உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் தினசரி ஊதியம் உயர்வு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் தினசரி ஊதியம் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியத்தை ரூ.17 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியது. ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில், 2008 - 09ம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை உருவாக்குவதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கம்.நாடு முழுதும், 740 மாவட்டங்களில், 13.42 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர்.இந்த திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, 3,796 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது என தமிழக அரசு குற்றம் சாட்டி இருந்தது. அதுமட்டுமின்றி மத்திய அரசை கண்டித்து தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது.இந்நிலையில், இன்று (மார்ச் 28) தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் 319 ரூபாயில் இருந்து 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2024-25ம் நிதியாண்டில் ஊதியமாக ரூ.319 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Subramanian Marappan
மார் 28, 2025 15:21

நூறு நாள் வேலைத்திட்டத்திலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிலும் எந்த உற்பத்தி திறனையும் அளவிட முடியாது. உற்பத்தி திறன் அளவு கோல்களும் கிடையாது. எனவே இவை இரண்டிற்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி வீண்.


மொட்டை தாசன்...
மார் 28, 2025 14:47

மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுவது வேதனை .


Varadarajan Nagarajan
மார் 28, 2025 11:47

இத்திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக விவசாயத்தை சீரழிக்கிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் தொழிலாளிகள் வேலைசெய்யும்விதத்தை பார்க்கும் போது வரிசெலுத்தும் மக்களுக்கு ஆத்திரமாகவும் அதேசமயம் ஆட்சியாளர்களுக்கு ஆனந்தமாகவும் உள்ளது. விவசாயத்தொழிலை வீணடித்துக்கொண்டிருக்கும் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதற்குப்பதிலாக வேலைநாட்களை அதிகரிப்பதும், ஊதியத்தை உயர்த்துவதும் வேடிக்கையாக உள்ளது. தற்பொழுது அவர்களையும் போராட்டத்திற்கு அழிப்பது கேலிக்கூத்து


Amar Akbar Antony
மார் 28, 2025 11:46

இந்த மகா ஊழல் திட்டம் சரியாக பயன்படுத்தியது பயன்படுத்துவது அந்தந்த கிராம கட்சியினர் மற்றும் ஊர் பெரியவர்கள். அவரவர் தோட்டத்தில் வேலைசெய்ய சொல்லி கூலியை இத்திட்டத்தின் மூலம் கொடுத்துள்ளனர் தற்போதும் தொடர்கிறது. ஆட்களை கொணர்ந்து கமிஷன் அடிப்பதும் குறைவான ஆட்களை கொண்டு அதிகம் பேர் கணக்குக்காட்டி கொள்ளையடிப்பதும் இதில்தான். முறைகேடுகளுக்கு தமிழகம் புதிதல்லவே.


Oru Indiyan
மார் 28, 2025 11:24

பாதி பணம் திராவிடிய கும்பலுக்கு கமிஷன்..


Chinnamanibalan
மார் 28, 2025 11:19

கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் உதவும் இந்த திட்டம், அந்த மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை என்பது ஆழ்ந்த கவலை அளிப்பதாகும். அரசுத் துறைகளில் நிலவும் ஊழல் காரணமாக, அன்றாடம் கூலியாக வழங்கப்படும் இந்த தொகையில் கணிசமான அளவு, அரசு அலுவலர்களின் கோரமான லஞ்ச பசிக்கு இரையாகி போவது கொடுமை!


Ramona
மார் 28, 2025 10:54

Total waste ,no use through this scheme, it is another gratis every month.no one works just walk around .it is a scientifically made to make easy money. Thanks to liberal central government. Even wealthy rich ladies wearing gold necklace bangles v can be seen walking with brand new manvetti.who is benefitted by this can any one prove. Out of 100 only 30 or 35 poor people will be benefits. For Others it is daily allowance


Srinivasan Krishnamoorthy
மார் 28, 2025 11:25

please understand that this was an invention for a scientific way of corruption by congres upa government during 2004-14 period in collusion with state governments like DMK to loot. now bjp put up brakes on misuse, these people cry


Krishna R
மார் 28, 2025 10:38

totally wasted schme. it is benefitting only the local politicians. only 2 hrs gathering, 20mins of work on road cleaning. 50-60 peoples every day. all agri and other works are pending ..no one is willing


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை