உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தம்பி கைதாகும்போது தி.மு.க., குடுமி சிக்கும்

தம்பி கைதாகும்போது தி.மு.க., குடுமி சிக்கும்

சென்னை: 'டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில், இரண்டாவது நாளாக நடக்கும் அமலாக்கத் துறை சோதனை நடத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?' என, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.

அ.தி.மு.க., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில், அமலாக்க துறையின் சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது. இந்த சோதனை குறித்து, இன்னும் முதல்வர் ஸ்டாலின் ஏதும் கூறாமல் மவுனமாக இருக்கிறார்; இது ஏன்?தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் 'ரெய்டு' பற்றி ஏன் பேச மறுக்கிறார்; ரித்தீஷ் எங்கே இருக்கிறார்; துபாய் சென்று விட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரித்தீஷ்?முதல்வராலும், அவரது மகனாலும், 'தம்பி' என்று அன்போடு அழைக்கப்படும் ரித்தீஷின் வேலை என்ன? 'யார் அந்த சார்?' என்று கேட்டோம்-, பதில் வரவில்லை. யார் அந்த தியாகி? என்று கேட்டோம்; தமிழகத்திற்கே தெரிந்த பதில் என்றாலும், முதல் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி; எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்? இந்த தம்பி கைதாகும்போது, தம்பியின் வசம் உள்ள தி.மு.க.,வின் குடுமி சிக்கும். அப்போது பேசித்தானே ஆக வேண்டும் முதல்வரே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Natchimuthu Chithiraisamy
மே 21, 2025 18:30

எத்தனையையோ திமுக பார்த்து இருக்கும் என என் மனதில் ஓடுகிறது என்று முதல்வர் நினைக்கிறார்...


Rajarajan
மே 21, 2025 08:00

கைது, காவல் நீட்டிப்பு, ஜாமீன், மக்கள் மறப்பு . அம்புடுதேன்.


Bold letters
மே 19, 2025 10:18

எந்த நாடும் எந்த மாநிலமும் தன்னிலை கொண்டவயல்ல அதே போன்று அரசின் ஒவ்வொரு துறையும் ஒன்றிய அரசிலும் தனுக்குத்தான் உச்ச அதிகாரம் இருக்கு என்று செயல் படுவது அதிகார தூஷ்பரையோகமக்கும். ஈ டீ தனது செயலை சுய பரிசோதனை செய்யவேண்டும் அரசியல் பழிவாங்குவதற்கு துணை போகக்கூடாது


ச.பாலசுப்பிரமணியன்
மே 19, 2025 10:10

They are scientific thiefs and experts in escaping any kind of cases.


G VEERAMANIKANDAN
மே 19, 2025 07:37

திமுக எத்தனையோ சோதனைகள் வழக்குகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இயக்கம். இந்த அமலாக்கத்துறை சோதனை எல்லாம் எளிதாக வெற்றி பெறும்.


V GOPALAN
மே 19, 2025 07:12

We can trace terrorist in Pakistan but not people like ashok kumar and visakan.


V GOPALAN
மே 19, 2025 07:10

கட்டிங் மற்றும் கமிஷன் பங்கு இல்லாமல் எந்த கொள்ளையும் தமிழ்நாட்டில் செய்ய முடியாது. எல்லாம் கண் துடைப்பு வேலை. மக்கள் மாக்களாக இருக்கும் வரை இது போன்ற கொள்ளை nadakkum


Thiyagarajan S
மே 19, 2025 06:47

திமுகவை சேர்ந்த வக்கீல் வில்சன் போன்ற சுப்ரீம் கோர்ட் வக்கீல்களுக்கு தான் கொண்டாட்டமென்றால் கொண்டாட்டம் கோடி கோடியாக வாங்கி குவிப்பார்கள்.... கொள்ளையடித்த பணம்தானே அவர்களும் கொடுப்பார்கள் இவர்களும் கேட்பார்கள்... ஜிங் ஜக் ஜிங் ஜக்


RAMESH
மே 19, 2025 01:39

டெல்லி போல் தான் கதை செல்கிறது... அடுத்து கைது ஆவாது முக்கிய புள்ளி போல் தான் தெரிகிறது...இவர்களே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அமலாக்க துறைக்கு பாதையை திறந்து விட்டார்கள்..இதை மறைக்க மாநில சுயாட்சி என்று எதிர்கட்சிகள் முதல்வருக்கு கடிதம் எழுதினால் எடுபடாது.....பினராயி விஜயன் கூட உதவிக்கு வர மாட்டார்.....நீட் எதிர்ப்பு விசயத்தில் கட அவர் எஸ்கேப்.....யார் அந்த சார்...கூட தெரிய வரும் முடிவில்


Murugan Rodai
மே 18, 2025 17:26

ஏப்பா எந்த பிரச்சனை ஆனாலும் தி முக வின் அரசு இருக்கிறது ஐம்பது வருடத்திற்க்கு மேலாக ஆளும் அரசு அவர்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றும் இல்லை எல்லாம் தெரியும் தி மூ க கழகத்திற்க்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை