உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு 8 ஆண்டுகள் ஆனது ஏன்?

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு 8 ஆண்டுகள் ஆனது ஏன்?

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., 2.0 மறுசீரமைப்பு, தீபாவளி பரிசாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. தற்போதைய 5%, 12%, 18%, 28% என்ற நான்கு வரி அடுக்குகள், 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட உள்ளன. புகையிலை, மது போன்ற பாவப் பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படும். இந்த எளிமைப்படுத்தல், 2017-ல் அறிமுகமான ஜி.எஸ்.டி.யின் எட்டு ஆண்டு அனுபவத்தின் தொடர்ச்சியாகும். ஆனால், இந்த சீரமைப்புக்கு ஏன் எட்டு ஆண்டுகள் ஆனது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது.வாட், சேவை வரி, கலால் வரி, செஸ் உள்ளிட்ட பல்வேறு வரிகளை ஒருங்கிணைத்து, கடந்த 2017-ல் அறிமுகமான ஜி.எஸ்.டி., 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற கொள்கையை அமல்படுத்தியது. இதற்கு முன், மாநில எல்லைகளில் இருந்த சோதனைச் சாவடிகளால், சரக்கு வாகனங்கள் போய்ச் சேர 15--20 நாட்கள் தாமதமாகின.இவை ஜி.எஸ்.டி., வாயிலாக நீக்கப்பட்டு, பொருட்கள் மற்றும் சேவைகளின் போக்குவரத்து எளிதானது. ஆனால், வரி வகைப்பாடு மற்றும் ஏய்ப்பு வழக்குகள் போன்ற சவால்கள் தொடர்ந்தன. உதாரணமாக, சிம் கார்டு பொருளா, சேவையா என்பது தொடர்பான வழக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது.

எட்டு ஆண்டுகள் ஏன்?

ஜி.எஸ்.டி., அறிமுகமானபோது, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுசெய்யும் என்று உறுதியளிக்கப்பட்டது. இது மாநிலங்களின் நம்பிக்கையைப் பெறவும்; கூட்டாட்சி அமைப்பில் சமரசத்தை உருவாக்கவும் அவசியமாக இருந்தது. 2021ல், ஜி.எஸ்.டி., சீரமைப்புக்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு, பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி விகிதங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான பொருட்களின் வரி விகிதங்கள் படிப்படியாக மாற்றப்பட்டன.ஜி.எஸ்.டி.யின் நான்கு அடுக்குகள் (5%, 12%, 18%, 28%) 15.50% என்ற சராசரி வரி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒற்றை வரி விகிதம் அமல்படுத்தப்பட்டால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.அதேநேரம், சொகுசுப் பொருட்களுக்கு வரி குறைந்தால், பணக்காரர்கள் பயனடைவர். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பும். இதைத் தவிர்க்கவே பல அடுக்குகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த அடுக்குகளை எளிமைப்படுத்துவதற்கு முன், வருவாய் நிலைத்தன்மை, மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் வணிகர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.எனவே, ஜி.எஸ்.டி., விகிதங்களில் சீர்திருத்தம் என்பது திடீரென மத்திய அரசு எடுத்த முடிவல்ல; கடந்த எட்டு ஆண்டுகளின் வரி சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியே.ஜி.எஸ்.டி., 2.0: மாற்றங்கள் ஜி.எஸ்.டி., 2.0-இல், 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, பொருட்கள் மற்றும் சேவைகள் 5% அல்லது 18% விகிதங்களில் வகைப்படுத்தப்பட உள்ளன. இது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைப்பு மற்றும் எளிமையான வரி முறையை வழங்கும். ஆனால், பொருட்களை வகைப்படுத்துவதில் சிக்கல்கள் மற்றும் மத்திய--மாநில முரண்பாடுகள் தொடரலாம். பொருட்களை வகைப்படுத்துவதில் அவ்வப்போது ஏற்படும் சிக்கலை, ஜி.எஸ்.டி.,யின் சிக்கலாக பேசுவதும் நடந்திருக்கிறது. இனிப்பு பாப்கார்னுக்கு கூடுதல் வரி என்ற பெருங்கூச்சல் வெளிப்பட்டது இந்த ரகம்.கேரமல் சாக்லெட் இணைந்த பாப்கார்னை எதில் வகைப்படுத்துவது என்ற சிக்கலில், சாக்லெட் ரகமாக கருதப்பட்ட சிக்கல் அது. இதுபோல, தற்போது, 14,000-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி., ஏய்ப்பு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன, இது வரி அமலாக்கத்தில் நம்பிக்கைக் குறைபாட்டைக் காட்டுகிறது. ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்களில், அந்தந்த மாநிலங்களின் முக்கிய தொழில்களுக்கும், தயாரிப்புகளுக்கும் ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க மாநில அமைச்சர்கள் அழுத்தம் அளிப்பர்.உதாரணமாக, குஜராத் - வைரம், தமிழகம் - ஜவுளி, கர்நாடகா - தகவல் தொழில்நுட்பம் என வரி குறைக்க வாதிடுவர். எனினும், பெரும்பான்மை கருத்து அடிப்படையில், ஏராளமான பொருட்கள், சேவைகளின் வரி குறைக்கப்பட்டு வந்திருக்கிறது.பரிணாம வளர்ச்சி தொடரும்ஜி.எஸ்.டி., 2.0 சீர்திருத்தங்கள், எட்டு ஆண்டு கால அனுபவத்தின் விளைவாகவும், மத்திய--மாநில அரசுகளின் ஆலோசனைகளின் தொடர்ச்சியாகவும் அமைகின்றன. முதல் ஐந்து ஆண்டுகளில் மாநில வருவாய் இழப்பு ஈடுசெய்யப்பட்டு, பின்னர் சீரமைப்பு குழு வாயிலாக வரி விகிதங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன.இந்த மாற்றங்கள் நுகர்வோருக்கு பயனளிக்கும் என்றாலும், புதிய பொருட்கள் மற்றும் சந்தை மாற்றங்கள் காரணமாக, வரி முறையில் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி நிகழும். எட்டு ஆண்டுகள் என்பது, கூட்டாட்சி அமைப்பில், ஒருமித்த கருத்து மற்றும் வருவாய் நிலைத்தன்மையை உறுதி செய்யத் தேவையான காலமாகும். எனவே, ஜி.எஸ்.டி., 3.0ல் ஒரே வரி விகிதம் என்றோ, இப்போது வரவிருக்கும் இரண்டு அடுக்குகள் மீண்டும் 4, 5 என்றோ மாறாது என்று கூறுவதற்கில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sridhar
ஆக 28, 2025 15:42

