உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜூன் 08) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(ஜூன் 08) கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோபாலன்
ஜூன் 08, 2024 15:29

கடந்த மூன்று நாட்களாக இதே பாட்டு கன மழை , மிதமான மழை.ஆனால் இங்கு கோவையில் ஒரு சுக்கும் இல்லை


Siva Subramaniam
ஜூன் 08, 2024 16:03

மிகவும் சரியே


மேலும் செய்திகள்