உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!

மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு மனித உரிமைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது என ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது கூட்டம் சுவிட்ச்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடக்கிறது. 34வது கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது. இதற்கு இந்தியா தரமான பதிலடி கொடுத்தது. அப்போது இந்திய தூதர் முகமது ஹுசைன் பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை கடுமையாக சாடி பேசியதாவது: * சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முடியும்?* மனித உரிமைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது. பாகிஸ்தான் தங்கள் சொந்த மண்ணில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். * பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு தோல்விகளைப் புறக்கணித்து, சர்வதேச மன்றங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு செய்ய மீண்டும், மீண்டும் முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மணிமுருகன்
அக் 02, 2025 23:40

பயங்கரவாதத்தை வளர்த்துக் கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தங்கள் கனிமவளங்கை விற்கும் நாடு மக்கள் நலனை நினைக்காமல் அடுத்த நாட்டு காசுக்கு ஒப்பாரி வைக்கும் நாடு மனித உரிமை என்றால் என்ன எளறு தெரியுமா என்பதே கேள்விக்குறி தமிழகத்தில் உள்ள அயரலாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி பெண்ணியம் என்று கூறிக் கொண்டு வன்கொடுமையை ஏவல்துறை வன்மங்களை பெண்கள் சீரழிப்பு அப்பாவி கொலை பொதுக்கூட்டத்தில் அராஜகம் தன்மானம் அடக்குமுறை எதிர்ப்பு என்று கூறிக்கொண்டு மற்ற கட்சியினரை அடக்குவது மிரட்டுவது ஆனால் பேசுவதோ திரைகதை வசனம் நாடகம் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் அனுமதியோடு ்தை தெரிவிக்கொறேன் தமிழக அனைத்து தரப்பு மக்களுக்கும் தலைவர் ரஜொனிகாந்த்ெசொந்தங்களுக்கும் எந்தக் கட்சியோடும் கூட்டணி கிடையாது யாராவது சைன்னால் நம்பவேண்டாம் எந்தக் கட்சியோடும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் அனுமதி பெற்று சொல்கிறேன் கூட்டணி கிடையாது ஏமாற வேண்டாம்


என்றும் இந்தியன்
அக் 02, 2025 18:03

முஸ்லீம் உரிமைகள் குறித்து பேசவில்லையே முஸ்லீம் அல்லாத மனிதர் உரிமைகள் குறித்து பேசுகின்றனர்.


நிக்கோல்தாம்சன்
அக் 02, 2025 12:50

ஏறிக்கொண்டே இருக்க இது பங்குசந்தையா இல்லை ஆற்றின் வெள்ளப்பெருக்கா? ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கையில் பயன்படுத்திக்கொண்டு இருப்பது தான் சாலச்சிறந்தது நண்பரே. உலகின் அதிக மக்கள்தொகை என்றால் அது முசுலீம் மதம் தான், ஆதாலால் சோசியல் மீடியா வீரர்கள் என்ன சொன்னாலும் தலையாட்ட பக்ரிகள் ரெடியாக உள்ளன


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 02, 2025 12:13

மத்தியகிழக்கு பிரச்சினைகளில் முஸ்லீம் நாடு என்பதாலும், அணுஆயுதம் வைத்துள்ள ஒரே முஸ்லிம் நாடு என்பதாலும் பாகிஸ்தான் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இஸ்ரேலை காப்பாற்ற, ஹமாஸை அழிக்க, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை அமெரிக்கா திரட்டி வருகிறது. எகிப்து, ஜோர்டான், சவுதி, எமிரேட்ஸ், கத்தார் போன்ற அரபு நாடுகளும், துருக்கி, பாகிஸ்தான் நாடுகளும் ஒன்றிணைந்து அமெரிக்காவின் இஸ்ரேல் போர்நிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் உள்ளே வருவதால் இந்தோனேஷியா, மலேஷியா நாடுகளின் மறைமுக ஆதரவும் கிடைக்கிறது. சிரியா, ஈராக், குவைத், ஓமான், பஹ்ரைன் நாடுகள் ஒதுங்கி உள்ளன. ஈரான் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. உலகிலேயே இரண்டாவது பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட இந்தியா காட்சியிலேயே இல்லை. அழையா விருந்தாளியாக அமெரிக்கா கேட்காமலேயே அவர்களின் சமாதான முயற்சிக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது வேடிக்கை. அரசியல் சதுரங்கத்தில் இப்போது இந்தியாவிற்கு இறங்குமுகம்.


Senthoora
அக் 02, 2025 18:05

சொன்னால் எங்கே புரியப்போகுது. உங்களைத்தான் திட்டுவாங்க


Ramesh Sargam
அக் 02, 2025 10:58

மனித உரிமைகள் குறித்து பாக்கிஸ்தான் பேசுவது எப்படி இருக்கு என்றால், ஆடு மழையில் நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம். அதுபோல இருக்கு. உள்ளே விஷம், வெளியே வேஷம், அதுதான் உண்மையான பாக்கிஸ்தான்.


புதிய வீடியோ