வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தென் கொரியாவில் இப்படி நடப்பது ஒன்று புதிதல்ல. இதற்கு முன் தென் கொரிய ஜனாதிபதிகளுக்கு நேர்ந்த சம்பவங்களின் சுருக்கம்: 1.சிங்மேன் ரீ 1948-1960 பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2.யுன் போ சன் 1960-1963 இராணுவப் புரட்சி மூலம் வெளியேற்றப்பட்டார். 3.பார்க் சுங் ஹீ 1963-1979 படுகொலை செய்யப்பட்டார். 4.சோய் கியூ ஹா 1979-1980 இராணுவப் புரட்சி மூலம் வெளியேற்றப்பட்டார். 5.சுன் டூ ஹ்வான் 1980-1988 மரண தண்டனை. 6.ரோடேவூ 1988-1993 ஊழலுக்காக 22 ஆண்டுகள் சிறைதண்டனை. 7.கிம்யங்சாம் 1993-1998 ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 8.கிம்டேஜங் 1998-2003 பதவியேற்பதற்கு முன் மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் பின் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. 9.ரோ மூ ஹியூன் 2003-2008 குற்றம் சாட்டப்பட்டதால் அவரே தற்கொலை செய்து கொண்டார். 10.லீ மியுங்பாக் 2008-2013 லஞ்சம் மற்றும் மோசடிக்காக அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. 11.பார்க் கியூன் ஹே 2013-2017 ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 12. மூன்ஜே இன் 2017-2022 இவர் ஒருவர்தான் அரசியலில் எந்தப் பிரச்சனையும் எதிர் கொள்ளாதவர். 13.யூன் சுக் இயோல் 2022 முதல் தற்போது பதவி வகிக்கும் இவர் பதவி நீக்கத்தைத் தவிர்க்க இராணுவச் சட்டத்தை அறிவித்து பின் அதை நீக்கியிருக்கிறார் இதையடுத்து அங்கு என்ன நடக்குமோ தெரியவில்லை.