GST யால் விளைந்த நன்மைகள் ஏராளம். சிறுசிறு சீர்திருத்தங்களை அவ்வப்போது செய்து வந்திருந்தாலும், இடையே கொரோனாவால் இரண்டு மூன்று வருடங்கள் வீணாகிப்போனதால், தற்போதைய சீரமைப்பு 8 வருடங்களுக்கு பிறகு நடக்கிறது. GST யை பற்றி சினிமா மூலமும் பத்திரிக்கை வாயிலாகவும் அவதூறுகள் பலவற்றை பரப்பி அது எதோ புதிதாக மோடியால் விதிக்கப்பட்ட வரி போலவும், அதற்க்கு முன் வரிகளே இல்லாமல் மக்கள் சுகமாக வாழ்ந்துவந்தார் எனவும் பிம்பம் அமைத்துக்கொண்டிருந்த திருட்டு கும்பல் இன்று GST குறைப்பு என்றவுடன் ஓலமிடுகிறது ஏனென்றால், GST வரியில் 70% துக்கு மேல் மாநிலங்களுக்கு சென்று கொண்டுருக்கிறது. அதனால், அவர்களுக்கு வருமானம் குறையும். ஆகவே மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திருட்டு கும்பல் வரி குறைப்பை எதிர்த்து பேசமுடியாமல் தத்தளித்துக்கொண்டுருக்கிறது. நிதி விவகாரங்களில் மாநிலங்களின் தொடர்புகளை கொஞ்சம்கொஞ்சமாக துண்டித்தால்தான் லஞ்ச லாவண்யங்களை ஒழிக்கமுடியும். எல்லா திட்டங்களும் நேரடியாக மத்திய அரசே செயல்படுத்தும், மாநில அரசு அதற்க்கு வேண்டிய பாதுகாப்பளித்து வேண்டுமானால் மேற்பார்வை செய்யலாம் என்கிற அளவுக்கு விரைவில் சட்டத்திருத்தம் செய்யவேண்டும். இல்லையெனில், திருட்டு கும்பல் போன்றவர்கள் வெகு சுலபமாக கடன் சுமைகளை ஏற்றி அரசு கஜானாவிலிருந்து கொள்ளை அடித்ததோடு மட்டும் இல்லாமல், செலவு அதிகமாகியதை பொருளாதார வளர்ச்சி என்று கூறி கருணாநிதித்தனம் பண்ணிவிடுவார்கள்.


Selvaraj Thiroomal
ஆக 28, 2025 14:41

சாதாரண முடிவுகளுக்கே ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்கும் என்று நிதி அமைச்சர் கூறிவந்த நிலையில் எப்படி பிரதமர் தன்னிச்சையாக அறிவிக்கலாம். இதுவரை சொல்லிவந்தது தவறு அல்லது இது தவறு. குறைப்பது இருக்கட்டும், இந்த விளக்கம் யாருக்கு பயன்படும். லாபத்திற்கும் விற்றுமுதலுக்கும் profit Vs. Turnover வேறுபாடு புரியாமல், இருப்பது லட்ச ரூபாய் விற்று முதலாக தொழில் செய்பவர்கள் அனைவரும் பதிவு செய்ய வற்புறுத்தி, அதை செய்தால் கடைபிடிக்க வேண்டிய விதிகளுக்கு ஏற்ப எப்படி சமாளிப்பது என்ற நிலையில் மூடப்பட்ட சிறுகுறுதொழில் முதலாளிகள் மீண்டும் கடை திறக்கவா போகிறார்கள். அதை நாற்பது லட்சம் ஆக்கியும் பலனில்லையே. அன்று லேபர் ஜாப் செய்த சிறு முதலாளிகள் இன்று தொழிலாளிகளாக மாறி பலவருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் செய்த வேலைக்கு பணமே வராத நிலையில், வரியை முழுமையாக செலுத்தியே தீரவேண்டிய அவலம். மூலப்பொருளின் வரியை விட விற்கும் பொருளின் வரி அதிகம் 18 for RM - 28 for Components, பலமுறை முறையிட்டும் தீர்க்க முடியாத நிலையில் தீபாவளி பரிசாம்... உங்களை போன்ற பத்திரிக்கைகள் சிறுதொழில் சங்கங்களை தொடர்பு கொண்டு , அரசுக்கு நியாயங்களை எடுத்துரையுங்கள். மீதி இருப்பவர்கள் பிழைத்து போகட்டும் .


ஆரூர் ரங்
ஆக 28, 2025 17:34

கொரோனா காலத்திற்கு பிறகும் கூட ஏராளமான புதிய தொழில்கள பதிவு செய்யப்பட்டுள்ளன. எக்காலத்திலும் சுமார் 10 சதவீத சிறு தொழில் முனைவர்களே வெற்றி பெறுவது வரலாறு.


nisar ahmad
ஆக 28, 2025 13:24

எட்டு ஆண்டுகள் கொள்ளையடித்து பல அரசியல்வாதிகள் எம் பிக்கள் எம்எல் ஏக்களையெல்லாம் வாங்கி அதிலும் கொள்ளையடித்து உலகின் பணக்கார கட்சியாகிவிட்டது தற்காலிகமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் இது நிறந்தரம் கிடையாது எந்நேரம் வேண்டுமானாலும் மாறலாம்.


Arul Narayanan
ஆக 28, 2025 13:01

எட்டு வருடங்களாக பழகிப்போன வரிகளை குறைப்பது அரசுக்கு நஷ்டம் தான் ஏற்படுத்தும். எந்த வரியையும் ஏற்ற விட மாட்டார்கள். வரியே கிடையாது என்று சொன்னால் கூட எதிர்ப்பவர்கள் எதிர்த்து கொண்டு தான் இருப்பார்கள்.


pakalavan
ஆக 28, 2025 12:22

எலெக்ஷனுக்கு இன்னும் 4 வருஷம் இருக்கு அதனால்தான் இந்த கேப்


அப்பாவி
ஆக 28, 2025 06:56

உருவுறதுக்கு ஆள் இல்லைன்னா குறைச்சுத்தானே ஆகணும்?


சசிக்குமார் திருப்பூர்
ஆக 28, 2025 07:51

வாங்க அப்பாவி வரிகளை குறைக்க பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன். பெட்ரோல் டீசலை கணக்கில் வரக்கூடாது என்று திராவிட திருட்டு கழகம் எதிப்பது மக்கள் நலனுக்காக நம்பினால் 200


vivek
ஆக 28, 2025 07:53

ஆனால் அப்பாவி டாஸ்மாக் பாட்டில் மேல பத்து ரூபாய் கூச்சபடாம குடுபாரு


Kasimani Baskaran
ஆக 28, 2025 03:47

மாநிலங்கள் கூட்டாக முடிவு செய்ய எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது.. பெட்ரோல், டீசல் ஜி எஸ் டி க்குள் கொண்டுவந்தால் அவற்றில் விலையும் குறையும் - ஆனால் மாநிலங்களின் வரி பகிர்ந்தளிப்பதுவும் குறையும்.


முக்கிய வீடியோ