உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிபந்தனையை ஏற்றால் அணுசக்தி பேச்சுக்கு தயார்

நிபந்தனையை ஏற்றால் அணுசக்தி பேச்சுக்கு தயார்

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுக்கு தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.அணுசக்தி பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் மறைமுக பேச்சில் ஈடுபட்டு வந்தது. யுரேனியம் செறிவூட்டலை 4 சதவீதத்திற்குள் குறைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. ஏனென்றால் யுரேனியத்தை 90 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டினால் அதை அணு ஆயுதமாக்க முடியும். இதற்கிடையே அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்தது. அதை தொடர்ந்தே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொண்டது. இந்நிலையில், 'எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளித்தால், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்த தயார்' என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !