உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ''உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா,'' என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டு, அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழக அரசு வாதம்

இந்த தடையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (அக் 14) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், ''தனிப்பட்ட நபர்களிடம் அவர்களது அலைபேசிகளை வாங்கி, அதில் இருக்கக்கூடிய அத்தனை தரவுகளையும் இவர்களிடம் இருக்கக்கூடிய நவீன உபகரணங்களில் மாற்றிக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் அமலாக்கத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அமலாக்கத்துறை கணினிகளை பறிமுதல் செய்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது என வாதாடினார்.

அமலாக்கத்துறை வாதம்

பின்னர் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு கூறியதாவது: ''டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலையை விட அதிக கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களையும் கூட டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் விற்கிறார்கள். இவை அனைத்திலும் லஞ்ச பணம் விளையாடுகிறது. இந்த பணம் மேல் மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து பகிர்ந்து அளிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இது தினம் தோறும் நடக்கும் நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுபான கடைகளில் மோசடி நடைபெறுகிறது. அவர்களை மாநில அரசு காப்பாற்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி

பின்னர் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: கடந்த ஆறு ஆண்டுகளில் நான் பல அமலாக்கத்துறை வழக்குகளை பார்த்து இருக்கிறேன். திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளை நான் மீண்டும் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்தில் கூட உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தமிழக அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறது? போட்டி, விவாதம் எல்லாம் இங்கே தேவையில்லை. இவ்வாறு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ஆரூர் ரங்
அக் 14, 2025 14:26

விஞ்ஞான முறையில் ஆவணங்களை அழிப்பதிலும் மாற்றுவதிலும் திராவிஷக் கூட்டம் எத்தவர்க‌ள். முன்கூட்டியே தெரிவித்துவிட்டு ரெய்டு நடத்தி பலனில்லை. டாஸ்மாக் ஒரு பதிவு செய்யப்பட்ட அரசு கார்பரேட் நிறுவனம். அதன் பரிமாற்றங்களில் ஒளிவு மறைவு இருக்க முடியாது. அரசுத்துறை போல CONFIDENTIAL ரகசியங்களும் இருக்க முடியாது. ஆனால் கொள்முதலில் கூட வெளிப்படைத்தன்மை இருப்பதாகத்தெரியவில்லை. .


Roy
அக் 14, 2025 14:25

எப்போ ரிடையர் ஆகிறார்?


Shekar
அக் 14, 2025 14:23

இந்த நாட்டில் கொலை, கொள்ளை, லஞ்சம், கற்பழிப்பு, கூலி படை போன்ற பல குற்றங்கள் நடக்க காரணம் .....


Subburamu K
அக் 14, 2025 14:19

Ex Finance Minister of the state himself has admitted the corruption to the tune of 30,000 crores. Will the Supreme Court voluntarily conduct the probe and enquire the concerned Minister about the truth?


Iyer
அக் 14, 2025 14:12

""உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்தில் கூட உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா?""" சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்கும் கேள்வியா இது? சந்தேகம் இருந்தால் நிறுவனத்திற்குள் நுழைவதில் தவறு என்ன? சந்தேகம் இருந்தால் ஆவணங்களை கைப்பற்றுவதில் என்ன தவறு? தூக்கில் போட்டுவிட்டார்களா என்ன? 1000 ரூபாய் கூட BAIL MONEY கட்டமுடியாமல் ஆயிரக்கணக்கில் ஜெயிலில் வாடிவருகிறார்கள் அவர்கள் மேல் கருணை காட்டாத சுப்ரீம் கோர்ட் பெரியநிறுவங்களின் உரிமையில் இத்தனை அக்கறை காண்பிக்கும் அவசியம் என்ன? சாக்கு சாக்காக - பல ஆயிரகோடி கணக்கில் நீதிபதிகளின் வீட்டில் பிடிபடுவதன் ரஹஸ்யம் இப்போது வெளிப்படுகிறது


திகழ்ஓவியன்
அக் 14, 2025 14:11

சிபிஐ விசாரணை கிடைத்ததையே வெற்றி, தோல்வி என்று தவெக, திமுக தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்..ஆனால் இறந்துபோன 41 பேரை பற்றி யாருமே கவலைப் படலையா? சட்டரீதியான ஒரு சடங்கு முடிவுக்கு வந்துள்ளது.. இனி குறிப்பிட்ட திசையில் அந்த வழக்கு விசாரணை பயணிக்கும்.. இனி கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க போகிறது.. அதற்காக அந்த தீர்ப்பு, தமிழக அரசியலையே புரட்டி போடப்போகிறதா? யாருடைய தலையெழுத்தையாவது மாற்ற போகிறதா? நிச்சயம் கிடையாது. எனினும் சிபிஐ விசாரணை உத்தரவால், திமுகவுக்கு பின்னடைவு கிடையாது.. விஜய்யை எப்படியாவது சிக்க வைக்க வேண்டுமானால், இந்த அரசு எப்போதோ விஜய்யின் பெயரை எஃப்ஐஆரில் சேர்த்திருக்குமே? இதுவரை விஜய் பெயரை சேர்க்கவில்லையே.. எனவே, நடந்த சம்பவத்தை சிபிஐ கொண்டு விசாரிக்குமாறு நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.. அவ்வளவுதான்"


திகழ்ஓவியன்
அக் 14, 2025 14:11

கரூரில் 40 பேர் இறந்த சம்பவ எதிரொலியால்தான், அந்த கூட்டத்துக்கு வந்தவர்கள் பல மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையே தெரியவந்தது.. ஒருவேளை துயர சம்பவம் நடக்காமல் போயிருந்தால், "செந்தில் பாலாஜி மாவட்டத்தில் எங்களுடைய கூட்டம்" என்று கெத்து காட்டி பேசியிருப்பார்கள்.


ஜெகதீசன்
அக் 14, 2025 14:11

யாரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்கணும் என்று உங்களுக்கு தெரியாதா? குற்றவாளியிடம் கேட்கனும். தவறு நடந்திருப்பது ஊருக்கே தெரியும், என்ன சட்டமோ போங்க.


திகழ்ஓவியன்
அக் 14, 2025 14:07

டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தமிழக அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறது? இதே தான் அய்யா கருர் விஷயத்தில் SIT விசாரித்து வரும் வேளையில் ஏன் சிபிஐ விசாரணை வருகிரது என்று தெரியவில்லை


திகழ்ஓவியன்
அக் 14, 2025 14:05

எப்படியாவது உதயநிதியை இதில் சிக்க வைத்து எப்படி டெலிங்கனா கீதா வை கைது செய்தது போல பிளான் செய்து இப்போ விழிபிதுங்கி முழி வெளி வந்து வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார்கள்


புதிய வீடியோ