உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது என்ன நியாயம்? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது என்ன நியாயம்? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “'சாரி மா' என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை? சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீசார் விசாரணையின் போது, சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:1. பிரபாகரன் (வயது 45) - நாமக்கல் மாவட்டம் 2. சுலைமான் (வயது 44) - திருநெல்வேலி மாவட்டம் 3. தாடிவீரன் (வயது 38) - திருநெல்வேலி மாவட்டம் 4. விக்னேஷ் (வயது 25) - சென்னை மாவட்டம் 5. தங்கமணி (வயது 48) - திருவண்ணாமலை மாவட்டம் 6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) - சென்னை மாவட்டம் 7. சின்னதுரை (வயது 53) - புதுக்கோட்டை மாவட்டம் 8. தங்கபாண்டி (வயது 33) - விருதுநகர் மாவட்டம் 9. முருகாநந்தம் (வயது 38) - அரியலூர் மாவட்டம் 10. ஆகாஷ் (வயது 21) - சென்னை மாவட்டம் 11. கோகுல்ஸ்ரீ (வயது 17) - செங்கல்பட்டு மாவட்டம் 12. தங்கசாமி (வயது 26) - தென்காசி மாவட்டம் 13. கார்த்தி (வயது 30) - மதுரை மாவட்டம் 14. ராஜா (வயது 42) - விழுப்புரம் மாவட்டம் 15. சாந்தகுமார் (வயது 35) - திருவள்ளூர் மாவட்டம் 16. ஜெயகுமார் (வயது 60) - விருதுநகர் மாவட்டம் 17. அர்புதராஜ் (வயது 31) - விழுப்புரம் மாவட்டம் 18. பாஸ்கர் (வயது 39) - கடலூர் மாவட்டம் 19. பாலகுமார் (வயது 26) - இராமநாதபுரம் மாவட்டம் 20. திராவிடமணி (வயது 40) - திருச்சி மாவட்டம் 21. விக்னேஷ்வரன் (வயது 36) - புதுக்கோட்டை மாவட்டம் 22. சங்கர் (வயது 36) - கரூர் மாவட்டம் 23. செந்தில் (வயது 28) - தர்மபுரி மாவட்டம்இவர்களது பெற்றோரிடமும், மனைவி, மக்களிடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் போட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்? இவ்வாறு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 13:05

இதற்கு முன் நடந்த கொலைகளுக்கு நாங்கள் சாரி சொன்னதாக சரித்திரம் இருக்கிறதா நயினார் அவர்களே ஏதோ அடுத்த வருடம் தேர்தல் வர்றதாலே சொல்லவேண்டிய கட்டாயம் ...


Ramesh Sargam
ஜூலை 02, 2025 12:59

சாரி என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் பற்று, தமிழை காக்க, தமிழுக்காக, தமிழ் மொழியை வளர்க்க என்று கூட்டம் போட்டு பேசும் முதல்வருக்கு தமிழில் மன்னிப்பு, மன்னிக்கவும் என்கிற வார்த்தைகள் தெரியாதா? அப்படி மன்னிப்பு கேட்டாலும் இந்த படுகொலை மன்னிக்க முடியாத ஒரு படுகொலை.


Senthoora
ஜூலை 02, 2025 14:11

ஒரு மனிதாபிமான முறைக்காக மன்னிப்பு கேட்ப்பார்கள்.