உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் நிலைமை மோசம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

காசாவில் நிலைமை மோசம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெனிவா: வடக்கு காசாவில் கடுமையான பஞ்சம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினரிடையே தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போர் காரணமாக ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு காசாவில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஐ.பி.சி., எனப்படும் ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு வகைப்பாட்டு அமைப்பின் அறிக்கையை டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, வடக்கு காசாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முக்கிய உணவுப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மருந்து பொருட்களை சில தினங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் மாத இறுதியில், காசாவிற்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக ஐ.நா.,வின் உலக உணவு திட்டக்குழுவினரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
நவ 10, 2024 06:03

மத வெறி மக்களை எப்படி பாதிக்கிறது. இதனால் மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்கு புத்தி வந்துருமா. வாய்ப்பில்லை, எப்படியோ நல்லது நடக்கட்டும்.


Iniyan
நவ 10, 2024 01:22

இந்த ஐ நா சபையை துறத்தினால் எல்லாம் சரி ஆகி விடும். ஐ நா பயங்கரவாதிகளின் புகலிடம்


rama adhavan
நவ 09, 2024 22:32

வலுச் சண்டைக்கு செல்பவன் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். இப்போ கூவி பயனில்லை. எதிர்காலத்தில் இவர்களை எதிர்த்து இவர் மக்களே போராடுவார்கள். இந்த கருத்து அனைத்து மூர்கர்களுக்கும் தான்.


சுலைமான்
நவ 09, 2024 21:44

தீவிரவாதிகள் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்....


Suresh sridharan
நவ 09, 2024 21:30

சிலர் செய்யும் செயல் காசு கொடுத்து அதற்கு மிகப்பெரிய விலை கொடுத்து பஞ்சம் வாங்கிய மக்கள்.


SUBBU,MADURAI
நவ 09, 2024 21:01

After Israel crushed Hamas and Hezbollah, 57 Muslim countries foreign ministers met in Saudi Arabia Monday and voted upon taking Palestinian refugees on humanitarian grounds. The results are that 46 countries politely voted No 11 countries voted non-politely,


MUTHU
நவ 09, 2024 21:20

இவர்கள் முழு சுயநலவாதிகள். இஸ்ரேல் லெபனான் தெற்கு பகுதியில் முழுதும் ஜியா முஸ்லிம்கள் இருக்கும் பகுதி - தாக்குதல் நடத்துகின்ற பொழுது மத்திய பகுதியில் இருக்கும் கிறிஸ்தவர்களே அடைக்கலம் கொடுத்துள்ளனர். லெபனான் வடபகுதியில் இருக்கும் சன்னி முஸ்லீம் மக்கள் இவர்களை தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று கூறிவிட்டனர். இவர்களின் பரந்த மனம் இவ்வளவே. இப்படித்தான் இவர்களின் மற்ற நாடுகளும். வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகளை அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துவார்கள்


சமீபத்திய செய்தி