உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்

எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்றைக்கு தமிழக்தில் நடக்கும் தி.மு.க.,வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nlmu89h6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாடறிந்த ஊழல் திலகங்களான இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்னைகளையும், அதனை சரி செய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசை திருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அ.தி.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ள அம்மன் அர்ஜூனன் திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக , லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது. தீயசக்தி தி.மு.க., தெரிந்து கொள்ளட்டும். இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம். 2026ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Minimole P C
பிப் 26, 2025 08:00

EPS will definitely encounter the state vigilence. No doubht about it. Because the agreement between him and stalin will come into force if any vialation is there. Both are the best all India looters and act as hand in glove.


Ray
பிப் 26, 2025 00:18

எதோ ஒன்றிரண்டு முறை சந்தித்ததால் வந்த வினை உலகமகா பொய்யனையே தூக்கி சாப்பிடுற அளவுக்கு ஆயிடிச்சே சபாஷ் குருவை மிஞ்சின சிஷ்யன்


Ray
பிப் 25, 2025 18:34

சோதனைன்னு ஆரம்பிக்கும் போதே அலறுவானேன்னு மக்கள் ஏளனம்தான் செய்வாங்க. சோதனை முடிவில் என்ன வருதுன்னு பார்த்துட்டு சத்தியமா உள்ளுக்குள்ளே ஒண்ணுமில்லேன்னு வந்தா ரைட் அண்ட் லெப்ட் வாங்கலாமே.


Venkateswaran Rajaram
பிப் 25, 2025 18:29

தப்பு செய்யலேன்னா யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை ...திருடங்கதான் இப்படி கத்திகிட்டே இருப்பாங்க ..ஆக எல்லாருமே திருடங்க தான் ...திருடன் திருடனை பிடிக்கிறான் .திருடனை, திருடன் பிடிச்சதினாலே திருடனுக்கு கோபம் வருது...


M Ramachandran
பிப் 25, 2025 17:56

ஜென்மை விரோதியாக நினைத்த MGR ஜெயலலிதா ஆவிகள் மன்னிக்காது. தீ மு கா விடம் கைய்யேந்தி ஆ தீ முக்க வை அழிக்கும் பழனிச்சாமி.


S.V.Srinivasan
பிப் 25, 2025 16:42

வசனமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா லஞ்சம் வாங்கக்கூடாது, ஊழல் செய்யக்கூடாது என்று அரசியல் வாந்திகளுக்கு தோன மாட்டேங்குது. லஞ்ச துறை அதிகாரிகள் சோதனை, வருமான வரி சோதனை என்று வந்தால் உடனே மத்திய அரசையும் பா ஜா கவையும் பழி சொல்ல வேண்டியது. அரசியல் பழி வாங்கல் என்று கூவ வேண்டியது.


RAAJ68
பிப் 25, 2025 16:35

கரூர் கண்ணா 2ஜி ஊழல் வழக்கில் உலகமே ஆச்சரியப்பட்ட ஊழல் வழக்கில் கனிமொழி அம்மா திகார் ஜெயிலுக்கு போய் கல் உடைத்தார் தோட்ட வேலை செய்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெயலலிதா அப்பா அது அவர் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் சசிகலாவால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது கரையான் தின்று விட்டது கூவத்தில் முதலை ஓடுகிறது என்று கம்பி கட்டவில்ல அம்மா அவர்கள்.


RAAJ68
பிப் 25, 2025 16:28

புத்தம் இருவத்தி எட்டு கிலோ தங்கம். அதில் ஒரு கிலோவை ஆட்டை போட்டு விட்டதுகலைஞர் குடும்பம். இருவத்தி ஏழு என்று பொய் கணக்கு கூறுகிறார்கள். என் ஜெயலலிதாவிடம் 27 கிலோ தங்கம் இருக்கக் கூடாதா. அவர்கள் பரம்பரை நகைகள் சந்தியா காலத்தில் இருந்து வீட்டில் இருந்த நகைகள். ஜெயலலிதா கட்சியினர் பெரிய செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து வரும் போது வேறெடுத்து அவருக்காக எந்த நகைகளை அன்பளிப்பாக கொடுத்தனர். விலை உயர்ந்த பட்டு சேலைகள் காலணிகள் எல்லாம் ஜெயலலிதாவிற்கு அன்பளிப்பாக வந்தன. நிறைய வெள்ளிப் பாத்திரங்கள் இருந்தன அவைகள் எல்லாம் என்ன ஆயிற்று. யார் ஆட்டைய போட்டது.


நலம் விரும்பி
பிப் 25, 2025 15:00

தன் சுய லாபத்திற்காக அதிமுகாவை இனி முழுமையாக திமுகாவிடம் அடகு வைத்து மீட்க முடியாத அளவுக்கு தள்ள போகிறார் எடப்பாடி. தொண்டர்கள் சுதாரித்து அதிமுகாவை மீட்டெடுக்க வேண்டும்.


manokaransubbia coimbatore
பிப் 25, 2025 13:52

உங்க ஆத்தா மாசம் ஒரு ரூபாய் சம்பளத்தில் 27 கிலோ தங்கம் 1500 ஏக்கர் நிலம் எப்படி தலைவா அந்த மந்திரத்தை எங்களுக்கும் சொல்லி கொடுத்தால் நாங்களும் பிழைத்து கொள்வோமே சொல்லி தா தலைவா.


முக்கிய வீடியோ