உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியரால் ஏற்பட்ட விபத்து; லாரி டிரைவர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்தது அமெரிக்கா

இந்தியரால் ஏற்பட்ட விபத்து; லாரி டிரைவர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்தது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: லாரி டிரைவர் வேலைக்காக வழங்கப்பட்ட விசாக்களை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய டிரைவர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி புளோரிடாவில் செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலையில் லாரியை திருப்பியுள்ளார். இதனால், வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்தது இந்தியர் ஹர்ஜிந்தர் சிங் என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 2018ம் ஆண்டு மெக்சிகோவில் இருந்து எல்லையை தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார். கலிபோர்னியாவில் வர்த்தக லாரி டிரைவருக்கான உரிமத்தை பெற்றுள்ளார். இந்த நிலையில், வர்த்தக ரீதியிலான லாரி டிரைவர்களுக்கு வழங்கப்பட்ட பணி விசாவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; வர்த்தக ரீதியிலான லாரி டிரைவர்களுக்கு வழங்கப்பட்ட பணி விசா நிறுத்தி வைக்கப்படுகிறது. அமெரிக்க சாலைகளில் லாரிகளை இயக்கும் வெளிநாட்டு டிரைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அமெரிக்கர்களின் உயிர்களைப் பாதிக்கிறது. மேலும், அமெரிக்க லாரி டிரைவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கச் செய்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அசோகன்
ஆக 22, 2025 14:19

சட்டத்திற்கு புறம்பாக எல்லா நாடுகளில் இருந்தும் அமெரிக்கவிற்கு வருகிறார்கள் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே எடுக்காதது உங்கள் தப்பு..... எதுக்கு இதில் இந்தியாவை இழுகிறது அமெரிக்கா.......


Thangavel
ஆக 22, 2025 12:52

வலதுசாரிகள் இந்தியாவில் சங்கிகள் அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவு மக்கள் தன்னை விட பலசாலியிடம் ....


வாய்மையே வெல்லும்
ஆக 22, 2025 13:57

பெயரில் தங்கம் எழுத்தில் துருப்பிடித்த தகரம். அமெரிக்காவில் நடந்த பஞ்சாபி ஓட்டுனருக்கு சம்பந்தமே இல்லாமல் வலதுசாரி/ சங்கிக்கும் முடிச்சுப்போடுவது மட்டமான காழ்புணர்ச்சியின் கேடுகெட்ட திராவிட கூமுட்டைகளின் பிரதிபலிப்பு ..


vee srikanth
ஆக 22, 2025 12:37

காலிஸ்தான் ஆட்கள் என்ன சொல்றாங்க ?


M Ramachandran
ஆக 22, 2025 12:25

நம்மூரில் அபாயகரமாக கனரக வாகனங்கலை ஓட்டும் ட்ரவார்கள்களை தான் பார்த்திருக்கிறோமெ பொறுப்பற்ற முறையில் மற்ற சாலை உபயோலாகிப்பாராகளை பற்றி கவலை படுவதில்லை. அவர்களால் பலயின்னுயிர்கள் பறிக்க பட்டுள்ளன. அயல்நாடுகளில் சட்ட திட்டங்களை மதித்து ஓட்ட வேண்டும். யில்லயேல் சட்ட மீறல்களுக்கு சரியான தணடனையய உண்டு.நம் நாட்டில் அமுல்படுத்தும் அதிகாரிகள்? அதனால் துளிர் விட்டு போலாகிறது. ஒரு வாகனம் சர்வீஸ் ரோட்டிலிருந்து மெயின் ரோடுக்கு வருவதானால் மெயின் ரோட்டில் வரும் வாகன வேகத்திற்கு வந்தபின் தான் சர்வீஸுரோடில யேற வேண்டும்.இது எந்த கனரக வாகனமும் பின்பற்றுவதில்லை.மற்றும் லாரி பின் புறம் மற்ற வாகனம் போல் மிளிர்வதில்லை.அதுவும் விபத்திற்கு முக்கிய காரணம். தவிர U டர்ன் ஸிம்பல்போட இடத்தில் தான் கவனமாக பார்த்து திருப்ப வேண்டும். அதேபோல் நகரத்திலோட்டும் போனது இந்த மணல்லாரிகள், கல் குவாரி லா ரிகள் ஓடத்துனர்களின் பொறுமையின்மையால் பல உயிர்கள் பறிக்க பட்டுள்ளன. அயல் நட்டில்யிதையெ செய்யும் போது காவல்துறையினர் உடனேயே தண்டனை ஆன்லைன் ஸ்பாட் தண்டனையயை கொடுத்து விடுவார்கள். உயிர்யிழப்பு வாழ்நாள் முழுவதும் வண்டி ஓட்டமுடியாது.


மூர்க்கன்
ஆக 22, 2025 11:49

நக்கல்யா உனக்கு?? அம்மாம் பெரிய அமெரிக்காவை எதிர்க்க என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?? எளிய நாடாக இருந்தால் மட்டுமே ஏறி மிதிப்போம் ?? வலியவனுக்கு வாலாக இருந்து விட்டு சாணக்கிய தந்திரமென்போம் இது கூட தெரியாதா? என்ன??


Sudha
ஆக 22, 2025 11:32

கூகிள் வரைபடத்தால் கூட விபத்து நடக்கின்றன.


Padmasridharan
ஆக 22, 2025 10:42

Quit America முழங்குங்கள் இந்தியர்களே, இந்தியர்களை சங்கிலியால் கட்டி திருப்பியனுப்பி இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாம் என்று இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். மாலத்தீவை சேர்ந்தவர்கள் இந்தியர்களுக்கு எதிராக ஒரு பதிப்பை பதிவிட்டபோது பொங்கியெழுந்தார்களே தற்பொழுது என்னவாயிற்று


Nagarajan D
ஆக 22, 2025 09:10

அமெரிக்காவால் உலகமே நிம்மதி இழந்து தவிக்கிறது.. இவனுங்க ஆயுத விற்பனைக்கு எல்லா நாட்டிலும் கலவரம் செய்ய பணம் தருவது ஒரு தேசத்திற்கும் பக்கத்து தேசத்திற்கும் சண்டை மூட்டுவதை தவிர அமெரிக்கா இது வரை உலகிற்கு என்ன செய்துள்ளது? அமெரிக்கர்களை என்ன செய்யலாம்...


Jack
ஆக 22, 2025 10:03

செய்தி வேற ..கருத்து ஏகாம்பரம் வேற என்னமோ எழுதறார் ..


SANKAR
ஆக 22, 2025 10:23

what US did?40 billion dollar trade surplus annually to us which we use to pay to China for our deficit to start with.30 billion dollars inward remittance by Indians there.giving employment to thousands of Indians.


Raja
ஆக 22, 2025 08:38

தினசரி துப்பாக்கி சுடும் நடக்கிறது அதுக்கு என்ன திர்வு


பிரேம்ஜி
ஆக 22, 2025 08:36

இந்தியர்கள் அவர்கள் டிரைவராக இருந்தாலும் சரி அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி விதிகளை மீறி செயல்பட கங்கணம் கட்டிக் கொண்டவர்கள்! இந்த நாட்டில் தான் தர்மத்தைப் பற்றி நிறைய பேச்சு இருக்கும்.ஆனால் ஒழுக்கம் இருக்காது! வருத்தத்துடன் இதைப் பதிவு செய்யும் நானும் ஒரு பாவப்பட்ட இந்தியனே!


A viswanathan
ஆக 22, 2025 19:47

ஒருசிலரின் செயலால் பலரின் வாழ்க்கை கனவு பாழ் ஆகிறது.மிகவும் வருத்தமாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை