உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இனப்படுகொலை செய்யும் நாடு: ஐநாவில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

இனப்படுகொலை செய்யும் நாடு: ஐநாவில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ''இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, உலகை திசை திருப்ப மட்டுமே முயற்சி செய்யும். உலகம் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது'' என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையாக சாடினார்.ஐநாவில் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்ற ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பங்கேற்று, பாகிஸ்தானின் செயல்பாடுகளை கடுமையாக சாடி பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=64a5a3pv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும், துரதிர்ஷ்டவசமாக, எனது நாட்டிற்கு எதிராக பாகிஸ்தானின் மாயையான கூச்சலைக் கேட்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக காஷ்மீர் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர். இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்து இருக்கிறோம். தனது சொந்த மக்களை குண்டுவீசி, திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் பாகிஸ்தான், தவறான பொய் பிரசாரம் மூலம் உலகை திசைதிருப்ப மட்டுமே முயற்சிக்க முடியும்.1971ல் தனது சொந்த ராணுவத்தால் 4 லட்சம் பெண்களை இனப்படுகொலை செய்யும் திட்டமிட்ட பிரசாரத்தை அங்கீகரித்த நாடு. உலகம் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு பர்வதனேனி ஹரிஷ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Senthoora
அக் 07, 2025 12:19

எங்குபோனாலும் பாகிஸ்தான் புராணம் தானா, காசாவில், பக்கத்து நாடு இலங்கையில் நடந்ததே கண்ணுக்குத்தெரியலையா.


பேசும் தமிழன்
அக் 07, 2025 11:16

சிறுபான்மையினரை.... அழித்து ஒழித்து... இனப்படுகொலை செய்யும் நாடு பா‌கி‌ஸ்தா‌ன்.... அந்த நாடு சுதந்திரம் அடைந்த போது அங்கு இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை மற்றும் இப்போது இருக்கும் இந்து.. சீக்கியர்.... கிறிஸ்தவர்.. பார்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை தெரியும். இனப்படுகொலை செய்வது யார் என்று உண்மை தெரிந்து விடும்.


Mohan
அக் 07, 2025 09:28

ஐ நா ஒரு பள்ளு புடுங்கின பாம்பு ..என்னதான் இந்தியா கதறி அழுதாலும் பிரண்டாலும் அங்க ஒன்னும் நடக்காது ...நமக்கென்று குரல் குடுக்க இவ்வுலகில் ஏதும் இல்லை ரஷ்யா ,இஸ்ரேல் தவிர ...அமெரிக்கா சீனா சொன்ன மாதிரித்தான் ஆடுவாங்க ... இந்த ஐ நா ...அதனால உலக அரங்குல அவனுக்கு தான் சப்போர்ட் ஜாஸ்தி ஏன்னா அவுங்கதான் ஆட்டுவிக்குறாங்க ...முஸ்லீம் நாடுகள், அமெரிக்கா, சீனா ...போன்ற நாடுகள்


Sahadevan
அக் 07, 2025 11:27

மிகவும் சரி. சொன்னதையே எ்ல்லா வருடமும் சொல்லிக்கொண்டே உள்ளோம். அதிகாரம் இல்லாத இடத்தில் என்ன கூறினாலும் மதிப்பு இல்லை. ஐநா நிரந்தர பாதுகாப்பு சபையில் உறுப்பினர் ஆனால் மட்டுமே அதில் தொடர வேண்டும். அது மோடி ஆட்சியில் இல்லை என்றால் என்றும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை