உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ லவ் பாகிஸ்தான் அதிபர் டிரம்ப் அடித்த பல்டி

ஐ லவ் பாகிஸ்தான் அதிபர் டிரம்ப் அடித்த பல்டி

வாஷிங்டன்: தன் முந்தைய பதவிக்காலத்தின்போது, பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு, ஏமாற்றக் கூடிய நாடு என்று விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது, 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று கூறியுள்ளார்.பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. நான்கு நாட்களில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. அப்போது தன் முயற்சியால்தான், இரு நாடுகளும் மோதலை நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.எனினும், பாகிஸ்தான் அரசோ டிரம்ப் கூறியதை ஆமோதித்தது. மேலும், போரை நிறுத்துவதற்கு காரணமான அவருக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் கூறியது.இதற்கிடையே, மேற்காசியாவில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் துவங்கியுள்ளது. இதில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தது.மேற்காசியாவில், ஈரான் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அண்டை நாடான பாகிஸ்தானையும் தன் வழிக்கு கொண்டு வருவதற்காகவே, அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் ஆசிப் முனிருக்கு, டிரம்ப் விருந்தளித்ததாக கூறப்படுகிறது.விருந்துக்குப் பின் பேட்டியளித்த டிரம்ப், இதை உறுதிபடுத்தும் வகையில் கூறியுள்ளதாவது:இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள். ஆனால், போர் நீடிக்காமல் இருக்க இரு நாடுகளும் முன்வந்தன. அதை பாராட்டவே பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு விருந்து அளித்தேன்.அந்தப் போரை நான் தான் நிறுத்தினேன்; ஐ லவ் பாகிஸ்தான். அதுபோல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிகச்சிறந்த நபர். அவருடன் நேற்றுதான் பேசினேன். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.ஈரான் குறித்து மற்ற யாரையும்விட பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். ஈரானில் நடப்பது குறித்து பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி இல்லை. அதற்காக அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரானவர்கள் என்று கூற மாட்டேன்.இரண்டு நாடுகள் குறித்தும் பாகிஸ்தானுக்கு தெரியும். ஈரான் குறித்து அதற்கு நன்கு தெரியும். அங்கு நடப்பது குறித்து நம்மைப் போலவே, பாகிஸ்தானும் அதிருப்தியில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேற்காசியாவில், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. இருப்பினும் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பதை தடுக்கவே, இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் இதற்கு முன்பும் செயல்பட்டுள்ளது. தற்போது தேவைப்பட்டால், பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம் என்பதும் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.கடந்த வாரம் அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் பங்கேற்பதற்கு ஆசிம் முனிர் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதை அமெரிக்கா மறுத்தது. இந்நிலையில், ஆசிம் முனிருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விருந்து அளித்துள்ளார்.பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட, பிரதமர், அதிபரைவிட ராணுவ தளபதிக்கே அதிக அதிகாரம் உள்ளது என்பதை இந்த விருந்து சுட்டிக்காட்டியுள்ளது.

நோபல் பரிசுக்கு குறி?

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஒருவருக்கு அமெரிக்க அதிபர் விருந்து வைப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன், பாகிஸ்தான் ராணுவ தளபதிகளாக இருந்த அயூப் கான், ஜியா உல் ஹக், பர்வேஸ் முஷாரப் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர்கள் விருந்து கொடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் பாகிஸ்தான் அதிபர்களாக இருந்தபோது, விருந்து வழங்கப்பட்டுள்ளது.ஆசிப் முனிருக்கு டிரம்ப் விருந்து அளித்ததற்கு, மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதை, ஆசிப் முனிரே குறிப்பிட்டுள்ளார். 'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்' என, அவர் கூறியுள்ளார்.அரசுமுறை பயணமாக, ஆசிப் முனிர் அமெரிக்காவில் இருந்துள்ளார். இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, வாஷிங்டனுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.ஒரே நேரத்தில் மோடி மற்றும் ஆசிப் முனிருடன் இணைந்து சந்திக்க டிரம்ப் திட்டமிட்டிருந்தார். இதன் வாயிலாக இரு நாட்டுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த முயன்றதற்காக, அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர்களாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் - 1906; வூட்ரோ வில்சன் - 1919; ஜிம்மி கார்டர் - 2002; பராக் ஒபாமா - 2009ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ளனர். துணை அதிபராக இருந்த அல் கோர் - 2007ல் பரிசு பெற்றார்.

போரை நான் நிறுத்தவில்லை

முதல் முறையாக ஒப்புதல்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ம் தேதி, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் படைகள் தாக்கி அழித்தன. இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. நான்கு நாட்கள் நீடித்த நிலையில், 10ம் தேதி மோதலை நிறுத்திக்கொள்ள இருதரப்பும் முன்வந்தன.ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் இதை அறிவித்தார். தன் முயற்சியால்தான், போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறினார்.இதை, மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நேற்று முன்தினம், தன்னுடன் தொலைபேசியில் பேசிய டிரம்பிடமும் இதை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.ஆனால், தன்னால் தான் போர் நின்றதாக, 15 முறை டிரம்ப் கூறியுள்ளார். நேற்று காலையிலும் இதை கூறியிருந்தார்.இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில், டிரம்ப் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி இங்கு வருவதாக இருந்தது. அவருடன் பேசினேன்; ஆசிப் முனிருடனும் பேசினேன். இரண்டு மிகச்சிறந்த தலைவர்கள் மற்றும் அவர்களுடைய சிறந்த அதிகாரிகள், நல்ல ஒரு முடிவை எடுத்தனர்.இல்லாவிட்டால், அணு ஆயுதப்போர் நடந்திருக்கும். அதை தவிர்க்கும் வகையில், மோதலை நிறுத்த இரு தலைவர்களும் முடிவு எடுத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இருநாட்டுத் தலைவர்களே போரை நிறுத்த முடிவு செய்துள்ளதை, டிரம்ப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

