உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேர்தல் நிதி மோசடி வழக்கு; பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைப்பு

தேர்தல் நிதி மோசடி வழக்கு; பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைப்பு

பாரிஸ்: சட்ட விதிகளுக்கு புறம்பாக, தேர்தல் நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைக்கப்பட்டார்.ஐரோப்பிய நாடான பிரான்ஸின் அதிபராக 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி, 70. இவர், 2007ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு அப்போதைய லிபியா அதிபர் கடாபியிடமிருந்து நிதி பெற்றதாகவும், அதற்காக வேறு சிலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசியல் நோக்கம் கொண்டவை என்று சர்கோஸி மறுத்தார்.ஆனால், கடாபியிடம் சர்கோஸி தரப்பினர் பணம் பெற்றதை, கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் உறுதி செய்தார். இது தொடர்பான வழக்கு பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரித்த நீதிபதி, முன்னாள் அதிபர் சர்கோஸி மீதான சதித்திட்ட குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.இந்நிலையில், இன்று (அக்டோபர் 21) பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் நிகோலஸ் சர்கோஸி அடைக்கப் பட்டார். அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இத்தகைய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதற்கிடையே, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து நிகோலஸ் சர்கோஸி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

நிக்கோல்தாம்சன்
அக் 22, 2025 08:33

இதுபோன்றதொரு நிலை தமிழ்நாட்டு சர்வாதிகாரியின் குடும்பத்தில் நிகழுமா


Mani . V
அக் 22, 2025 04:43

இவர் போன்றவர்கள், ஊழல் செய்து மாட்டிக்காமல் தப்பிப்பது எப்படி? என்று தமிழ்நாட்டுக்கு வந்து ஐந்து கட்சி அமாவாசை மற்றும் திமுக வினரிடம் பாலபாடம் படிக்க வேண்டும்.


Ramesh Sargam
அக் 22, 2025 01:17

தேர்தல் நேரத்தில் பல பொய் வாக்குதிகள் கொடுத்து, தேர்தலில் வென்று ஆட்சி புரிவதும் ஒரு பெரிய குற்றம். அதற்கு ஆயுள்தண்டனை கொடுக்கவேண்டும்.


THOMAS David
அக் 22, 2025 00:08

இந்த நிகழ்ச்சி எல்லா நாட்டுக்கும் ஒரு முன்மாதிரி சட்டம் தன் கடமையை செய்ய ஏற்ற சட்டம் இங்கு இருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொது பாராட்டத்தக்கது.


Ramesh Sargam
அக் 22, 2025 00:03

இதுபோன்று தீர்ப்புக்கள் இந்தியாவில் வழங்கப்பட்டால், இன்று ஆட்சியில் உள்ள பல அரசியல்வாதிகள் சிறையில் அடைபட்டிருப்பார்கள். சிறைகள் நிரம்பியிருக்கும். இந்தியாவில் இப்பொழுது உள்ள சட்ட புத்தகம் திருத்தி எழுதப்படவேண்டும், நாட்டில் ஊழலை ஒழிக்கவேண்டுமென்றால்.


Raj S
அக் 21, 2025 23:01

நம்ம கட்டுமரம் இருந்தாலாவது அவர் பாசறைக்கு போய் திருட்டு தனம் எப்படி செய்யறதுன்னு மாட்டிக்காமனு கத்துக்கலாம்


சிட்டுக்குருவி
அக் 21, 2025 22:36

ஒரு முக்கியமான நிகழ்வு மக்களுக்கு பதிய வேண்டியது .நல்ல படித்தவர்களிடையே கூட இருக்கும் மனநிலை என்னவென்றால் நான் ஊழல் செய்யவில்லை .மற்றவர்கள் செய்தால் செய்துப்போகட்டும் என்பதுதான் .ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகின்றது .நமது மாண்புமிகு மந்திரி தியாகராஜன் ஆனந்தவிகடன் ஜௌர்னலிசம் மாணவர்கள் மத்தியில் பேசும்போது தேர்தலின் போது நான் வோட்டுக்கு லன்ஜம் கொடுக்கவில்லை .எனக்கு எதிராக போட்டியிட்டவர் கொடுத்தார் .அதை தடுக்க முயன்றேன் ஆனல் மக்கள் நீங்கள் கொடுக்கவில்லையென்றால் பரவாயில்லை அவர் கொடுப்பதை ஏன் தடுகிண்றீர்கள் என்று கேட்டனர் .அதனால் அவர் கொடுத்தால் கொடுத்துபோகட்டும் என்று விட்டுவிட்டேன் என்று கூறுகின்றார் .இது எதை காட்டுகின்றது என்றால் படித்தவர்கிளிடேயேயும் குற்றம் செயபவர்கள் செய்துப்போகட்டும் நான் செய்யவில்லை என்ற மனபோக்கு .இது மிகவும் ஆபத்தானது .அதனால் தான் வோட்டுக்கு லஞ்சம் கொடுப்பது நடந்துகொண்டே இருக்கின்றது .ஜெயித்தவர்கள் கொடுத்ததை எப்படி இரட்டிப்பாக வசூலிப்பது என்று எல்லாவித ஊழலிலும் ஈடுபடுகின்றார்கள் .நாட்டில் ஊழலும் குறைந்தபாடில்லை .வரும் தேர்தலில் மக்கள் இதற்க்கு முடிவுகட்டவேண்டும் .


சிட்டுக்குருவி
அக் 21, 2025 21:50

நம்ம நாட்டு சட்டத்திலும் தேர்தலில் வோட்டுக்கு லஞ்சம் கொடுப்பது சிறை தண்டனை குற்றம்தான் .ஆனால் யாரும் வழக்கு தொடுப்பதில்லை .20 ரூபாய் நோட்டுல கையொப்பமிட்டு கொடுத்தபோதும் யாரும் பூனைக்கு மணிக்கட்ட முன்வரவில்லை .மக்கள் மத்தியில் தற்போதுதான் விழிப்புணர்வு ஏற்பட துவங்கியிருக்கின்றது .இளைஞ்சர்கள் விழிப்புடன் இருந்து அடுத்த தேர்தலில் லஞ்சம் கொடுப்பவர்களை சிறைக்கு அனுப்ப தயாராகவேண்டும் .


Oviya vijay
அக் 21, 2025 21:34

கொண்டை பத்திரம்...முதல்ல உங்க மாடல் தான் உள்ள போறாங்க...


RAMESH KUMAR R V
அக் 21, 2025 20:59

பழைய சட்டங்கள் கடுமையாகின்றன இன்னும் கடுமையாகைப்படவேண்டும்.


சமீபத்திய செய்தி