உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் நிறுத்தம்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு டிச., 11 முதல் 26 வரை ஆற்றின் வழியாக1646 மில்லியன் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு டிச.,29ல் வினாடிக்கு 1300 கன அடியில் இருந்து வினாடிக்கு 800 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஆற்றின் வழியாகதிறக்கப்பட்ட நீர் நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது.பெரியாறு மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 1330 கன அடி, 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 100 கனஅடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வைகை அணையில் இருந்து வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 69.09 அடியாக இருந்தது(அணை மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 2330 கன அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