பஸ்சில் தங்க தாயத்து திருடிய பெண் கைது
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் பஸ்சில் பயணம் செய்த சிறுமியிடம் தங்க தாயத்து திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த ஓமாம்புலியூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், நேற்று மாலை மனைவி சுவாதி மற்றும் 5 வயது மகள் அனன்யாவுடன் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்ல பஸ் ஏறினார். சிறிது நேரத்தில், அனன்யா கழுத்தில் இருந்த 1 கிராம் தங்க தாயத்து மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். விசாரணையில், வ.கொளக்குடியை சேர்ந்த சாந்தி, 42; என்பதும், சிறுமியிடம் தாயத்து திருடியதையும் ஒப்புக் கொண்டார். போலீசார் வழக்குப் பதிந்து, சாந்தியை கைது செய்தனர்.