்தால் பத்திரங்கள் பதிவுகள் நடப்பது நல்லது. பட்டா எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்தால் மறு பிறவியில் கூட உண்மை தெரியாது ஆகையால் பட்டா இருந்தால் பத்திரங்கள் பதிவு செய்யவது நல்லது மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு


Bhaskaran
மே 12, 2025 15:58

இதேபோல் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு அந்த நகரமே சொந்தம் யாரும் விற்கவோ வாங்கவோ முடியாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்து மதுரை நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறதாம் அவசரத்துக்கு கூட எந்த சொத்தையும் விற்க முடியவில்லை இத்தனைக்கும் பல நூற்றாண்டுகளாக அந்த ஊர்மக்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வரும் சொத்து அது


ஆரூர் ரங்
மே 12, 2025 13:26

மூல பத்திரம் இல்லாத கட்டிடத்தில் கட்சி பத்திரிக்கை நடத்துகிறார்கள் அவர்களுக்கு ஓட்டு போட்ட எனும் எப்படி பட்டா சிட்டா வைத்திருக்கும் முகலாயர் ஆக்கிரமித்து தானமாக கொடுத்த இடங்களுக்கு மூலப்பத்திரம் இருக்க வாய்ப்பில்லை.


ramesh
மே 12, 2025 11:59

இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு பாகிஸ்தான் போய் இருக்க வேண்டியவர்கள் . இருக்க இடம் கொடுத்தால் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் அணைத்தும் என்னது என்பார்கள் . ஆதாரம் இல்லாத வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்


GMM
மே 12, 2025 09:23

வக்ஃபு தன்னிடம் மூல கிரய பத்திரம் முழு விவரம், பட்டா, சிட்டா, அடங்கல் , நில தீர்வை, வில்லங்கம் இல்லை போன்ற ஆவணங்கள் இல்லாமல் பத்திர பதிவை தடை கோருவது தண்டனைக்கு உரிய குற்றம். மேலும் வக்ஃபு சொத்துக்கு மூல பத்திரம், பின் பதிவுகள் மற்றும் பட்டா வரலாறு விவரம் இருந்தால் மட்டும் தான் உரிமை உண்டு. அனுபவ பாத்தியம், வாடகை அபகரிப்பு, அரசியல் வாதிகள் பரிந்துரையில் அன்பளிப்பு போன்றவை எப்போதும் சட்ட பூர்வ ஆவணம் ஆகாது.


ஆரூர் ரங்
மே 12, 2025 09:09

முகலாயர் ஆக்கிரமித்ததை விட 1947 க்குப் பின் வாரியம் சுருட்டியது அதிகமா?.


Mecca Shivan
மே 12, 2025 08:01

முதுகெலும்பு இல்லாத கோழைகள்


மீனவ நண்பன்
மே 12, 2025 06:30

விஜய் மற்றும் ஸ்டாலின் என்ன சொல்வார்கள் ?


Kasimani Baskaran
மே 12, 2025 05:22

பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வக்ப் வாரியத்தின் சொத்து என்று சொல்லி ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். வக்ப் சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் தீவிரவாத குழுக்களுக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும் செல்வதாக சொல்லப்படுகிறது - தவிரவும் வாடகை என்பது அடி மாட்டு விலைக்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை