உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும்: டிரம்ப்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரி எச்சரிக்கை

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும்: டிரம்ப்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியாவை நகர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது,'' என அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டிலும் சிலர் டிரம்ப்பின் நடவடிக்கையை விமர்சிக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zq6i4s53&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில் அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்பார்த்தது போலவே இந்தியா எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. சீனாவுக்கு வரி விதிக்கவில்லை என்ற ரீதியில் இந்தியா பார்க்கிறது. ரஷ்யாவை பாதிக்க வேண்டும் என்ற வகையில், அமெரிக்கா விதித்த வரியால், ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும். சீனா மீதான டிரம்ப்பின் கருணையும், இந்தியா மீதான கடுமையான வரிகளும், ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்க பல தசாப்தங்களாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். சீனாவுக்கு அதிக சலுகை காட்டுவது மிகப்பெரிய தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

யார் இவர்

ஜான் போல்டன், அமெரிக்க அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். குடியரசு கட்சியை சேர்ந்த இவர், அரசியல் விமர்சகராகவும் உள்ளார். 2005 முதல் 2006 வரை ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதியாகவும், 2018 முதல் 2019 வரை டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகவும் பதவி வகித்துள்ளார். அமெரிக்கா வெளியுறவு கொள்கை நிபுணரும், முன்னாள் வர்த்தக அதிகாரியுமான கிறிஸ்டோபர் படில்லா கூறுகையில், டிரம்ப்பின் வரி விதிப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வரி விதிப்பு எப்போதும் இந்தியாவின் நினைவில் இருப்பதுடன், அமெரிக்கா நம்பகத்தகுந்த கூட்டாளியா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும் எனக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Shivakumar
ஆக 10, 2025 04:39

அந்த ட்ரம்ப் என்ன சொன்னாலும் புரியாது. கள்ளு குடித்த குரங்கு போல இருக்கு அவர் மனநிலை.


GANDHI K
ஆக 09, 2025 19:55

ஒரு கோமாளியிடம் சிக்கி கொண்டு அமெரிக்கா சீரழிந்து சின்னாபின்னமாக போகிறது


Subburamu Krishnasamy
ஆக 09, 2025 18:52

Trump is destroying USA economy for his personal family business interests The worst selfish leader. driving the country in reverse gear


Ramesh Sargam
ஆக 09, 2025 18:18

ஆல்மோஸ்ட் நெருங்கிட்டாங்க. இன்னும் என்னா பாக்கி? நேரில் சந்திக்கும்போது கட்டி அணைப்பது தான் பாக்கி. ரஷ்யா, சீனா, இந்தியா நெருக்கத்திற்கு மறைமுகமாக உதவி புரிந்த அந்த டிரம்புக்கு இந்த மூன்று நாடுகளும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. போகட்டும் ட்ரம்பின் இந்த செயலுக்கு நோபல் பரிசு கொடுக்க சொல்லிடலாமா?


naranam
ஆக 09, 2025 17:40

அமெரிக்கா என்றுமே நம்பத் தகுந்த கூட்டாளியாக இந்தியாவிற்காக இருந்தது கிடையாது. அதுவும் டிரம்ப் போன்ற நம்பிக்கை துரோகியை நம்புவது மிகவும் ஆபத்தில் கொண்டு போய் விடும் என்று பிரதமர் மோடி தற்போது உணர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது..


V RAMASWAMY
ஆக 09, 2025 17:27

எல்லாம் நன்மைக்கே. நமக்கு எவரும் எதிரி கிடையாது, ஆனால் நம்மை எதிரியாகக் கருதி கெடுதல் விளைவிப்பவர்களுக்கு நாம் தீமை செய்யமாட்டோம், ஆனால் கண்டிப்பாக அவர்களுக்கு நன்மை செய்ய தேவையே இல்லை. இதற்காக நம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுடன், அவர்கள் மீது பரஸ்பரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், சேர்ந்துகொள்வதில் தப்பில்லை. அந்த வகையில், இந்திய, சீன, ரஷ்யா, இன்னும் சில ஆசிய நாடுகளையும் சேர்த்துக்கொண்டு அமெரிக்கர்களின் இறுமாப்பையும் அடாவடித்தனையும் முறியடிக்கவேண்டும். பாகிஸ்தான் அமெரிக்கர்களுடன் சேர்த்துக்கொண்டால், சீன ரஷ்ய கூட்டு பாகிஸ்தானையும் புறக்கணிக்கவேண்டும்.