உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அயர்லாந்தில் இந்தியர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மீண்டும் ஒரு கொடூர சம்பவம்!

அயர்லாந்தில் இந்தியர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மீண்டும் ஒரு கொடூர சம்பவம்!

டப்ளின்: அயர்லாந்தில் இந்தியர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது இனவெறி காரணமாக நடந்ததா என விசாரணை நடந்து வருகிறது.அயர்லாந்தின் டப்ளினில் 32 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்தோஷ் யாதவைஆறு இளைஞர்கள் தாக்கியதில் அவரது கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சமீபத்தில், டல்லாட்டில் வயதான இந்தியர் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதுடன், அவரது ஆடையை களைந்து கொடுமைப்படுத்தினர். தற்போது மீண்டும் ஒரு இந்தியர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் இனவெறி காரணமாக நடத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.2021ம் ஆண்டு அயர்லாந்துக்கு குடிபெயர்ந்த சந்தோஷ்யாதவ், ஐரிஷ் போலீசாரை அணுகியதாகவும், ஆனால் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: டப்ளின் முழுவதும் இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கும் கடினமாக இருக்கிறது.இளைஞர்கள் தனது கண்ணாடியைப் பறித்து இரக்கமின்றி அடித்தனர். இது ஒரு தூண்டுதலற்ற இனவெறித் தாக்குதல் ஆகும்.அவர்கள் (டீனேஜர்கள்) என் கண்ணாடியைப் பிடுங்கி உடைத்து, பின்னர் என் தலை, முகம், கழுத்து, மார்பு, கைகள் மற்றும் கால்களில் இடைவிடாமல் அடித்ததில் ரத்த காயங்கள் ஏற்பட்டன.அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இந்தக் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக ஓடி, மீண்டும் தாக்கத் துணிகிறார்கள்என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு ஒற்றைக் குழந்தை. நான் மிகவும் இளமையாக இருந்தபோது என் தந்தை இறந்துவிட்டார். எனக்கு இந்தியாவில் என் அம்மா மட்டுமே இருக்கிறார்.எனவே நான் என் சொந்த நாட்டை விட்டு இங்கு வேலை செய்யவும், பங்களிக்கவும், ஏதாவது நல்லதைச் செய்யவும் வந்தேன். ஒவ்வொரு மாதமும் நான் கிட்டத்தட்ட 40% வரி செலுத்துகிறேன், இது நடக்கிறது. இது இனி பாதுகாப்பான இடம் அல்ல. இது மனதளவில் தொந்தரவு தருகிறது, வெறுப்பூட்டுகிறது மற்றும் ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சிட்டுக்குருவி
ஜூலை 31, 2025 21:22

சட்டைபட்டன் அல்லது பாக்கெட்டில் செருகும் பேனா கிளிப்பில் கேமராவோடு மார்க்கெட்டில் வருகின்றது. அதைவாங்கி பொத்திக்கொண்டால் அடையாளம் காண உதவும் .சீனாவில் ஒரு சாவி செயின்மாதிரி அலாரம் ஒலிக்கும் கருவி வருகின்றது .ஆபத்தின்போது அதை முடுக்கினால் போலீஸ் ஷைரன் போல் ஒலிக்கும்.அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம். விலை மிகவும் மலிவுதான் .5 கருவிகள் சுமார் 2000/மட்டுமே பள்ளிசெல்லும் பெண்குழந்தைகளுக்கும் இந்தியாவில் வாங்கி கொடுக்கலாம் .பாதுகாப்புக்கு உதவும்.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 20:56

இந்திய அரசு, அயர்லாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அயர்லாந்து நாட்டு அரசுக்கு கண்டிப்பாக கோரிக்கை வைக்க வேண்டும்.


Ganapathy
ஜூலை 31, 2025 20:17

அம்மாவை தனியாக தவிக்க விட்டு விட்டு பணம்தான் முக்கியம்னு வெளிநாடு போகும் எவனுக்கும் இவனுக்கு கிடைச்ச அடி உதை ஒரு பாடம்.


M Ramachandran
ஜூலை 31, 2025 19:57

அயர்லாந்தின் காவல்துறைய்ய டீன் ஆஜர் மீதி நடவடிக்கையயை எடுக்காது. வெளியில் செல்லும் போது 4 அல்லது 5 அல்லது 6 பேரூடன் செல்ல வேண்டும்.ஏன் எனில் டீன் ஏஜர் வயது வந்ததும் உத்தமர்களாகமாகி விடுகின்றனர். பிறகு ஏன் என்றால் அப்போது காவல் துறை லாடம் கட்டிவிடுவார்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2025 19:02

ஆடு மந்தையை விட்டு வெளியேறி, நரி கூட்டத்தில் இணைந்தாலும், ஒருக்காலும் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை