உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; நார்வே மக்கள் வெளியே வர தடை

நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; நார்வே மக்கள் வெளியே வர தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆஸ்லோ: நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசார் சந்தேகப்படும்படியான மூவரை கைது செய்துள்னளர்.பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிப்போர் அச்சமும், பீதியும் அடைந்தனர். நார்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த பகுதியைச் சுற்றி வளைத்த அவர்கள், தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு வெடிக்காமல் இருந்த கையெறி குண்டு ஒன்றை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்தனர்.அங்கு சுற்றித்திரிந்த சந்தேக நபர்கள் மூவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஆஸ்லோ காவல்துறை தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் கூறியதாவது;மத்திய ஆஸ்லோ பகுதியில் குண்டு வெடித்துள்ளது. தேடுதல் வேட்டையின் போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம். சம்பவம் நடந்த இடம், தற்போது முழு காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பிஸ்லெட் ஸ்டேடியத்தில் இருந்து கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். காரில் இருந்து இரு கையெறி குண்டுகளை அவர்கள் வீசிச் சென்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர். விசாரணை தொடர்கிறது.இவ்வாறு காவல்துறை தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் கூறினார்..குண்டுகள் வெடித்த பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம், குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அப்பகுதி மக்களை போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ram
செப் 24, 2025 12:00

ஐரோப்பா ஆட்கள் இங்கு இருக்கும் சிறுபான்மை மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று ஊளையிடுகிறார்கள் இப்போது அனுபவிங்கள். முடிந்தால் இங்கு இருக்கும் தேச நலனில் அக்கறை இல்லாத சிறுபான்மை ஆட்களை உங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்லுங்கள்.


Yaro Oruvan
செப் 24, 2025 10:36

அங்க மோடி இல்ல பாஜக இல்லை .. கஷ்டம்தான்


Yaro Oruvan
செப் 24, 2025 10:33

குண்டு வைக்கிற கும்பல் எதுன்னு உலகத்துக்கே தெரியும்.. உள்ள வுட்டுட்டுட்டு இப்போ ஐரோப்பா முழிக்குது.. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நமக்கு குலத்தொழில் இல்லியா ......


nisar ahmad
செப் 24, 2025 09:50

இந்துத்துவ தீவிரவாதிகள் அங்கும் புகுந்துவிட்டார்களா?


G Mahalingam
செப் 24, 2025 11:17

ஏன் பயங்கரவாததிற்கு மதம் கிடையாது என்று காங்கிரஸ் திமுக சொல்லும். இஸ்லாமியர்கள் ஆன நீங்கள் இந்து தீவிரவாதம் என்று சொல்லலாம். ஆனால் இந்துக்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்ல கூடாது.


Columbus
செப் 24, 2025 09:11

Entire Europe barring Russia will be taken over by islamists and the whites will take refuge in US, Canada, Australia and NZ. Colonizers will become refugees. Serves them right.


பேசும் தமிழன்
செப் 24, 2025 08:54

மார்க்க ஆட்களுக்கு வக்காலத்து வாங்கும் நாடுகள் பிற்காலத்தில் இப்படி தான் ஆபத்தில் சிக்கிக் கொள்ள வாய்புள்ளது.... பிடிப்பவர்கள் மர்ம நபர்களாக தான் இருப்பார்கள்.


Santhosh Kumar
செப் 24, 2025 08:36

இஸ்ரேல் பிரதமர் சாபம் இவ்ளோ சீக்கிரம் பலிக்கும்னு எதிர்பார்க்கவில்லை..


Saamaanyan
செப் 24, 2025 08:09

மூர்க்கன்களை ஆதரித்தால் இதுதான் விளைவு


Saran
செப் 24, 2025 08:05

Norway is a peacefull nation, it has accepted the refuges from the muslim nations like palestinian, Iraq, syria, Afghanistan, etc. Now the country is suffering due to the islamist. The same situation in all the european countries.


Moorthy
செப் 24, 2025 08:04

பாவஸ்தீனம் ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை