உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மீண்டும் மன்னராட்சி கோரி நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்

மீண்டும் மன்னராட்சி கோரி நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்

காத்மாண்டு, நேபாளத்தில், மீண்டும் மன்னராட்சி முறையை நடைமுறைப்படுத்தக்கோரி, போராட்டம் வெடித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், 2008ல் மன்னர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களில், முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் ஆதரவாளர்கள், மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம் நடத்தினர். மேலும், போலீசார் அமைத்திருந்த சாலை தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், 'நாங்கள் எங்கள் மன்னரையும், நாட்டையும் எங்கள் உயிரை விட அதிகமாக நேசிக்கிறோம். மன்னர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.'குடியரசை ஒழிக்க வேண்டும். தற்போதைய ஆட்சி முறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஏப் 10, 2024 10:37

ஒண்ணும் தெரியாத மக்கள் இங்கே தமிழ்நாட்டில் எவ்வித போராட்டமும் இல்லாமலே வாரிசு முறை மன்னராட்சி இருக்கிறது


Sampath Kumar
ஏப் 10, 2024 09:24

சபாஷ் நேபாளிகள் நீங்கள் உண்மையில் கவலைகள் வேலை அதிகம் பார்த்தாலும் ஸநாயகம் என்றைந்த சடங்கை ஏதிர்ப்பது அதான் மீது உங்களுக்கு உள்ள மதிப்பீட்டை தெளிவாகக் காட்டுகின்றது இது இந்தியாவிலும் வரும் ஆனல் என்ன கொஞ்சம் வித்தியாசம் உள்ளது இங்கே ஆர்எஸ் எஸ் காரனின் கொள்கையில் மன்னராட்சி வரும் வருடம் அப்போ தான் சனநாயகம் என்றால் என்ன என்பதி மக்கள் உன்னரேயொரு வாய்ப்பு கிடைக்கும்


Mohan
ஏப் 10, 2024 10:21

அடடா இந்த வெயில் காலம் வந்தாலே போதும் மறை கலண்டு சிலது சுத்திகிட்டு இருக்குது அதுல நீயும் ஒன்னு அகராதில ஜனநாயகம்னா என்னனு சொல்லு பாப்போம்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