உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு கடையில் காவலாளியாக இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடையில் அவர் பணியில் இருந்த போது, கடைக்கு வெளியே ஒருவர் இயற்கை உபாதை காரணமாக சிறுநீர் கழித்துள்ளார்.இதைக் கண்ட கபில், அந்த நபரை தடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சிறுநீர் கழித்த நபர், தாம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கபிலை சரமாரியாக சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்த கபில் உயிரிழந்தார்.சுட்டுக்கொல்லப்பட்ட கபில் 3 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர் என தெரிகிறது. தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அன்றிலிருந்து அமெரிக்காவில் வசித்து வரும் கபிலுக்கு சொந்த ஊரில் பெற்றோரும், 2 சகோதரிகளும் உள்ளனர்.கபில் சுட்டுக்கொல்லப்பட்ட விவரம் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வர மத்திய அரசும், ஹரியானா மாநில அரசும் உதவவேண்டும் என்று குடும்பத்தினரும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Subramanian
செப் 09, 2025 19:03

ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Rathna
செப் 09, 2025 16:54

வெளி நாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு தனது ஒரே ஒரு உயிரை விடுவதில் என்ன லாபம். அமெரிக்காவில் 60% பேர் மன நோயாளிகள். இதுதான் உண்மை.


SUBRAMANIAN P
செப் 09, 2025 14:38

இந்தியர்களை கழிச்சுக்கட்ட ட்ரம்ப் அனுப்பிய ஆளா கூட இருக்கும் .. வம்பிழுக்க எதாவது காரணம் வேண்டும்..


அப்பாவி
செப் 09, 2025 13:21

அமெரிக்காவில் ரூல் நம்பர் 1. முன்பின் தெரியாதவன் கிட்டே டைரக்டா எதுவும் வெச்சுக்காதே. எதுவா இருந்தாலும் 911 க்கு போன் பண்ணு. முதலாளிக்கு தகவல் கொடு.


SakthiBahrain
செப் 09, 2025 16:40

அது படிச்சிட்டு சட்டப்படி interview முறையில் போனவனுக்குத்தான் தெரியும்...இப்படி அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர் என்றல்... தாய் நாட்டில் எப்படி தானே தட்டி கேப்பாரோ அப்படியே கேட்டுவிட்டார் அவன் சுட்டுட்டான் ..ஏன்யென்றால் அமெரிக்காவுக்கு போக இன்டெர்வியூல நீங்கள் கூறியது போல சொல்லிக்கொடுப்பார்கள் எந்த ப்ரிச்சனை என்றல் 911 கால் பண்ணவேண்டும் என்று... சட்ட விரோதமாக சென்றவருக்கு எப்படி தெரியும்...? அதுதுதான் முன்பின் தெரியாதவன் கிட்டே வச்சிக்கிட்டான் அவன் சுட்டுவிட்டான்... ரிப்... ஆன்ம சாந்தி அடையட்டும் ...


xyzabc
செப் 09, 2025 11:12

young soul. devastating to read. RIP. may God give strength to his family.


Barakat Ali
செப் 09, 2025 10:42

நமது இந்த தலைமுறையினருக்குத் தெரியாது.. முந்தைய தலைமுறையினர் முகலாயர்களை, வெள்ளைக்காரர்களை மிலேச்சர்கள் என்றே அழைத்தனர்... "மிலேச்சர்கள்" என்ற சொல், பொதுவாக பண்பாடற்ற, நாகரிகமடையாத மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும் ....


மாபாதகன்
செப் 19, 2025 10:10

மதம் என்ற போதையில் சக மனிதனை பற்றி தாழ்வாக நினைப்பவன் பண்பாடு உள்ளவனா? பிறப்பின் அடிப்படையில் வர்ண பேதம் கற்பிப்பவன் பண்பாடு உள்ளவனா? தனது மதமே உயர்ந்தது மற்றோரெல்லாம் பணத்திற்காவும் உயிருக்கவாவும் பயந்து மதம் மாறி விட்டார்கள் என்று வாதிடுபவன் பண்பாடு உள்ளவனா? பெண்கள் கல்வி கற்று முன்னேறாமல் இருக்க தடை செய்பவன் பண்பாடு உள்ளவனா? பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாமல் பல நாடுகளில் அவமானப்படும் இவர்கள் பண்பாடு பற்றி எல்லாம் பேசலாமா?


Raj
செப் 09, 2025 10:24

அதிர்ச்சி சம்பவம் கிடையாது, துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாடு, எத்தனை இந்திய உயிர்களை கொன்று இருப்பார்கள்


Haja Kuthubdeen
செப் 09, 2025 09:55

வெளிநாட்டு வாழ்க்கை இங்கே நாம் நினைப்பது போல சுகமான வாழ்க்கை இல்லை. மனைவி மக்களை பிரிந்து குடும்பத்திற்காக பல இன்னல்களையும் தாங்கி ஒருவிதமான வாழ்க்கை. நம்நாடு போல் எதிலும் சுதந்திரம் கிடையாது. இங்கே பத்து பைசா பாக்கெட்டில் இல்லாதவன் கூட மோடி.. ராகுல்.. அம்பானி அதானிய வாய்க்கு வந்தபடி திட்டுவான். வெளிநாடுகளில் சூழ்நிலைக்கு தகுந்து வாழ பழகிக்கனும். உள்ளூர் மக்களிடம் போய் நாம் மிக கவனமா இருக்கனும். அரசு முதல் அங்குள்ள மக்கள் வரை உள்ளூர்காரர்களையே ஆதரிப்பார்கள். இறந்த நபருக்கு அனுதாபம்.. இரங்களை தெரிவிக்கிறேன்.


Anand
செப் 09, 2025 10:24

மிகச்சரியான கருத்து...


கூத்தாடி வாக்கியம்
செப் 09, 2025 09:28

முட்டா பசங்க அதிகம் உள்ள நாடு பட்டியல்ல இவன போடு.


தமிழ் மைந்தன்
செப் 09, 2025 09:13

தமிழகத்திலும் பெண்களுக்கு துப்பாக்கி வழங்கலாம் இந்த ஊழல் கஞ்சா ரவுடி மாடல் அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு


Anand
செப் 09, 2025 10:26

உங்கள் கருத்துக்கு சரியான பதில் கமெண்டில் கொடுத்துள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை