உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?

எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''தமிழகத்தில் நான் பயணம் செய்யும் போது, சுற்றுச்சுவர்களில், 'தமிழகம் போராடும்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது; யாருடன் போராடும்?'' என, கவர்னர் ரவி கேள்வி எழுப்பினார். சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில், வள்ளலாரின், 202வது பிறந்த நாள் விழா மற்றும் திருஅருட்பா நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இதில், கவர்னர் ரவி பேசியதாவது:

தமிழக கவர்னர் மாளிகை, கடந்த இரண்டு நாட்களாக ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக, ஆன்மிக கூடமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த வள்ளலாரின் போதனைகள், இந்த இடத்தை புனிதமாக்கி விட்டன. வள்ளலாரின் போதனைகள், உலகில் இப்போது நடக்கும் பிரிவினைவாதம், வறுமை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக உள்ளன. அவரின் தத்துவங்கள் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தன. ஒவ்வொரு நாளும், பத்திரிகைகள் வாயிலாக தீண்டாமை எனும் பெயரில், கொலை, அடிதடி சம்பவங்களை காணுகிறேன். பட்டியலின சமூகத்தினர், நம் சகோதர, சகோதரிகள். அவர்களை இந்த சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்திலும் நடக்கின்றன. தமிழகம், கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ளது. உயர் கல்வி சேர்க்கையில், தேசிய சராசரியை விட, தமிழகத்தில் சேர்க்கை சதவீதம் அதிகம். மேலும், எழுத்தறிவு பெற்றவர்கள் ஏராளம். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த பிரச்னைகளுக்கு, சமுதாய சீர்திருத்தமே தீர்வு. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் நம்மை சென்றடைய கூடாது என்பதில், அரசியல், கண்ணும் கருத்துமாக உள்ளது. நம்மை பிரித்து ஆள்வதையே, அரசியல் ஒரு மார்க்கமாக கொண்டுள்ளது. இப்படி இருந்தால் தான், அவர்கள் ஆட்சியில், அவர்களுக்கு சாதகமாக செய்து கொள்ள முடியும். சமூக பாகுபாடுகளை களைய, வள்ளலாரின் பாடல்களே ஒரே வழி. அதை பாடங்கள் வாயிலாக, நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பாடங்கள் மூலமாக சென்றால், குழந்தைகளின் மனதில் பதியும். அதனால், இனி வரும் சமுதாயம் பாகுபாடு இன்றி உருவாகும். தமிழகம் முழுதும் நான் பயணம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள சுவர்களை பார்ப்பேன். அதில், 'தமிழகம் போராடும்' என்று எழுதப்பட்டிருக்கும்; யாருடன் போராடும்? தமிழகத்தை எதிர்த்து யாரும் போராடவில்லை. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். இதுபோன்ற மனநிலையில் இருந்து அனைவரும் மாற வேண்டும். யாருடனும் இங்கு சண்டை கிடையாது. நாம் அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

baala
அக் 07, 2025 10:03

200 ரூபாய்க்கு எப்படி அப்ளை செய்வது. அதை முதலில் சொல்லவும்.


baala
அக் 07, 2025 09:34

அப்படி என்றால் கோழைகளா? யாரும் போராடவில்லை என்றால்?


கூத்தாடி வாக்கியம்
அக் 06, 2025 17:12

மணல் கொள்ளைககு ஆதரவாக போராட்டம். டாஸ்மாக் கம்பெனிககு ஆதரவாக போராட்டம். போதைக்கு ஆதரவாக போராட்டம். லஞ்சத்திற்கு ஆதரவாக போராட்டம். இந்துக்களுக்கு எதிரான போராட்டம். இன்னும் எததனையோ போராட்டம். கூட்டணி கட்சிகளோடு போரட்டம். குடும்பத்து உள்ளேயே போரட்டம். கட்சி உள்ளேயே பெரிசுங்களோடு போரட்டம். முடியல அடிடா நோட்டீஸ்.


M.Sam
அக் 06, 2025 16:11

அது இறையறியும் ஏதிர்த்து ல்லை உங்க கும்பலின் ஏத்திச்சி அதிகாரத்தை ஏதிர்த்து தான் தமிழ் நாடு ஓடும் என்று சொல்ல்கிறார்


சத்யநாராயணன்
அக் 06, 2025 14:51

தமிழகம் என்றாலும் தமிழர்கள் என்றாலும் அந்த திமுகவின் தலைமை குடும்பம் மட்டுமே மற்ற எல்லோரும் வந்தேறிகள் மற்றும் அகதிகள் ஆவார்கள் இதுதான் விடியல் சட்டம்


baala
அக் 06, 2025 14:36

தைரியம் இல்லையா.


ponmurugan
அக் 06, 2025 13:32

நல்ல சட்டங்களை நடைமுறைப்படுத்த கவர்னருடன் போராட்டம் மாநில நிதியை பெற மத்திய அரசிடம் போராட்டம் எல்லாவற்றிலும் குறை காணும் எதிர்க்கட்சிகளுடன் போராட்டம்


K V Ramadoss
அக் 06, 2025 15:26

லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட நீதிமன்றங்களுடன் போராட்டம்...


Sivak
அக் 06, 2025 15:34

அப்படி பார்த்த மக்கள் தான் திருட்டு திமுக வுடன் போராடி கொண்டிருக்கிறார்கள் ... திமுக சுருட்டும் வரி பணத்தை காப்பாற்ற மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் .... போதைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள் ... ஹிந்துக்கள் திருட்டு திமுகவிற்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்கள் ...


அப்பாவி
அக் 06, 2025 12:47

கோபுரத்தை பொம்மைகள் தாங்கிப் பிடிக்கின்றன.


P. SRINIVASAN
அக் 06, 2025 12:27

உங்களை போன்ற மதவாத சனாதன சமூக விரோதிகளுடன்.


ஆரூர் ரங்
அக் 06, 2025 15:18

அப்போ மதத்தின் பெயரில் கட்சி நடத்தும் ஜவாஹிருகுல்லா, நவாஸ் கழனி, இனிகோ மட்டும் மதவாதிகளில்லையல்லவா? தி.மு.க கூட்டணி ஆட்களாயிற்றே


G Mahalingam
அக் 06, 2025 12:14

CAA போராட்டம் நடந்த போது இந்திய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு துரத்தி இந்த சட்டம் என்று திமுக உள்பட பல கட்சிகள் குரைத்தன.‌ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை 30 கோடி இஸ்லாமியர்களில் ஒருவர் கூட பாகிஸ்தான் போகவில்லை. திருட்டு பங்களாதேஷ்கள் சுமார் 2 கோடி பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி