உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணப்பெண்ணை நடனமாட கூறிய போதை நண்பர்களால் நின்றே போனது திருமணம்

மணப்பெண்ணை நடனமாட கூறிய போதை நண்பர்களால் நின்றே போனது திருமணம்

கிருஷ்ணகிரி: வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண்ணை நடனமாட கட்டாயப்படுத்திய மாப்பிள்ளையின் போதை நண்பர்களால், திருமணமே நின்று போனது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபருக்கும் காவேரிப்பட்டணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆக., 27ல் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் மாலை மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு, 10:--00 மணியளவில் மணமகனின் நண்பர்கள் சிலர் மது போதையில் மண்டபத்திற்குள் வந்து நடனமாடினர். வரவேற்பு மேடையில் நின்ற மாப்பிள் ளையை நடனமாடும் படி கூறிய அவர்கள், சிறிது நேரத் தில் மணப்பெண்ணையும் நடனமாடுமாறு கூறினர். மணப்பெண், 'இதுபோன்று நடனமாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை' என, கூறினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, பெண் வீட்டாரை, மணமகனின் போதை நண்பர்கள் தாக்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண், 'திருமணத்திற்கு முன்பே இப்படி இருந்தால், திருமணத்திற்கு பின் என் நிலை கஷ்டமாகிவிடும். எனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என, பெற்றோரிடம் கூறி விட்டார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்று போனது. மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டன. மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினர். மறுநாள் திருமணத்திற்கு வந்தவர்கள் மண்டபம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு விசாரித்து, அதிர்ச்சியுடன் நடையை கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

சண்முகம்
ஆக 30, 2025 19:46

அறிவுள்ள பெண். முன்கூட்டியே தன்னை காத்துக் கொண்டார்.


premprakash
ஆக 30, 2025 16:17

நண்பர்கள் செய்தது மிக பெரிய தவறுதான். ஆனால் மணப்பெண்ணும் திமிர் பிடித்தவள்தான். மாப்பிள்ளை தப்பித்தான் என நினைத்து கொள்ள வேண்டியது தான்.


aaruthirumalai
ஆக 30, 2025 16:08

தொலைக்காட்சி கலாச்சாரம்.


Muralidharan S
ஆக 30, 2025 13:42

இவை எல்லாம் திராவிஷ கலாச்சாரத்தால், திராவிஷ சாராய வெள்ளத்தால், எங்கும் போதை எதற்கும் போதை என்ற போதை கலாச்சாரத்தால் வந்த வினைகள்..


Krishnamurthy Venkatesan
ஆக 30, 2025 13:37

திருமண நிகழ்வுகளில் நண்பர்கள், போட்டோகிராபர்கள் பலசமயம் வெறுப்பை உண்டாக்குகிறார்கள். அவர்களை எப்போது ஒரு லிமிட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். நண்பர்களை அடக்கமுடியாமல் தவித்துப்போயிருக்கும் மணமகனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


Barakat Ali
ஆக 30, 2025 13:02

அந்த இளம்பெண் செய்தது சரியே.. இதே காணரத்தால்தான் ஹிந்து இளம்பெண்கள் காதல் திருமணத்தை நாடுகிறார்கள்..


Muralidharan S
ஆக 30, 2025 13:39

லவ் ஜிகாத் என்று தெரியாமல் காதல் என்ற பெயரில் விழுந்து தாங்களும் நாசமாகிறார்கள்.... "இந்து" என்று நீ வேண்டும் என்றே ஒரு மதத்தை குறிப்பிட்டு இழுத்து இருப்பதால் இந்த உண்மையை சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


Madras Madra
ஆக 30, 2025 11:24

அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்


swami premadananda
ஆக 30, 2025 11:01

Your decision to call off the wedding showed incredible courage and strength. In a moment of intense pressure, you stood up for yourself and your values, proving that true dignity comes from within. You are a powerful example of what it means to be a woman who is unafraid to choose her own path. Swami Vivekananda once said, "There is no chance for the welfare of the world unless the condition of women is improved. It is not possible for a bird to fly on one wing." Your bravery embodies his vision for a nation of strong, self-reliant women. You have shown that true liberation is not just an idea, but an act of will. May your strength continue to inspire others to live with similar conviction and integrity.


Sridharan Madhavan
ஆக 30, 2025 10:31

YES, SHE IS CORRECT. GOD BLESS.


Anand
ஆக 30, 2025 10:26

கேடுகெட்ட நண்பர்களின் சகவாசம் துன்பத்தில் தான் முடியும்.


சமீபத்திய செய்தி