M. PALANIAPPAN, KERALA
ஜூன் 21, 2025 10:56

அமெரிக்கா ஜனாதிபதி ஆக இருப்பதற்கு டிரம்ப்க்கு எந்த தகுதியும் இல்லை நேற்று ஒன்று சொல்கிறார் இன்று ஒன்று சொல்கிறார் , பேசும் வார்த்தையில் உறுதி இல்லை உள்நாட்டில் நடைபெறும் கலகத்தை அடக்க முடியாத டிரம்ப்க்கு உலக சமாதானம் செய்ய என்ன தகுதி உள்ளது, இதில் நோபல் ஒரு கேடு


Lion Drsekar
ஜூன் 21, 2025 09:33

அரசியல் என்பது உலகம் முழுவதும் ஒரேநிலைப்பாட்டில்தான் இருக்கிறது பாராட்டுக்கள், நம் இருநாட்டு உருவான அனைத்துக்கட்சிகளும் அன்றைய காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது , ஆனால் இன்று தேர்தல் என்று வந்தவுடன் அவர்களுடனேயே கூட்டு . மொத்தத்தில் மக்கள் ஒன்றாகக்கூடாது என்பதில் கட்சிகள் ஒற்றுமையாக இருந்து மக்களாட்சி, மக்களுக்காக என்று கூறிக்கொண்டு அவர்கள் ஒருவருக்கொருவர் அடிப்பது போல் அடித்துக்கொள்வதும், அரவனைத்துச் செல்வதும் முழுநேர தோளில் , அதே நேரத்தில் இவர்களது தவறான இயல்பாடுகளால் போர், ஜாதிச்சண்டை, இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரமே சீரழியும் நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது, ஆகவே இவர்கள் மக்கள் பிரநிதிகளாக செயல்பட்டு, உலக மக்கள் னைவருமே ஏதோ ஒரு வகையில் நாட்டின் வளர்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது, இவர்களுக்கு எல்லாம் வல்ல இயற்க்கை நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும், வந்தே மாதரம்


SP
ஜூன் 20, 2025 14:24

இப்படி ஒரு கோமாளியை, அமெரிக்க மக்கள் அதிபராக தேர்ந்தெடுத்ததற்கு வெட்கப்பட வேண்டும் இவரை பதவி நீக்கம் செய்வதற்கு அங்குள்ள நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


R K Raman
ஜூன் 20, 2025 10:24

இவனுங்க கிட்டயும் ஏதாவது அன்பளிப்பு கிடைக்குமோ


sankaranarayanan
ஜூன் 20, 2025 09:55

தன் முந்தைய பதவிக்காலத்தின்போது, பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு, ஏமாற்றக் கூடிய நாடு என்று விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது, ஐ லவ் பாகிஸ்தான் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் தளபதிக்கு டிரம்பு மாளிகையில் விருந்து அளித்துள்ளார் இதைவிட ஒரு கபட நாடகத்தை எந்த அரசியல்வாதியும் செய்ய முடியாது சமீபதில்தான் பஹ்ல்காமில் 26-பேர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று தெரிந்தும் ஒரு பெரிய நாட்டின் அதிபதி ஒரு சிறிய தீவிரவாதிகள் நாட்டின் படை தளபதிக்கு விருந்தளித்திருப்பது கேலிக்கூத்தாகவே உள்ளது இவர் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கே அருகதை அற்றவர் தீவிர வாதிகளை ஊக்கிவைப்பராகிவிட்டார் இது காலப்போக்கில் அவரையே கொன்றுவிடும் தாக்கும் பாம்பிற்கு பால் ஊற்றி வளர்க்கிறார் சும்மா விடுமா


vbs manian
ஜூன் 20, 2025 08:12

நோபல் பரிசு பரிந்துரைக்கு செய்யும் கைம்மாறு.


சிவன்
ஜூன் 20, 2025 06:49

மத்தியஸ்தம் வேணாம்னு சொன்னீங்க. அவிங்களோட கொஞ்சிக் குலாவ வாணாம்னு சொன்னீங்களா?


Kennedy
ஜூன் 20, 2025 06:45

The American citizens should keep their heads down for elected this koomuttai as their president.


R K Raman
ஜூன் 20, 2025 10:27

True but KH would have been worse for us, like Biden helping Pakkisthan to get aid and loans and sell them arms to use against India. Plus he played a secret role in Bdesh issue also. They dont want India to become a super power


Sundar R
ஜூன் 20, 2025 05:35

Pakistan will become a scapegoat. Now ISIS, Afghan Talibans, TetP all shite militia groups viz Houthis, Hamas, Hezbollah etc etc etc may decimate Pakistan, immediately after this Iran-Israel war for siding with USA.


RAJ
ஜூன் 20, 2025 05:13

டிரம்ப் அமெரிக்கா அதிபர் என்ற பதவிக்கு ஒரு அசிங்கம்.. ..


சமீபத்திய செய்தி