உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி: 9 பேர் காயம்!

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி: 9 பேர் காயம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்து உள்ளனர்.அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில் தேவாலயம் ஒன்று உள்ளது. அங்கு பலர் கூடியிருந்தபோது திடீரென அங்கிருந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அதை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்தான். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பர்ட்டனைச் சேர்ந்த 40 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், ''இது நாட்டில் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்'' என தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மிச்சிகனில் உள்ள கிராண்ட் பிளாங்கில் உள்ள தேவாலயத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கப்பட்டது. எப்பிஐ அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இறந்துவிட்டார். இது அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது நாட்டில் இந்த வன்முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.

துணை அதிபர் கண்டனம்

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''மிச்சிகனில் ஒரு மோசமான சூழ்நிலை. எப்பிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். அங்கு நடக்கும் அனைத்து விஷயங்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

KOVAIKARAN
செப் 29, 2025 18:04

தீவிரவாதிகள் நம்நாட்டில் அப்பாவி இந்துக்களை கொல்லுவதைப்போலவே அங்கே தீவிரவாதிகள் சர்ச் க்குப் போய் அப்பாவி மக்களைக் கொள்ளுகிறார்கள். இது டிரம்ப் அவர்கள் பாகிஸ்தானோடு ஓட்டி உறவாட ஆரம்பித்த பிறகு ஆரம்பித்துள்ளது. இன்னும் சிலமாதங்களில் டிரம்ப் அவர்கள் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு விசா கொடுத்து அங்கு அனுமதிக்க வாய்ப்புள்ளது பின்னர் அமெரிக்காவும் தீவிரவாதத்தால் பாதிக்கும்போது தெரியும். அப்போது கண் போனபிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப்போல நிலைமை மாறிவிடலாம். எனவே டிரம்ப் அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியின் மீதுள்ள பொறாமையில், நமது எதிரியான தீவிரவாசஸ்தான் நாட்டினுடன் ஆரம்பித்த உறவை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.


Senthoora
செப் 29, 2025 16:44

என்னமோ இந்தியாவில் இதெல்லாம் நடக்காதமாதிரி விமர்சனம், நீங்கள் இப்படி விமரிசனம் பண்ணும்போது, வெளிநாடுகளில் இதெல்லாம் ஏற்க ஒரு குழு இருக்கு, இதனால்தான் இந்தியர்களுக்கு வெளிநாட்டில் பிரச்சனை, இப்பவும் புல்வாமா தாக்குதலை பற்றி பேசுவதால் , அவர்கள் சிரிக்கிறார்கள்.


மனிதன்
செப் 29, 2025 16:21

அந்த நபரின் விலாசம் மட்டும்தான் கிடைத்ததா? பெயரில்லையா??


Vijay D Ratnam
செப் 29, 2025 16:03

அமெரிக்கா படிப்பறிவில்லாத காட்டுமிராண்டி பயலுவோ நிறைந்த நாடு. போதை, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ முதல் நியூயார்க், வாஷிங்க்டன் வரை 24 மணி நேயமும் போதை, விபச்சாரம், ரவுடித்தனம் கொடிகட்டி பறக்கிற தேசம்.


SUBRAMANIAN P
செப் 29, 2025 14:12

யோவ் ட்ரம்பே, அமெரிக்கா மக்கள் வசிப்பதற்கு தகுதியில்லாத நாடாக மாறிக்கிட்டு வருது. அதுக்கு முதல்ல ஒரு முடிவு கட்டு.. இந்தியாவை சீண்டாதே.. பாகிஸ்தான் கூட சேராதே..


V K
செப் 29, 2025 14:01

யார் அது அதற்குள் தீபாவளி கொண்டாட்டம்


Nanchilguru
செப் 29, 2025 13:06

நாமளும் அமெரிக்கா அளவிற்கு முன்னேறிட்டு வருகிறோம்


ram
செப் 29, 2025 12:03

இதில் ஐரோப் அமெரிக்கால எப்பப்பார்த்தாலும் இங்கு இருக்கும் சிறுபான்மையினர் நசுக்க படுகிறார்கள் என்று ஓலம் இடுவார்கள் ஆனால் அங்கு இவர்கள் சப்போர்ட் பண்ணும் ஆட்கள் அனைத்தயும் தீ வைத்து கொழுத்திகிறார்கள். கர்மா விடாது.


Kumar Kumzi
செப் 29, 2025 11:46

பயங்கரவாதிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் டொனால்ட் டிரம்ப் சொல்லுறான்யா ஹிஹிஹி


Nathan
செப் 29, 2025 10:30

மிக பாதுகாப்பு நிறைந்த நாட்டில் இவ்வளவு தைரியமாக யார் துப்பாக்கி சூடு நடத்தியது. உலகின் மிக பாதுகாப்பான நாடு இந்தியா வந்தா பார்த்து கவனமாக இருக்க வேண்டும். அதுவும் கஷ்மீர் சென்றால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனெனில் அங்கு அமெரிக்கா நிதி அளித்து வளர்க்கும் தீவிரவாதிகள் ஊடுருவல் செய்து உள்ளனர். எங்கே இருந்து என்று யாரும் கேள்வி கேட்க கூடாது. அது ஒரு மிக பெரிய வல்லரசு அனு ஆயுதம் வைத்து இருக்கிறார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை