உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயது மாணவன் குண்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன் உயர்படிப்பு படித்து வந்தார். ஹைதராபாத்தில் பி டெக் படித்து வந்த பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். இவர் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்து விட்டு, இந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் அமெரிக்கா சென்றார். இந்த நிலையில், பிரவீன் அங்குள்ள ஸ்டோரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள், தெலுங்கானாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை என்றும், பிரதே பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே உண்மை தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், பதறிப்போன பிரவீன் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 4 மாதங்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள மற்றொரு சம்பவம் இந்தியர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vadivelu
மார் 07, 2025 04:36

இந்தியாவிலேயே கூட பொறாமையில் சிலரை அமெரிக்க எல்லா வைத்துள்ளார்கள். அவர்கள் வாழ்வோ சாவோ இறைவனை நம்பி சென்று விடுகிறார்கள்.


D.Rajan
மார் 06, 2025 14:21

உண்மை...


Raj
மார் 06, 2025 10:18

துப்பாக்கி கலாச்சாரம் உள்ள அமெரிக்காவில் குழந்தைகளை மேற்படிப்பு படிக்க அனுப்பாதீர்கள், கல்வி தரங்களில் உயர்ந்தது நமது இந்தியா தான். இந்தியர்களை கண்டால் இப்பொழுது வெளிநாட்டவர்களுக்கு பொறாமை தான்.


Lax Man
மார் 06, 2025 14:21

பிள்ளைகளை படிப்பிறகா அமெரிக்கா அனுபாடகிரகள் எச்சரிக்கை..


Lax Man
மார் 06, 2025 14:22

உண்மைதான..


சமீபத்திய செய்தி