உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அணைகள், ஏரிகளுக்கு செல்ல வேண்டாம்: நீர்வளத்துறை தடை

அணைகள், ஏரிகளுக்கு செல்ல வேண்டாம்: நீர்வளத்துறை தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் செல்ல, நீர்வளத்துறை தடை விதித்துள்ளது. மாநிலம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள், 14,141 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சேலம், ஈரோடு, தேனி, மதுரை, திருவண்ணாமலை, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fnlhw3dq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றும் பணிகளில், நீர்வளத்துறையினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். அணைகள் திறப்பையும், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதையும் பார்ப்பதற்காக, பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு செல்வது வழக்கம். இதனால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதுகாப்பு கருதி, நீர்நிலைகளுக்கு அருகே பொது மக்கள் செல்வதற்கு, நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள முக்கிய அணைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கு, 'ஷிப்ட்' அடிப்படையில், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sundarsvpr
அக் 23, 2025 11:59

உண்மைதான். செல்லவேண்டாம். ஏரி கண்மாய் குளம் அணைகள் கரைகள் பாதுகாப்பு தன்மையில் இருப்பதற்கு அரசு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுக்க பயப்படுகிறார்கள். தமிழ் நாடு அரசு வெட்கி தலை குனியவேண்டும்.


N S
அக் 23, 2025 11:10

அணைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் செல்ல, நீர்வளத்துறை தடை விதித்துள்ளது. மாநகராட்சியின் வேண்டுகோள் என்னவென்றால் "தயவு செய்து வீதிக்கு வராதீர்கள்"


Vasan
அக் 23, 2025 10:29

ஆக, அனைத்து தமிழக பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வட கிழக்கு பருவத்தின், கன மற்றும் மிக கன மழை, இந்த வருடத்திற்கு, இத்துடன் முடித்துக்கொள்ளப்படுகிறது. ஆங்காங்கே, அவ்வப்பொழுது, தூறல் மழை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. கன மழை தேவைப்பட்டால், நவம்பர் 20ம் தேதிக்கு பின் பிரார்த்தனை செய்தால், மறுபரிசீலனை செய்யப்படும். இப்படிக்கு வர்ணன்


duruvasar
அக் 23, 2025 10:29

தலைப்பை படித்தவுடன் மழை நீருக்கு கொடுத்த அறிவுரை என நினைத்து விட்டேன்.


Ramesh Sargam
அக் 23, 2025 10:23

தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அன்று DMK Files என்று ஒன்றை வெளியிட்டு அதில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தினார். இப்பொழுது இந்த மழை கால பிரச்சினைகளை முறையாக எதிர்கொள்ள தெரியாமல், மக்களை மழை வெள்ளத்தில் தவிக்கவிட்டுள்ளது அதே திமுக அரசு. திரு அண்ணாமலை அவர்கள் மீண்டும் DMK Fails என்று ஒன்றை வெளியிட்டு அதில் திமுக செய்யத்தவறிய அவலங்களை சுட்டிக்காட்டவேண்டும் என்பது மக்களுடைய ஆசை.


அப்பாவி
அக் 23, 2025 10:15

எதுக்கு அங்கெல்லாம் போகணும்? இவிங்க சாக்கடைகளை பராமரிக்கிற லட்சணத்தில் எல்லா தண்ணீரும் வூட்டுக்குள்ளாறேயே வந்துருமே.


V Venkatachalam, Chennai-87
அக் 23, 2025 08:28

செல்வ குறுந்தொகை நேத்திக்கு போய் துரை முருகனை நீங்க என்ன பெரிய ஆளா அப்புடீங்குற லெவலுக்கு பேசினப்பறம் போட்ட தடையா? திருட்டு தீய முகவை யாரும் குறை சொல்ல கூடாது.


Ramesh Sargam
அக் 23, 2025 07:59

எங்கே செல்லமுடியும்? அதான் உங்கள் ஆட்சியில் வறண்ட ஏறி, குளங்கள், குட்டைகள், ஆறுகள் போன்றவற்றை G-Square போன்ற உங்கள் கட்சி ஆளுங்கள் ஆட்டைப்போட்டு கட்டிடங்கள் கட்டிவிட்டீர்களே. அங்கெல்லாம் ஏழைகளாகிய நாங்கள் செல்லமுடியுமா?


Ramesh Sargam
அக் 23, 2025 06:30

சென்னை சாலைகளில் நடந்துபோகவேண்டாம் என்று முதலில் எச்சரிக்கவும்.


Modisha
அக் 23, 2025 06:05

சாலையில் போகவேண்டாம், வீட்டுக்குள் இருக்கவேண்டாம் . திமுகவுக்கு வோட்டு போட்ட பாவம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை