வாசகர்கள் கருத்துகள் ( 8 )
,இவையெல்லாம் முதல்வர் கவனத்திற்கு செல்கிறதா? / கவனிக்க வில்லையா? ஏற்கனவே விவசாயிகள் நெல் முளைப்பு பிரச்சனை!
பிரிக்க முடியாதது எதுவோ ? அரசும், ஊழலும். அரசு வியாபாரம் செய்தால், மக்கள் பிச்சை எடுப்பார்கள் என்பது பழமொழி. சில முக்கிய துறைகள் மற்றும் வேறு சில துறைகளின் தரம்/விலை நிர்ணயம் மட்டும் அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்தால் போதும். நிர்வாகத்தை தனியார் பார்த்துக்கொள்ளட்டும். உதாரணம், பால் மற்றும் பேருந்து கட்டணம்.
பிரிக்க முடியாதது எதுவோ ? பிஜேபி யும் புலம்பலும்....
வானதி அவர்களே, கொஞ்சம் பொறுமை. இப்போதான் தூய்மைப்பணிக்கு நல்லதா ஒரு காண்டிராக்டர் ஏற்பாடு செய்து இருக்கிறோம். விரைவில் ஆவின் நிறுவனத்தை நடத்த கட்சிக்குள்ளிருந்தே ஒரு ஆளைத்தேர்ந்தேடுத்து ஆவினை அவர்கள் வசம் ஒப்படைப்போம். அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் திணறுவார்கள். நாங்கள் சட்டையைக் கிழித்துக்கொண்டு தெருவெங்கும் கத்துவோம்.
குஜராத் அமுல் பாலுக்கு மாறி விடலாமா வானதி அவர்களே என தொண்டர்கள் கேட்பதாக ஒரு வாசகர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கிண்டலாகக் கேட்டாரா அல்லது தமிழக மக்களின் மீதுள்ள அக்கறையின் பேரில் கேட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், குஜராத் அமுல் பாலுக்கு மாற வேண்டாம். குஜராத்திலுள்ள அமுல் நிறுவனம் போன்ற ஒரு மாடல் அமைப்பை தமிழகத்தில் ஏற்படுத்தலாம். அதனால் பால் கறக்கும் மக்கள் மட்டுமின்றி, பொது மக்களும் நல்ல விதத்தில் பயன் அடைவார்கள். உங்களுக்கு முதலில், அமுல் நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்று தெரியுமா? அது எவ்வாறு உலகம் முழுவதும் அவர்களின் பால் பொருட்களை அனுப்பும் அளவிற்கு வளர்ந்தார்கள் என்று தெரியுமா? அதற்கு குரியன் போன்ற தன்னலமற்ற ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும். வானதி அவர்கள் கூறியது 100% உண்மை.
கவின் இருக்க பயமேன் .
இதுதான் திராவிட மாடல். தனியார் களை ஊக்கப்படுத்துகிறது. குஜராத்தில் அரசும் சேர்ந்து நடத்துகிறது. ஆனால் இங்கே அரசு தூங்குகிறது. கர்நாடகாவில் நந்தினி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
குஜராத் அமுல் பாலுக்கு மாறி விடலாமா வானதி அவர்களே என தொண்டர்கள் கேட்கிறார்கள்