உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!

பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எல்சிங்கி: பின்லாந்தில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.எஸ்தோனிய தலைநகர் தாலினில் ஒன்றாகப் புறப்பட்ட 2 ஹெலிகாப்டர்கள் பின்லாந்தின் யூரா விமான நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும், மற்றொன்றில் 3 பேரும் இருந்தனர் என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை